Pages

Sunday, July 13, 2014

திருட்டு குணம் வாயாடி

ஜாதகத்தில் மிதுன ராசியில் சுக்கிரன் இருந்தால் பொதுவாக வாதாடகூடியவராக இருப்பர்கள் ....வாயாடி என்று சொல்லும் அளவு அவரகளது பேச்சு இருக்கும்....
ஜாதகத்தில் செவ்வாய் புதன் சேர்க்கை இருந்தால் கல்வி கற்பதில் தடைகளை ஏற்படுத்தி விடும் என்பதோடு திருட்டு குணத்தையும் தந்து விடும்...

Saturday, July 12, 2014

அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள்,கடன்,எதிரிகள் தொல்லை ,முன் வினை, பித்ரு சாபம், கர்ம வினைகள் நீங்க பரிகாரம்

1) தினசரி சுத்தமான பசு நெய்யினால் இஷ்ட தெய்வம் அல்லது குல தெய்வத்திற்க்கு விளக்கு

(2) தினசரி பசுவிற்கு சிறிது உணவு

(3) தினசரி மதியம் 12 மணிக்கு மேல் காக்காய்க்கு சிறிது உணவு

(4) தினசரி எதுனும் ஒருவருக்கு சிறிது உணவோ அல்லது குழந்தைகளுக்கு இனிப்பு சிறிதேனும் வழங்குதல்

(5) தினசரி சிறிது சர்க்கரை எறும்புகளுக்கு

மேற்கண்டவை மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரங்களாக நமது முன்னோர்கள் வழங்கியவை ஆகும்

தீபம் ஏற்ற வேண்டிய முறைகள்


நாம் அன்றாடம் காலையும் – மாலையும் பூசை அறையில் தீபம் ஏற்றி ஆண்டவனை வணங்குகி றோம். தினம் தீபம் ஏற்றும் நம் மில் எத்தனை பேருக்குத் தீபம் ஏற்ற வேண்டிய முறைகள் பற்றி யும், அவை தரும் பலன்கள் பற்றி யும் தெரியும் ?

தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட் டுமே ஏற்றினால் நம்மைத் தொட ரும் துன்பங்கள் நீங்குவதுடன் மக் களிடையே நன் மதிப்பும் கிடை க்கும்.

மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட் டும் ஏற்றினால் கோதரர் களிடையே ஒற்றுமை ஏற்படும்; கடன் தொல் லைகள் விலகும். சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசை யில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும்.

தென் திசையில் உள்ள முகத்தை ஒரு போ தும் ஏற்றக்கூடாது. எதிர்பாராத தொல்லை களும், கட ன்களும் பாவங்களும் கூடும்.

திரியில்லாமல் தீபம் ஏது?

திரிகளின் வகைகளும் அவை தரும் பலன் கள் பற் றியும் பார்க்கலாமா?

சுகங்களைக் கூட்டும் தன்மை கொண்டது தான் பஞ்சுத்திரி.

முற்பிறவியின் பாவங்களை அகற்றி- செல்வத்தைத் தக்க வை த்துக் கொள்ளவேண்டுமென்றால் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.

மழலைப் பேறில்லையே என ஏங்கு வோர் வாழைத்தண்டு திரிபோட்டு விள க்கேற்ற வேண்டும். செய்வினைகள் நீங்கவும், நீடித்த ஆயுள் பெறவும் வெள் ளெருக்குப் பட்டைத் திரியில் விளக் கேற்ற வேண்டும். முழுமுதற்கடவுளா ன கணேசப் பெருமானுக்கும் உக ந்தது இது.

தம்பதிகள் மனமொத்து வாழவும் – மகப் பேறு பெறவும் மஞ்சள் நிறங் கொண்ட புதிய திரி போட்டு விளக்கேற்ற வேண் டும்.

திரியுடன் எண்ணையிட்டால்தானே தீபம் எரி யும்?

எந்த எண்ணையிட்டாலும் விளக்கு எரியும்தான். ஆனால் பலன்…?
நலம் வேண்டி நாம் விளக்கேற்றும்போது அதில் விடும் எண்ணை யினால் பலன்கள் நேரெதிராகவும் வாய் ப்புகள் உண்டே?

ஏதோ இருக்கும் எண்ணையை ஊற்றி விளக்கு ஏற்றுதல் என்பது மிகவும் தவறான ஒன்று. கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும். கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும்

வேப்பெண்ணை தீபம் உகந்தது.

அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது மணக்கு எண்ணை தீப ம். எள் எண்ணை (நல்லெண் ணை) தீபம் என்றுமே ஆண்டவ னுக்கு உகந்தது;

நவக்கிரகங்களைத் திருப்தி செ ய்யவு ம் ஏற்றது.

மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் சுத்தமான தேங்காய் எண்ணை கொண்டு தீப மேற்ற வேண் டும்.

செல்வங்கள் அனைத்தையும் பெற விரும்புவோர் வேப்பெண் ணை, இலுப்பை எண்ணை, நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.

மந்திர சித்தி பெற வேண்டு வோர் விளக்கெண்ணை, இலுப்பை எண்ணை, நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணை ஆகிய ஐந்து எண் ணைகளையும் கலந்து விள க்கேற்ற வேண்டும்.

கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளை யும், பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணையின் தீபங்கள்.
Photo: தீபம் ஏற்ற வேண்டிய முறைகள்

நாம் அன்றாடம் காலையும் – மாலையும் பூசை அறையில் தீபம் ஏற்றி ஆண்டவனை வணங்குகி றோம். தினம் தீபம் ஏற்றும் நம் மில் எத்தனை பேருக்குத் தீபம் ஏற்ற வேண்டிய முறைகள் பற்றி யும், அவை தரும் பலன்கள் பற்றி யும் தெரியும் ?

தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட் டுமே ஏற்றினால் நம்மைத் தொட ரும் துன்பங்கள் நீங்குவதுடன் மக் களிடையே நன் மதிப்பும் கிடை க்கும்.

மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட் டும் ஏற்றினால் கோதரர் களிடையே ஒற்றுமை ஏற்படும்; கடன் தொல் லைகள் விலகும். சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசை யில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும்.

தென் திசையில் உள்ள முகத்தை ஒரு போ தும் ஏற்றக்கூடாது. எதிர்பாராத தொல்லை களும், கட ன்களும் பாவங்களும் கூடும்.

திரியில்லாமல் தீபம் ஏது?

திரிகளின் வகைகளும் அவை தரும் பலன் கள் பற் றியும் பார்க்கலாமா?

சுகங்களைக் கூட்டும் தன்மை கொண்டது தான் பஞ்சுத்திரி. 

முற்பிறவியின் பாவங்களை அகற்றி- செல்வத்தைத் தக்க வை த்துக் கொள்ளவேண்டுமென்றால் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.

மழலைப் பேறில்லையே என ஏங்கு வோர் வாழைத்தண்டு திரிபோட்டு விள க்கேற்ற வேண்டும். செய்வினைகள் நீங்கவும், நீடித்த ஆயுள் பெறவும் வெள் ளெருக்குப் பட்டைத் திரியில் விளக் கேற்ற வேண்டும். முழுமுதற்கடவுளா ன கணேசப் பெருமானுக்கும் உக ந்தது இது.

தம்பதிகள் மனமொத்து வாழவும் – மகப் பேறு பெறவும் மஞ்சள் நிறங் கொண்ட புதிய திரி போட்டு விளக்கேற்ற வேண் டும்.

திரியுடன் எண்ணையிட்டால்தானே தீபம் எரி யும்?

எந்த எண்ணையிட்டாலும் விளக்கு எரியும்தான். ஆனால் பலன்…?
நலம் வேண்டி நாம் விளக்கேற்றும்போது அதில் விடும் எண்ணை யினால் பலன்கள் நேரெதிராகவும் வாய் ப்புகள் உண்டே?

ஏதோ இருக்கும் எண்ணையை ஊற்றி விளக்கு ஏற்றுதல் என்பது மிகவும் தவறான ஒன்று. கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும். கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும்

வேப்பெண்ணை தீபம் உகந்தது.

அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது மணக்கு எண்ணை தீப ம். எள் எண்ணை (நல்லெண் ணை) தீபம் என்றுமே ஆண்டவ னுக்கு உகந்தது;

நவக்கிரகங்களைத் திருப்தி செ ய்யவு ம் ஏற்றது.

மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் சுத்தமான தேங்காய் எண்ணை கொண்டு தீப மேற்ற வேண் டும்.

செல்வங்கள் அனைத்தையும் பெற விரும்புவோர் வேப்பெண் ணை, இலுப்பை எண்ணை, நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.

மந்திர சித்தி பெற வேண்டு வோர் விளக்கெண்ணை, இலுப்பை எண்ணை, நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணை ஆகிய ஐந்து எண் ணைகளையும் கலந்து விள க்கேற்ற வேண்டும்.

கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளை யும், பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணையின் தீபங்கள்.

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?

உணவு உண்பவர்கள் வாழை இலையை இடக்கை பக்கமாக நுனி வருவது போலவும். வலக்கை பக்கமாக அகன்ற அடி இலை வருவது போ லவும் உண்பது முறையா கும். வாழை இலையில் தன லெட்சுமி வாசம் செய் வதாகப் புராணங்கள் கூறு கின்றன. வறுமை கஷ்டங் கள் நீங்க வேண்டுமானால் வாழை இலையிலேயே சா ப்பிட வேண்டும். இப் பழக் கம் கொ ண்டவர்கள் லெட்சுமி கடாட்சம் பெறுவர் என்பது திண் ணம். அத்துடன் வாழை இலையில் சாப் பிடுவதால் முகம் பளபளப்பாகி அழ கும் வசீகரமும் உண்டாகும். தலை முடி கறுப்பாகவே இருக்கும், சீக்கி ரத்தில் நரைக்காது. கண்ட திசை களுக்கு எதிராகவும் உண்ணுதல் கூடாது. உண்ணும் போது வடக்கு நோக்கி இருத்தல் நீண்ட ஆயுளும், தெற்கு நோக்கி இரு த்தல் புகழும், மேற்கு நோக்கு இருப்பின் செல்வ மும் பெருகும். ஒரு மூலையை பார் த்தவாறு உண்ணுதல் கூடாது. மேற்கண்ட முறையில் உணவை உண்ணுதல் நன்மையைத் தரும்.

உங்களது ராசியும், ராசிக்குரிய வழிபட வேண்டிய சித்தர்களும்

 உங்களது ராசிக்குரிய சித்தர்கள்
1.மேஷம் சட்டைமுனி,குதம்பை
2.ரிஷபம் சட்டைமுனி,குதம்பை
3.மிதுனம் சிவவாக்கியர்,சட்டைமுனி
4.கடகம் சிவவாக்கியர்,சட்டைமுனி
5.சிம்மம் கபிலர்,கருவூரார்
6.கன்னி காகபுஜண்டர்,அகப்பேய் சித்தர்
7.துலாம் பட்டினத்தார்,கடுவெளி சித்தர்
8.விருச்சிகம் சிவவாக்கியர்,சட்டைமுனி
9.தனுசு வள்ளலார்,இடைக்காடர்
10.மகரம் கபிலர்,கருவூரார்
11.கும்பம் காகபுஜண்டார்,அகப்பேய் சித்தர்
12.மீனம் கஞ்சமலைசித்தர்,சென்னிமலை சித்தர்.

நவக்கிரகங்களை சுற்றுவது எப்படி?

மொத்தம் ஒன்பது முறை நவக்கிரகங்களைச் சுற்ற வேண்டும். ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும். ஏனெனில், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுபவை. எனவே, இந்த ஏழு கிரகங்களை வலமாக சுற்ற வேண்டும். ராகுவும், கேதுவும் வலமிருந்து இடமாக சுற்றுபவை. எனவே, கடைசி இரண்டு சுற்றுகளை இடமாகச் சுற்றி வர வேண்டும்.

மாதவிடாய் பிரச்சினைகளுக்கு....


மாதவிடாய்ல ஏதும் கோளாறுனா... பாவம், பொண்ணுங்க மனசொடிஞ்சு போயிருவாக. அந்த நேரத்துல அவங்களுக்கு ஆறுதலா நாலு வார்த்தையும்...நல்ல கவனிப்பும் இருக்கணும். கூடவே, பாட்டி சொல்ற மருந்துங்களையும் பக்குவமா தயார் பண்ணி சாப்பிட்டா... எல்லாப் பிரச்சினையும் பஞ்சா பறந்துடும்.

வெள்ளைப்படுதல் சரியாக:

ஆனைநெருஞ்சில் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க. அதோட இலை மூணு (எண்ணிக்கை) பறிச்சிட்டு வந்து, ஒரு டம்ளர் நீராகாரத்தில போட்டு, நல்லா கலக்கணும். கொஞ்ச நேரத்துல கொழகொழப்பா வரும். அதை அப்படியே கண்ணை மூடிக்கிட்டு காலையில வெறும் வயித்துல தொடர்ந்து மூணு நாள் குடீச்சீங்கனா... வெள்ளைப்படுதல் வராது.

வேரோடு சேர்த்து, முழுசா ஒரு மணத்தக்காளி செடியை தண்ணி விட்டு அலசி, ஒரு லிட்டர் தண்ணியில போட்டு காய்ச்சி அரை லிட்டராக்கணும். அதை வெள்ளைப்படுதல் படுற இடத்துல ஊத்திக் கழுவினா... நல்ல குணம் கிடைக்கும்.

தாமதமான மாதவிடாய்க்கு:

சில பொண்ணுங்களுக்கு மாதவிடாய் ஒழுங்கா வராம ஒரு வழி பண்ணிரும். அப்படிப்பட்டவங்க பெருந்துத்தி இலை - 5 எடுத்து, அதோட மிளகு 5 சேர்த்து காலையில வெறும் வயித்துல மென்னு சாப்பிடணும். மூணு முதல் அஞ்சு நாள் சாப்பிட்டு பாருங்க... ஒழுங்கா மாதவிடாய் வரும்.

மாவிலிங்கப்பட்டையும் நல்ல மருந்து தான். அதை மையா அரைச்சி நெல்லிக்காய் அளவு எடுத்து காலையில வெறும் வயித்துல சாப்பிட்டீங்கனா தாமதமான மாதவிடாய் தடையில்லாம வரும்.

சதக்குப்பை 50 கிராம் எடுத்து, பொன்வறுவலா வறுத்து பொடியாக்கி, 3 பாகமாக்கி வச்சிக்கிடணும். ஒரு பாகத்தை ரெண்டா பிரிச்சி, காலையிலயும், சாயங்காலமும் சாப்பிடணும். கூடவே, பனைவெல்லம் கொஞ்சம் சேர்த்துக்கணும். இப்பிடி மூணுநாள் சாப்பிட்டாலே வராத மாதவிடாய் வந்துடும்.

கருஞ்சீரகம் 25 கிராம் எடுத்து பொன் வறுவலா வறுத்து பொடியாக்கி, பனைவெல்லம் சேர்த்து காலையிலயும், சாயங்காலமும் சாப்பிட்டா... மாதவிடாய்க் கோளாறு சரியாகும்.

மாதக்கணக்கில் மாதவிடாய் வராமலிருப்பவர்களுக்கு:

வல்லாரை இலை சூரணம் கால் ஸ்பூன் எடுத்து, நெய் விட்டு குழைச்சி சாப்பிட்டு வந்தா... மாதக்கணக்கில் வராத மாதவிடாய் ஒழுங்கா வரும்.

கல்யாணமுருங்கை மாதவிடாய்க் கோளாறுக்கு கைகண்ட மருந்து. கல்யாணமுருங்கை இலைச்சாறு 10 மில்லி எடுத்து, காலையில வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா, மாசக்கணக்குல வராத மாதவிடாய் வரும்.

பெரும்பாடு பிரச்சினைக்கு தும்பை இலை:

மாதவிடாய் நேரத்துல அதிக ரத்தப்போக்கோட வயித்துவலி சேர்ந்து வர்றதை பெரும்பாடுன்னு சொல்வாங்க. இந்த நோயால அவதிப்படுறவுக நாவல் மரப்பட்டை 50 கிராம் எடுத்து, அதுல தண்ணி விட்டு இடிச்சி, 100 மில்லி வர்ற அளவுக்கு தண்ணி சேர்த்து காலையில மூணு நாள் வெறும் வயித்துல குடிச்சா... பெரும்பாடு தீரும்.

ஒரு முழு வாழைப்பூவை எடுத்து, இடிச்சி சாறு பிழிஞ்சி, அதோட ஒரு ஸ்பூன் மோர் விட்டு கலக்கி, காலையில வெறும் வயித்துல மூணு நாள் குடிச்சா.... மாதவிடாய் நேரத்துல வர்ற வயித்துவலியும், ரத்தப்போக்கும் சரியாயிரும்.

கடுக்காய் பத்தி எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். அதோட தோலை மட்டும் 25 கிராம் அளவு எடுத்து, ஒண்ணு ரெண்டா தட்டிப்போட்டு, 100 மில்லி தண்ணி விட்டு கொதிக்கவைக்கணும். அது 25 மில்லியா குறுகினதும் வழக்கம்போல மூணு நாள் குடிங்க. பெரும்பாடு பிரச்சினை சரியாகும்.

அருகம்புல் 10 கிராம், மாதுளை இலை 10 கிராம் எடுத்து, 100 மில்லி தண்ணியில போடடு கொதிக்க வச்சி, 50 மில்லியாக்கி காலையில பாதி, சாயங்காலம் பாதி குடிக்கணும். இதேபோல 5 நாள் குடிச்சா மாதவிடாய் நேரத்துல வர்ற வயித்துவலி, அதிக ரத்தப்போக்கு சரியாயிடும்.

தும்பை இலை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அரைச்சி, பாலோட கலந்து சாப்பிடணும். இப்படி மூணு நாள் சாப்பிட்டா பெரும்பாடு பிரச்சினை சரியாயிரும்.

இலந்தைஇலை, மாதுளை இலை ரெண்டும் ஒவ்வொரு கைப்பிடி எடுத்து 200 மில்லியாக்கி காலைல குடிக்கணும். மூணுநாள் செஞ்சாலே பெரும்பாடு பிரச்சினை சரியாகும்.

நெல்லி வற்றல், படிகாரம், கல்கண்டு தலா 50 கிராம் எடுத்து பொடி பண்ணி வச்சிக்கிடணும். அதில் கால் ஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் மோர் சேர்த்து காலை, மாலை 10 நாள் சாப்பிட்டாலே பெரும்பாடு சரியாகும்.


Thursday, July 10, 2014

சொந்த தொழில் சிறக்க பரிகாரம்

எவன் ஒருவன் சுய சம்பாத்தியம் இல்லாமல் இருக்கிறானோ அவன் பிணத்திற்கு சமம். அதாவது சுயமாக சம்பாதிக்க நினைத்து முடியவில்லை என்றால் அவனை மன்னிக்கலாம். ஏனென்றால் அது விதிவசம். பாட்டன்- பூட்டன் சொத்து இருக்கிறது. அதை விற்று உட்கார்ந்து கொண்டே சாப்பிடுவேனே தவிர சம்பாதிக்க போகமாட்டேன் என்பவனை தான் பிணமாக நினைக்க வேண்டியுள்ளது.

முன்னோர்கள் சொத்து இல்லை என்பது நம் பாவம் அல்ல. அதற்காக முன்னோர்களை குறை சொல்லக்கூடாது. நம்மை பெற்று வளர்த்து இவ்வளவு பெரிய மனிதனாக்கி விட்டிருக்கிறார்களே. அது போதாதா?. இரண்டு கை கால்களும் அறிவும் திடமாக இருக்கும்போது சுயமாக முன்னேறுவதில் என்ன தடை இருக்க போகிறது.

பொதுவாக சொந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் அந்த தொழில் சிறக்க தினசரி காலையில் அவர்கள் எந்த சாமியை விரும்பி வழிபடுகிறார்களோ. அந்த சுவாமிக்கு ஐந்து வெற்றிலையும் நான்கு பாக்கும் வைத்து 'குருவடி சரணம் திருவடி சரணம்' என்று சொல்லி சாமி கும்பிட்டு அதன்பிறகு தொழிலுக்கு செல்லுங்கள். கண்டிப்பாக தொழில் அமோகமாக நடக்கும். அதில் சந்தேகம் இல்லை. இதை செய்பவர்கள் எவருமே தோற்றதில்லை

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா

உணவு உண்பவர்கள் வாழை இலையை இடக்கை பக்கமாக நுனி வருவது போலவும். வலக்கை பக்கமாக அகன்ற அடி இலை வருவது போ லவும் உண்பது முறையா கும். வாழை இலையில் தன லெட்சுமி வாசம் செய் வதாகப் புராணங்கள் கூறு கின்றன. வறுமை கஷ்டங் கள் நீங்க வேண்டுமானால் வாழை இலையிலேயே சா ப்பிட வேண்டும். இப் பழக் கம் கொ ண்டவர்கள் லெட்சுமி கடாட்சம் பெறுவர் என்பது திண் ணம். அத்துடன் வாழை இலையில் சாப் பிடுவதால் முகம் பளபளப்பாகி அழ கும் வசீகரமும் உண்டாகும். தலை முடி கறுப்பாகவே இருக்கும், சீக்கி ரத்தில் நரைக்காது. கண்ட திசை களுக்கு எதிராகவும் உண்ணுதல் கூடாது. உண்ணும் போது வடக்கு நோக்கி இருத்தல் நீண்ட ஆயுளும், தெற்கு நோக்கி இரு த்தல் புகழும், மேற்கு நோக்கு இருப்பின் செல்வ மும் பெருகும். ஒரு மூலையை பார் த்தவாறு உண்ணுதல் கூடாது. மேற்கண்ட முறையில் உணவை உண்ணுதல் நன்மையைத் தரும்

தாலி நிலைத்திருக்கணும் என்று சுமங்கலி விரதமும் இருக்கும்

கணவர் நல்லா இருக்கனும் என்று திருவாதிரை விரதமும் தாலி நிலைத்திருக்கணும் என்று சுமங்கலி விரதமும் இருக்கும் பெண்களே .....நீங்கள் மெளன விரதம் இருந்து பாருங்க உங்க கணவரை விட சந்தோச மான மனிதன் இந்த உலகில் வேறு யாரும் இருக்க மாட்டார்கள்

விளக்கேற்றுவதன் பலன்கள்

நெய்தீபம் - ஞானம் ஏற்படும்.

நல்லெண்ணெய் தீபம் - எம பயம் அணுகாது.

இலுப்பை எண்ணெய் தீபம் - ஆரோக்கியம்

விளக்கெண்ணெய் தீபம் - சகல செல்வமும் கிடைக்கும்

ஒரு முக தீபம் - மத்திம பலன் தரும்

இரண்டு முக தீபம் - குடும்பம் ஒற்றுமை தரும்

மூன்று முக தீபம் - புத்திர சுகம் தரும்

நான்கு முக தீபம் - பசு, பூமி, சுகம் தரும்

ஐந்து முக தீபம் - செல்வம் பெருகும்.

உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம்

SAMSUNGமொபைல் போன்களுக்கான் குறியீட்டுகளே...!

1)*#9999# - தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய.
2)#*3849# -தங்கள் சாம்சங் மொபைல் போனை மீண்டும்Rebootசெய்ய.
3)*#06# -சாம்சங் போனின்IMEI (EMI)எண்ணை அறிய. இது மிக முக்கிய ஓர் எண்ணாகும்.
4)#*2558# -தங்கள் போனின் கடிகாரத்தை இயக்க அல்லது நிறுத்த. தங்கள் போனின் மொபைல் போனின் டைமை ஆன் செய்ய அல்லது ஆப் செய்ய.
5)#*7337# -தங்கள் அண்மைகால சாம்சங் மொபைல் போனை அன்லாக் செய்ய(UnLock).
6)#*4760# -தங்களில் போனில்GSM Featuresயை இயக்க அல்லது நிறுத்த.
7)*#9998*246# -தங்கள் போனின் மெமரி திறன் மற்றும் பேட்டரியின் திறனை அறிய.
8)*#7465625# -தங்கள் போனின் கடவுசொல் நிலைமை அறிய.
9)*#0001# -தங்கள் போனின் சீரியல் எண்ணை காண.
10)*#2767*637# -தங்கள் மொபைல் போனை அன்லாக் செய்ய.
11)*#8999*636# -தங்கள் போனின் சேமிப்பு கொள்ளலவு நிலைமையை காண.
12)*#8999*778# -தங்கள் சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய.
13)#*#8377466# -தங்கள்போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும்Versionயை அறிய.
14)#*3888# -சாம்சங் போன்களின்Bluetoothயின்தகவல்களைஅறிய.
15)#*5376# - ஒரே கட்டளையில் தங்கள் போனின் அனைத்து மெசேஜ்யும் ஒரே கட்டளையில் நீக்க அல்லது அழிக்க.
16)#*2472# -தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய.
ஒரு சில கோடுகள் சில போன்களில் இயங்காது.

யார் விதவை பெண்

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழில் சூரியன், செவ்வாய், இராகு, கேது இருந்தாலும், அவள் இளமையில் விதவைதான்.

 ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சூரியனும், செவ்வாயும் கூடி, பன்னிரண்டு வீடுகளில் எந்த வீட்டில் இருந்தாலும், இளமையிலே கைம்பெண்ணாக, கணவனை இழந்து வாழ்வாள்.

பத்தில் இராகு நிற்க:

வேதங்கள் முதற்கொண்டு ஜோதிடம் வரை கற்று தேர்வான். பல தொழிகள் பார்ப்பான். இவனுடன் பல ஜனங்கள் இணைவார்கள். ஆட்சியாளர்களுக்கு இணக்கமானவன். வாக்கு பலிதமுள்ளவன். மனைவி சுகமற்றவன்.உயர்பதவியை அடைவான். சதா பிரயானமும் வீண்செலவும் உடையவன்.

பத்தில் கேது நிற்க:

பெரும் பொருள் தேடிவைப்பான். மனைவியின் சொல்லை தட்டாதவன்.தானதருமங்கள் செய்பவன். யாருக்கும் அடங்காதவன். கம்பீரமாக சிரிப்பவன். மருத்துவம், இர்சாயனம் சார்ந்த துறையில் இருப்பார். இளகிய மனம் உடையவர்.

பனிரெண்டில் கேது நிற்க:

முக்திக்கு வழி வகுக்கும் இது கடைசி பிறவி என்பர். மறுபிறவி இல்லை. பிறவித்துன்பத்தில் இருந்து விடுதலை. கடைசி காலத்தில் பிணிகள் இல்லை. புனிதன். உத்தமன். நினைத்ததை முடிப்பவன். வெளியுலகில் உள்ளோர்க்கு நல்லவனாய் இருப்பார்

சூரியன் புதன் கற்பனை

ஒருவரின் ஜாதகத்த்தில் சூரியன் புதன் கூட கற்பனை வளம் அதிகரித்து, எழுத்துத் துறையில் பிரகாசிக்கலாம்.

அனபா யோகம்.

உங்களின் ஜாதகத்தில் சந்திரன் நின்ற வீட்டுக்கு, பனிரெண்டாம் வீட்டில் புதன், சுக்கிரன், சனி, குரு, செவ்வாய் ஆகிய பஞ்சமகாபுருஷக் கிரகங்களில் ஒன்று நின்றால் இந்த யோகம் ஏற்படுகிறது. இந்த யோகம் மட்டும் இருந்து விட்டால், காலமுழுக்க சாப்பாட்டுக்குப் பஞ்சம் இருக்காது. கெளரவ்ம் பெருகும். மதிப்பான வாழ்வும் வாழலாம். இதில் ஒரு நுட்பம் என்னவென்றால், சந்திரனுக்குப் பனிரெண்டில் குரு நின்றால், அது சகடை தோஷமாகிவிடும். பஞ்சமகா புருஷக் கிரகங்களில் குருவோடு, ஏதேனும் எரு கிரகம் கூட, சகடை தோஷம் பங்கமாகி, அனபா யோகமாகிவிடும்.

சுனபா யோகம்

ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நின்ற வீட்டுக்கு இரண்டாம் வீட்டில் சுபக்கிரகம் இருந்தால், (குரு, சுக்கிரன், பாவிகளுடன் கூடாத புதன்) இந்த யோகம் ஏற்படுகிறது. இதன் பலன் என்னவென்றால், எப்போதும் பணம்காசு இருக்கும். அரசுகளின் உதவி பெற்றவன். எஅல்ல புத்தியை உடையவன். எல்லோராலும் புகழத்தக்க வாழ்வுடையவன் ஆகும்.

கிரகமாலிகா யோகம்.

ஏழாம் வீட்டிலிருந்து கிரகங்கள் இடைவிடாமல் அமர்ந்திருக்க, அதற்கு, “களத்திரமாலிகா யோகம்” என்று பெயர். ஒரு பேரழகியே மனைவியாக வாய்ப்பாள். அவள் வசதி மிக்கவளாகவும், தெய்வபக்தி மிகுந்தவளாகவும் இருப்பாள். நண்பர்கள், கூட்டாளிகள், பங்களிகள் ஆகியோர்கள்நன்மையை மட்டும் தருபவர்களாக இருப்பார்கள். இந்த ஏழாமிடத்தில் வளர்பிறைச் சந்திரன், குரு, சுக்கிரன், புதன் ஆகியோர்களில் யாரேனும் ஒருவர் இருக்க, களத்திரமாலிகா யோகம் சிறப்பானப் பலனைத் தரு

குரு சந்திர யோகம்.

ஒருவரின் ஜாதகத்தில் குரு சந்திரன் கூடினால் மட்டும், இந்தயோகம் அமைந்து விடாது. குருவும் சமசப்தமத்தில்(அதாவது நேரெதிர்) பார்த்துக்கொண்டாலும் இந்த யோகம் ஏற்படும். குருவும் சந்திரனும்கேந்திரத்தில் இருந்தால், அது கஜகேசரி யோகமே என்று நீங்கள் நினைத்தால், ஒரு சின்ன விளக்கம். இரண்டு கிரகங்களும் 4,10 ல் நின்றால் மட்டுமே கஜகேசரி யோகம் ஏற்படும். முதல் கேந்திரத்தில் கூட, அது குருசந்திர யோகமாகும். ஒன்றையொன்று ஏழில் பார்த்துக்கொள்ள, அது அவயோகமாகி விடுகிற்து. பொதுவாக, குருசந்திரன் கூடிய யோகம், ஜாதகர்க்குப் பிரச்சனையைத் தருகிறது. சப்தமத்தில் ஒன்றையொன்று பார்த்துக் கொள்வதும் திருமணத் தடையையும், அன்னை ஸ்ரீலட்சுமி தேவி விலகி இருப்பாள் என புலிப்பாணி கூறுகிறது.

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்

ஆன்மீக நண்பர்களின் நலம் கருதி , ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந் தவர்களுக்கும் உரிய திருத் தலங்க ளைப் பற்றி இங்கே கொடுத்துள் ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வர லாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங் களாய் தன்னையே புதுப்பி த்துக் கொண்டவை. எத்தனையோ மகான் களும், ரிஷிகளும், தேவர் களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அரு ள் பாலிப் பவை.
இவையெல்லாவற்றையும் விட முக்கியமான ரகசியம் – இந்த நட்சத்திரங்களுக்குரிய தேவதைகள் , சூட்சும ரீதியாக இங்கே தின மும் ஒரு தடவையாவது தங்களுக்கு ரிய ஆலயம் சென்று வழிபாடு செய்கின்றன. மனிதராய் பிறந்த அனைவர்க்கும், அவரவர் கர்ம வினையே - லக்கினமாகவும், ஜென்ம நட்சத்திரமாகவும், பன்னிர ண்டு வீடுகளில் நவக் கிரகங் கள் அமர்ந்து - பெற்றெடுக்கும் பெற் றோர்களையும், பிறக்கும் ஊரை யும், வாழ்க்கை துணையையும் , அவர் வாழ்வில் நடக்கும் முக்கிய சம்பவங்களையும் , வாழ்க்கை யையுமே தீர்மானிக்கிறது. நமது பூர்வ ஜென்ம தொடர்புடைய ஆலய ங்களுக்கு, நம்மை அறியாமலே நாம் சென்று வழிபடும்போது, நமது கர்மக்கணக்கு நேராகிறது. அப்படி நிகழும்போது நம் வாழ்வில் ஏற்படும் பல தடைகளும், தீராத பிரச்னைகளும் தீர்ந்து , மனதளவில் நமக்கு பலமும், மாற்றமும் ஏற்படுகின்றன.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை - உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் தினத்தன்று , ஆத்ம சுத்தியுடன், நம்பிக் கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும். உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வெகுவா க மட்டுப்படும்.
அஸ்வினி – அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில் இருப் பிடம்: திருவாரூரில் இருந்து 30 கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டி உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.
பரணி – அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்இருப்பிடம்: மயிலாடு துறையிலிருந்து(15 கி.மீ.)நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் நல்லாடை என்னும் ஊரில் உள்ளது.
கார்த்திகை – அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.
ரோஹிணி - அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்: காஞ்சிபுரம் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது.
மிருக சீரிஷம் - அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம் : தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ., தூரத்தில்
முகூந்தனூர் உள்ளது. இந்தஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.
திருவாதிரை – அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம் : தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தில் உள்ள இந்த ஆலயத்தை அடையலாம்.
புனர் பூசம் – அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம் : வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி உள்ளது. பஸ்ஸ்டாண் டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள பழைய
வாணியம் பாடியில் கோயில் உள்ளது.
பூசம் – அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கி.மீ., சென்றால் விளங்குளம் விலக்கு வரும். அங்கிருந்து தெற்கே 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளத்தை அடைய வழியிருக்கிறது.
ஆயில்யம் – அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு
மகம் – அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.
பூரம் – அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ., சென்றால் வரும் திருவரங்குளம் என்னும் ஊரில் ஆலயம் உள்ளது.
உத்திரம் – அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம் : திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்று மங்கலம் என்னும் ஊரில் உள்ளது.
ஹஸ்தம் – அருள்மிகு கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ. தூரத்தில் கோமல் என்னும் ஊரில் உள்ளது.குத்தாலத்திலிருந்து பஸ், ஆட்டோ வசதி உள்ளது
சித்திரை – அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்: மதுரையில் இருந்து 23 கி.மீ., தூரத்திலுள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. வியாழன், பவுர்ணமி தினங்களில் கோயில் வரை பஸ்கள் செல்லும். மற்ற நாட்களில் ஆட்டோவில் செல்ல வேண்டும்.
சுவாதி – அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ஊருக்கு செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் சித்துக்காடு என்ற ஊரில் இத்தலம் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு என்பதால், பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று திரும்பலாம்
விசாகம் – அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்
இருப்பிடம் : மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம். இவ்வூரைச் சுற்றி பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவை உள்ளன
அனுஷம் – அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ. தூரத்தில் திரு நின்றியூர் என்னும் ஊரில் இத்தலம் அமைந்துள்ளது.
கேட்டை – அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.
மூலம் – அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு என்ற ஊரில் உள்ளது. (பூந்தமல்லியிலிருந்து (22 கி.மீ.) பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.)
பூராடம் - அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.
உத்திராடம் – அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.,) ஒக்கூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால் பூங்குடி என்ற ஊரில் உள்ளது. ஆட்டோ உண்டு. மதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு.
திருவோணம் - பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்
இருப்பிடம்: வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள
காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ. சென்றால் திருப்பாற் கடலை அடையலாம். ஆற்காடு, வாலாஜா விலிருந்தும் பேருந்துகள் உள்ளன. இவ்வூரில் இரண்டு பெருமாள் கோயில்கள் இருப்பதால், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் என கேட்டு செல்லவும்
அவிட்டம் – அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம் : கும்பகோணம் மகாமகக்குளம் மேற்குக் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கோயில்அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் கொருக்கை என்னும் இடத்தில் உள்ளது..
சதயம் - அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் என்னும் ஊரில் உள்ளது.
பூரட்டாதி – அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில்
இருப்பிடம்: திருவையாறிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக் காட்டுப்பள்ளி சென்று, அங்கிருந்து அகரப் பேட்டை செல்லும் ரோட்டில் 2 கி.மீ. தூரம் சென்றால் ரங்கநாதபுரம் என்னும் ஊரில் உள்ளது.
உத்திரட்டாதி – அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ.தூரத்திலுள்ள ஆவுடையார்கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் வழியில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது. மதுரையில் இருந்து செல்பவர்கள், அறந்தாங்கி சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் பஸ்களில் சென்றால் தீயத்தூர் என்னும் இடத்தில் உள்ளது. தூரம் 120 கி.மீ.
ரேவதி – அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
இருப்பிடம்: திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீ) செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காருகுடி என்னும் இடத்தில் உள்ளது.

பித்ரு தோஷம்.

ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்கள் வழிபடும் முறைக்கு பிதர்தர்ப்பணம் அல்லது சிதார்த்தம் என்று பெயர்.
நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ருதோஷம் எனப்படும்.
ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்த்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு. லக்னம், பஞ்சமம், சப்தமம், பாக்கியம் இவ்விடங்களில் ராகு கேதுக்கள் நின்றால் பித்ரு தோஷம் ஏற்படுகின்றது. பிதுர் தோஷம் தன்னையும், தன் குடும்பத்தையும், குழந்தை சம்பந்தமான பிரச்சினைகளையும் கணவன்-மனைவி சம்பந்தமான பிரச்சினைகளையும் கொடுக்கும்.
ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை.
இந்த தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது. அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. கலப்புத் திருமணம் நடக்கவும், பெற்றொருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்துகொள்வதில்லை.
இந்த தோஷம் வருவதற்கான காரணங்கள்: கருச்சிதைவு செய்துகொண்டால் இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால் பித்ரு தோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும். ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும்.
தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம்.
இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும், பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள்.
பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது.
சிலர் ஏராளமான பரிகாரங்கள் தானங்கள் செய்தும் துன்பத்திலிருந்து விடுபடுவதில்லை. தொடர்ந்து கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். இதற்கான காரணங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்று செய்ய வேண்டிய தர்ப்பணம் சிரார்த்தம் போன்ற பித்ருக்களுக்கான கடமைகளை செய்யாமல் இருத்தல் அல்லது சிரத்தை குறைவுடன் செய்தல் காரணமாகும்.
ஜாதகத்தையும், நவகிரகத்தையும் நம்பி பலவித வழிபாடுகளை - பரிகாரங்களை செய்பவர்கள் தான் செய்ய வேண்டிய பித்ரு கடமையில் அவ்வளவாக ஈடுபாடு காட்டுவதில்லை. இதனால்தான் தொடர்ந்து கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள்.
முறையாக பித்ரு பூஜை செய்தால், ஜாகத்தில் உள்ள தோஷங்கள் எல்லாம் நிச்சயம் அகன்று விடும். பித்ரு பூஜை வழிபாடு செய்யாமல், நீங்கள் என்னதான் கோவில், கோவிலாக அலைந்து பரிகார பூஜைகள் செய்தாலும் நிச்சயமாக பலன்கள் கிடைக்கப்போவதில்லை.
நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ் மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ் வருடமும் அதே திதியன்று (ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும்.
இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதே போல அமாவாசைத் திதிகளிலும் செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும். ஒரு வேளை முன்னோர்களின் இறந்த திதி தெரியாதவர்கள், ஆடி, அமாவாசை அல்லது தை அமாவாசையன்று இராமேஸ்வரம் அல்லது சொந்த ஊரில் உள்ள ஏதாவது ஒரு கோவிலில் அல்லது வீட்டிலேயே சிரார்த்தம் செய்வது நன்று.
அதுவும் முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று (ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும்) செய்து வருவது மிகவும் நன்மையையும், அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும். சாதாரணமான அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது.
திருவாதிரை, புனர்பூசம், பூசம் நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதர் தர்ப்பணம் பனிரெண்டு ஆண்டுகள் பிதர்திருப்தி ஏற்படுத்தும். அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதரு பூஜையானது, பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தைத் தரும்.
மாசி மாதத்து அமாவாசையானது சதய நட்சத்திரத்தன்று வருமானால் அது பித்ருக்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்கக்கூடிய காலமாகும். மாசி மாத அமாவாசை அவிட்டம் நட்சத்திரத்தில் வருமானால் அதுவும் பித்ருக்களுக்கு அளவற்ற மனமகிழ்ச்சியைத்தரும். மாதம் அமாவாசை அவிட்டம் நட்சத்திரம் வரும் நாளில் பித்ருக்களை நினைத்து அன்னம் அல்லது தண்ணீர் தானம் செய்தால் பதினாயிரம் ஆண்டுகள் பிதுர்களைத் திருப்தி செய்த பலன் கிடைக்கும்.
மாசி மாதம் வரும் அமாவாசை பூரட்டாதி நட்சத்திரத்தில் அப்போது அந்த நன்னாளில் சிரர்த்தம் செய்தால், பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள் என விஷ்ணுபுராணம் கூறுகிறது.

Sunday, July 6, 2014

ஜோதிட பழமொழிகள்

1. பத்தில் குரு பதவிக்கு இடர்
2.வைத்தியன் கையை பிடிப்பான் ஜோதிடன் காலை பிடிப்பான்
3.கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும்
4.மகத்துப் பெண் – பூரத்துப் புருஷன்
5.துலா கேது தொல்லை தீர்க்கும்
6.சித்திரையில் பிறந்தவன் தெருவில் திரிவான்
7.மறைந்த புதன் நிறைந்த கல்வி
8.சுவாதி சுக்ரன் ஓயா மழை
9.குரு நின்ற இடம் பாழ், சனி பார்க்கும் இடம் பாழ்.
10.குரு கொடுப்பின் சனி தடுப்பார்; சனி கொடுப்பின் எவர் தடுப்பார்?