Pages

Tuesday, January 13, 2015

கடன் தொல்லை குறைய எளிய பரிகாரம்

நம்மில் பலர் கடன் வாங்காமல் வாழ்க்கை ஓட்ட முடியாத நிலையில் உள்ளோம். வாகனம்வாங்க, வீடுவாங்க, அவசர தேவைக்கு, மருத்துவ செலவிற்கு, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஒழுங்காக திருப்பி செலுத்துபவருக்கு மேலும் கடன்தார வங்கிகளும், தனியார் நிதி நிறுவனமும் தயாராக உள்ளது. ஆனால் திருப்பி செலுத்த முடியாமல் கடனுக்கு கடன், வட்டிக்கு வட்டி என வாழும் அன்பர்களுக்கு இந்த பதிவு.
கடன் தொல்லையில் இருந்து விடுபட ஜோதிட சாஸ்திரத்தில் சில பரிகாரங்கள் உள்ளது.
1. அஸ்வினி அல்லது அனுஷம் நட்சத்திரத்தில் உங்கள் கடன் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்திட கடன் சுமை படிப்படியாக குறையும்.
2. செவ்வாய்கிழமை செவ்வாய் ஹோரையில் அசல் தொகையில் ஒரு பகுதி திருப்பித்தர கடன் சுமை படிப்படியாக குறையும்.
3. ஞாயிற்றுக்கிழமையுடன் கூடிய சதுர்த்தி திதியிலும், சனிக்கிழமையுடன் கூடிய சதுர்த்தி திதியிலும், செவ்வாய்கிழமையுடன் கூடிய நவமி திதியிலும், குளிகை நேரத்தில் அசல் தொகையில் ஒரு பகுதி திருப்பித்தர கடன் சுமை படிப்படியாக குறையும்.
4. கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள். சஷ்டி திதியன்று முருகன் ஸ்தலங்களில் தொடர்ந்து கந்த சஷ்டி படித்துவர கடன் பிரச்சனை தீரும்.
ஓம்ஸ்ரீம் கம்சௌம்யாய கணபதியே வரவரத சர்வ ஜனம்மே வசமானய் ஸ்வாஹா.. ஹிருதயாதி ந்யாஸ நிக்விமோக.. இந்த மந்திரத்தை 108 முறையோ அல்லது ஆதற்கு மேலோ நம்பிக்கை சிரத்தையுடன் ஜெபித்து வந்தால் ருணதோஷம் நீங்கும்.

No comments:

Post a Comment