Pages

Saturday, October 25, 2014

இலக்னத்திற்கேற்ப வீட்டு வாசல் :

பின்வரும் இலக்னத்தில் பிறந்தவர்கள் குறிப்பிட்ட திசைகளினை நோக்கி வீடுகளை அமைத்துக் கொண்டால் அவர்களது வாழ்வு சிறப்பாக விளங்கும் என்பது நம்பிக்கை:-
ரிசபம், கன்னி, மகர இலக்னம் - தெற்கு பார்த்த வீடு.
கடகம், விருச்சிகம், மீனம் - வடக்கு பார்த்த வீடு.
மிதுனம், துலாம், கும்பம் - மேற்கு பார்த்த வீடு.
மேஷம், சிம்மம், தனுசு - கிழக்கு பார்த்த வீடு

Saturday, October 18, 2014

ஜீவனச்சனி தரும் உயர்வுகள்:

10ம் இடத்தில் சனி நின்றால் ஜாதகர் உழைப்பால் உயரலாம். உன்னத நிலை அடையலாம். ஆனால் ஒழுக்கம், கட்டுப்பாடு, பெண்கள் விசயத்தில் அத்துமீறினால் அதளபாதாளத்தில் விழவேண்டியிருக்கும். உயர்ந்த நிலையை அடைந்ததும் நல்ல காரியங்களுக்கு உதவ வேண்டும். பெண்களுடன் அதிகமாக பழக வேண்டிய இடங்களுக்கு தனியே செல்லக்கூடாது. தனது பதவி சுகத்தை நேர்மையான வழியில் அனுபவிக்க வேண்டும். அதிகார பலத்தினால் நிறைய பேருக்கு உதவவேண்டும், உபத்திரவம் செய்யக்கூடாது.

காம்ப யோகம் :

லகினதிற்கு 2 இல் குரு இருக்க,4 இல் சுக்கிரன் இருக்க, 7 இல் சந்திரன் இருக்க,லக்கினதிபதி சுபகிரகள் உடன்
சேர்திருதால் காம்ப யோகம் உண்டாகும்.
பலன் :-
மனைவி அல்லது கணவன் மூலம் பெருத்த லாபம் உண்டு.பணவசதி பெருகும்.பெயர் புகழ் செல்வாக்கு உயரும்.மேன்மையான வாழ்கை அமைவது உறுதி

வாசலில் மாக்கோலம் ..

மகாலட்சுமி என்றென்றும் நம்மோடு இருந்து நல்லருள் புரியவும் நம்மை விட்டு நீங்காதிருக்கவுமே ஆகும். தினமும் அதிகாலையில் எழுந்து நீராடி வாசலில் மாக்கோலமிட்டு மகாலட்சுமியை நம் இல்லங்களுக்கு வரவேற்க வேண்டும்.

அதேபோன்று வீட்டின் தலைவாயிலைத் துடைத்து படியில் கோலமிட்டு இரண்டு புறமும் பூக்களை வைத்து மகாலட்சுமியை நினைத்து போற்றி பூஜிக்க வேண்டும். மகா லட்சுமி வீட்டு வாயில்களில் ஐந்து வடிவங்களில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றாள்.

ஆகவே தினமும் வீட்டு வாயிலைத் துப்புரவு செய்து கோலமிடுவதாலும் மாவிலைத் தோரணம், மாலைகள், வாழைகள் கட்டுவதால் லட்சுமி தேவி மிகவும் மகிழ்ச்சியுறுவாள்.

திருநங்கைகளுக்கு உதவி - என் குருவிடம் இருந்து கற்றது.

வடமாநிலத்தவர்கள் திருநங்கைகளை அழைத்து அவர்களுக்கு வேண்டிய உதவியை செய்து அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவார்கள். நம் ஆட்களுக்கு இதனை எல்லாம் செய்வதற்க்கு நேரம் இல்லை. பொதுவாக நம் பணத்தை எடுத்து ஒருத்தருக்கு தானமாக கொடுத்தால் அதனை வாங்கிக்கொண்டார்கள் என்றால் அது தான் நாம் செய்த பெரிய பாக்கியம். நமது கர்மத்தை வாங்குவதற்க்கு ஒருவரை கடவுள் காட்டி இருக்கிறானே என்று கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும்.
திருநங்கைகளிடம் ஆசீர்வாதம் வாங்குங்கள். அவர்கள் நிறைய பணம் வைத்திருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கவேண்டாம் அவர்களுக்கு ஒரு நாள் தேவைக்கு அதிகமாக பணத்தை சேர்க்கமாட்டார்கள். உங்களின் குழந்தைகளிடம் பணத்தை அவர்களுக்கு கொடுத்து ஆசீர்வாதம் வாங்குங்கள். அதே நேரத்தில் கோவிலில் வேலை செய்யும் சுத்தம் செய்பவர்களுக்கும் உதவி செய்யுங்கள். இதனை எல்லாம் நீங்கள் செய்தாலே போதும் உங்களுக்கு அனைத்து செல்வமும் கிடைக்கும்.

சுக்கிரன் மூலம் ஒருவருக்கு தொழில் அமைந்தால்

சுக்கிரன் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 2,4,6,10 தொடர்பு கொண்டு ஒருவருக்கு தொழில் அமைந்தால் கீழ்க்கண்ட துறைகளில் அவர் மிகச்சிறப்பான முறையில் செயல்படுவார்.
பொழுது போக்கு துறைகள்
வாகனத்துறை
பெண்கள் சம்மந்தப்பட்ட அனைத்து துறைகள்
பல் பொருள் அங்காடி
நடிப்பு துறை
ஆடம்பர பொருட்கள் தயாரிப்பு
வெற்றிலை பாக்கு கடை
தொலைக்காட்சி
ரேடியோ
கணினி
மகப்பேறு மருத்துவர்கள்
அடைகள் மற்றும் ஆபரனதுறைகள்
வாசனை பொருட்கள் தயாரிப்பு
ஓவியர்
நடன அமைப்பாளர்
இனிப்பு தயார் செய்பவர்

கேது மூலம் ஒருவருக்கு தொழில் அமைந்தால்

கேது தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 2,4,6,10 பாவங்களை தொடர்பு கொண்டு ஒருவருக்கு தொழில் அமைந்தால் கீழ்க்கண்ட துறைகளில் அவர் மிகச்சிறப்பான முறையில் செயல்படுவார்.
ஆன்மீக துறைகள்
தத்துவ துறைகள்
மருத்துவம்
மாந்ரீகம்
கிரிமினல் தொழில்
துப்பறிதல்
அபின் கஞ்ச விற்பவர்
சட்டத்துக்கு புறம்பான தொழில்கள்

ஜாதகரின் தான நிலை எப்படி இருக்கும்?

2ம் பாவத்தின் மூலம் ஜாதகரின் தனநிலையை அறிந்து கொள்ளலாம். 2ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 2,4,6,10 பாவங்களை தொடர்பு கொண்டால் தனது வாழ்நாள் முழுவதும் பண பிரச்சினை இல்லாமல் இருக்க முடியும். 2ம் பாவம் தனக்கு சாதகமான பாவங்களுடன் தொடர்பு கொண்டு இருந்தால் விதி கொடுப்பினை தன நிலை ரீதியில் நன்றாக உள்ளது என கூறலாம்.
மேலும் நடைபெறும் தசா புத்தியானது 2ம் பாவத்திற்கு சாதகமாக இருந்தால் மிகச்சிறப்பான நிலையில் ஜாதகரின் தனநிலை இருக்கும். 2ம் பாவ விதி கொடுப்பினை நன்றாக இருந்து நடைபெறும் தசா புத்திகள் 2ம் பாவத்திற்கு சாதகமற்ற பாவங்களாகிய 1,5,9 பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தால அந்த கால கட்டங்களில் ஜாதகர் தனது பணத்தை செலவு செய்வார்.
ஆனால் 2ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 1,5,9 பாவங்களை தொடர்பு கொண்டால் அவரின் கையில் பணம் தங்காது என கூறலாம்.

ஜாதகருக்கு கண் நோய் உண்டா?

ஒருவருடைய ஜாதகத்தில் 2ம் பாவம் கண் பார்வையை குறிப்பது ஆகும். 2ம் பாவத்தின் உபநட்சத்திர அதிபதி 6,8 மற்றும் 12ம் பாவங்களுக்கும் உபநட்சதிரமாக அமைந்தாலோ, 2ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 6,8,12 பாவங்களை தொடர்பு கொண்டாலோ கண்களில் குறைபாடு உண்டு என அறியலாம்.
6ம் பாவம் என்பது மருந்து மாத்திரை மூலம் குணப்படுத்தகூடிய அடிக்கடி வரும் நோயை குறிக்கும். 8ம் பாவம் என்பது கண் பார்வையில் வலி வேதனைகளுடன் பழுது ஏற்படுவதையும், 12ம் பாவம் என்பது கண்கள் செயல் இழந்து விடுவதையும் குறிக்கும்.
மேலும் 2ம் பாவம் அகம் சார்ந்த பாவங்களுடன்(1,3,5,7,9,11) தொடர்பு கொண்டு இருந்தால் கண் சம்மந்தமான நோய்களோ அதன் மூலம் வலி வேதனைகளோ வராது.

நல்ல ஆரோக்யத்துடன் குழந்தை பிறக்க ஜாதக அமைப்பு:

5ம் பாவம் தான் நின்ற நட்சத்திரம் மூலம் 5,11ம் பாவத் தொடர்பினை பெற்றால் குழந்தை நல்ல ஆயுள் ஆரோக்யத்துடன் பிறக்கும்.

சுகப் பிரசவம் அமைய ஜாதக அமைப்பு:

5ம் பாவம் 3,9 பாவங்களை தொடர்பு கொண்டால் குறிப்பிட்ட காலத்தில் சுகப் பிரசவம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

குறை பிரசவம் ஏற்பட ஜாதக அமைப்பு:

5ம் பாவம் 2,8ம் பாவதொடர்பினை பெரும்பொழுது முதல் குழந்தை குறை பிரசவமாக பிறக்க வாய்ப்பு உண்டு. அதன் பிறகு ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

முதல் குழந்தையால் பெற்றோருக்கு மன உளைச்சல் ஏற்பட ஜாதக அமைப்பு:

5ம் பாவம் 8,12ம் பாவ தொடர்பினை பெரும்பொழுது முதல் குழந்தையால் பிரச்சினைகள் வரும்.

சன்யாசம் பெற ஜாதக அமைப்பு என்ன

1,5,9 ம் பாவங்கள் வலுவுடன் இருந்து அவற்றுடன் சனி பகவான் தொடர்பு கொண்டு இருந்தால் ஜாதகர் பெருளாதார சிந்தனையை வெறுத்து ஆன்மீக பாதையில் சன்யாச நிலையை மேற்கொள்ளும் சூழ்நிலை (விதிப்படி) அமையும். இதற்கு தசா புத்திகளும் ஒத்துழைக்க வேண்டும்.

யாருக்கு மூளை வளர்ச்சி குறைவு?

லக்ன பாவம் 8,12 தொடர்பு கொண்டு இருந்தால் மூளை வளர்ச்சி குறைவாக இருக்கும். தலை ரீதியான பிரச்சினைகள் உண்டு. சந்திரனும் 8,12 தொடர்பு கொள்ளும் பொழுது சிந்தனை செயல் இழந்து போகும்.

கடன் மூலம் யாருக்கு பிரச்சினைகள் வரும்?

6ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 8,12 தொடர்பு கொள்ளும் பொழுது.

சொந்த தொழில் யாருக்கு சிறப்பு?

7ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 2,4,6,10 ம் பாவ தொடர்பு உள்ளவர்களுக்கு சொந்த தொழில் சிறப்பு. மேலும் மனைவி மூலம் பொருளாதார உதவியும் கிடைக்கும்.

யாருக்கு அரசாங்கம் மூலம் தண்டனை உண்டு?

சூரியன் 8,12 பெற்றவர்களுக்கு அரசாங்க ரீதியான தண்டனை கிடைக்க உண்டு.

திருமண வாழ்க்கையை யார் கடுமையானா மன உளைச்சல்களுடன் அனுபவிப்பார்கள்?

5,7,11ம் பாவ உப நட்சத்திரங்கள் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 4,8 மற்றும் 12ம் பாவங்களை தொடர்பு கொண்டு சுக்கிரன் அல்லது செவ்வாய் 4,8,12 பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகர் திருமண வாழ்க்கையில் அனைத்து விதமான பிரச்சினைகளையும் அனுபவிப்பார்கள்.

மலை வாழைப்பழத்தின் மகிமைகள்

=> குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வரும்போது ஒரு மலை வாழைப்பழம் கொடுத்தால், உடனே சரியாகும்.
=>க‌ர்ப்பிணிகளுக்கு ஆறு, ஏழு மாதங்களில் வரும் மலச்சிக்கலுக்கும் இது சிறந்த தீர்வு.
=>பிரசவத்துக்குப் பின், தாய்ப்பால் சுரப்பதற்கு உண்டான சத்துக்களை அளிக்கிறது.
=>நீர்ச் சத்து இல்லாதவர்கள், தொடர்ந்து சிறுநீர் கழிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு இந்தப் பழத்தைக் கொடுப்பதன் மூலம், அவர்கள் உடம்பில் உள்ள நீர்ச் சத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்.
=>சர்க்கரைச் சத்து இதில் குறைவு என்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கும் தாராளமாகக் கொடுக்கலாம்.
மலைவாழைப்பழத்துடன் கற்கண்டு, தேன் சேர்த்துக் குழந்தைகளுக்குக் கொடுத்துவந்தால், மந்தத்தைப் போக்கிப் பசியைத் தூண்டும்.
=>ரத்தசோகையைப் போக்கி, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.