Pages

Saturday, October 18, 2014

திருநங்கைகளுக்கு உதவி - என் குருவிடம் இருந்து கற்றது.

வடமாநிலத்தவர்கள் திருநங்கைகளை அழைத்து அவர்களுக்கு வேண்டிய உதவியை செய்து அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவார்கள். நம் ஆட்களுக்கு இதனை எல்லாம் செய்வதற்க்கு நேரம் இல்லை. பொதுவாக நம் பணத்தை எடுத்து ஒருத்தருக்கு தானமாக கொடுத்தால் அதனை வாங்கிக்கொண்டார்கள் என்றால் அது தான் நாம் செய்த பெரிய பாக்கியம். நமது கர்மத்தை வாங்குவதற்க்கு ஒருவரை கடவுள் காட்டி இருக்கிறானே என்று கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும்.
திருநங்கைகளிடம் ஆசீர்வாதம் வாங்குங்கள். அவர்கள் நிறைய பணம் வைத்திருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கவேண்டாம் அவர்களுக்கு ஒரு நாள் தேவைக்கு அதிகமாக பணத்தை சேர்க்கமாட்டார்கள். உங்களின் குழந்தைகளிடம் பணத்தை அவர்களுக்கு கொடுத்து ஆசீர்வாதம் வாங்குங்கள். அதே நேரத்தில் கோவிலில் வேலை செய்யும் சுத்தம் செய்பவர்களுக்கும் உதவி செய்யுங்கள். இதனை எல்லாம் நீங்கள் செய்தாலே போதும் உங்களுக்கு அனைத்து செல்வமும் கிடைக்கும்.

No comments:

Post a Comment