Pages

Friday, January 31, 2014

கிழமைகளில் பூஜிக்க வேண்டிய தெய்வங்கள்


ஞாயிறு -விநாயகர் ,நவகிரகங்கள்
திங்கள் -சிவன்
செவ்வாய் -முருகன்
புதன் -விஷ்ணு
வியாழன் -தட்சிணாமூர்த்தி
வெள்ளி -அம்பாள்
சனி -கண்ணன் 

கருட தரிசன பலன்கள்


ஞாயிறு -நோய் நொடிகள் விலகும்
திங்கள் -மனக்கவலைகள் நீங்கும்
செவ்வாய் -மனக்கவலைகள் நீங்கும்
புதன் -ஏவல் பில்லி சூன்யங்கள் விலகும்
வியாழன் --ஏவல் பில்லி சூன்யங்கள் விலகும்
வெள்ளி -உறவுகள் வளரும்
சனி --உறவுகள் வளரும் 

Wednesday, January 29, 2014

காதலை தீர்மானிக்கும் 5 கிரகங்கள்


குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய
5 கிரகங்கள் இருக்கும் இடங்கள்,
பார்வை ஆகியவையே ஒருவரது காதல் சக்ஸஸ் ஆகுமா,
சொதப்புமா என்பதை தீர்மானிக்கின்றன.
குரு:
ஜோதிட சாஸ்திரத்தில் சுபகிரகமாக முதல் இடத்தில்
இருப்பவர். யோக காரகன், புத்திர காரகன்
என்று குறிப்பிடப்படுகிறார். காரகன் என்றால்
ஒன்றை செய்பவர், செய்ய தூண்டுபவர் அல்லது தருபவர்
என்று பொருள். அதாவது போக இச்சை, சம்போகம்,
காதல், காமம், அதன்மூலம்
குழந்தைப்பேறு ஆகியவற்றுக்கு காரணமானவர்.
சுக்கிரன்:
இவர்தான் சுகபோகத்தின், காதலின், காமத்தின் ஏகபோக
பிரதிநிதி. ஆண், பெண் காம
உறுப்புகளை ஆட்சி செய்பவர். சிற்றின்பத்தை நுகர
வைப்பவர். ஆண், பெண் இருவரையும் கவர்ந்து இழுக்கும்
காந்த சக்தியாக விளங்குபவர். அனைத்துவிதமான
உடல் இச்சை, காம சுகத்துக்கு ஊற்றானவர். ஆண்களின்
அதிக வீரிய சக்திக்கும் பெண்களின் அதிக
கவர்ச்சிக்கும் காரணமானவர்.
செவ்வாய்:
இவர்தான் ஆண்மைக்கும், பெண்மைக்கும், உணர்ச்சிக்கும்,
வீரியத்துக்கும் காரண கர்த்தா. காதலிலும் காம
உறவிலும் அதிக சுகத்தை ஏற்படுத்துபவர். ஆண், பெண்
உடலில் காதல் தீயை உண்டாக்குபவர். உடல் உறவில்
பலத்தையும், வீரியத்தையும், வேகத்தையும் தருபவர்.
புதன்:
ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத தன்மை உடையவர்.
நரம்பு மண்டலத்தை ஆள்பவர். ஆண்மையின்
உந்து சக்தியாக விளங்குபவர். ஆண் ஆண்மையுடன்
இருக்கவும், பெண்ணிடம் பெண்மை இருப்பதற்கும்
காரணம் இவரே.
சந்திரன்:
மனோகாரகன், மனதை ஆள்பவர். கற்பனை உலகத்தில்
திளைக்க செய்பவர். சபல எண்ணங்கள், சஞ்சல
புத்தி உண்டாக காரணமானவர். காதல் செய்ய
தூண்டுபவர்.
காமத்தை நிர்ணயிக்கும் வீடுகள்
ஒருவருக்கு காதல் இனிப்பதற்கு அவரது ஜாதகத்தின்
3, 4, 7 மற்றும் 12ம் இடங்கள் சிறப்பாக இருக்க
வேண்டியது அவசியம்.

மூன்றாம் இடம்: ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில்
இருந்து மூன்றாம் இடம் திட, தைரிய, வீரிய
ஸ்தானமாகும். இந்த இடத்தில் இருந்து ஒரு ஆணின்
வீரியத்தை பற்றி அறிந்துகொள்ளலாம். இந்த இடத்தில்
பாவ கிரகம், நீச்ச கிரகம் இல்லாமல்
இருப்பது நல்லது. அதேபோல் இந்த வீட்டின்
அதிபதி நீச்சம் அடையாமல், 6, 8, 12ல் மறையாமல்
இருப்பது அவசியம். மூன்றாம் வீட்டை குரு பார்த்தால்
ஆண்மகன் நல்ல சக்தியுடன் இருப்பான். காதலில்
அதிரடியாக இருப்பான். மூன்றாம் வீட்டை சனி, புதன்
பார்த்தால் காதல் சற்று சுணக்கமாக இருக்கும்.
மூன்றாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தாலும்,
பார்த்தாலும் காதல் மந்தமாகவே இருக்கும். புதன்,
சனி ஆகிய திசாபுக்தி, அந்தரங்களில் இந்த
குறைபாடு அதிகம் இருக்கும்.
நான்காம் இடம்: இது சுக ஸ்தானம். எல்லா விதமான
சுகங்களுக்கும் இந்த இடம்தான் முக்கியம். இந்த இடம்,
இந்த இடத்தின் அதிபதி பலம் பெற்று இருந்தால் காதல்
சிறப்பாக நடக்கும். பெண்கள் ஜாதகத்தில் நான்காம்
இடம் கற்பு ஸ்தானம். ஒழுக்க நெறியை பற்றி சொல்லும்
இடம். நான்காம் இடம், நான்காம் அதிபதி பலமாக
இருந்தால் ஒழுக்கம் தவறாத காதல், நெறி தவறாத
வாழ்வு அமையும். நான்காம் வீட்டில் பாவ கிரகங்கள்,
நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள் இருந்தாலும்,
பார்த்தாலும் கூடா நட்புகள் தேடி வரும்.
காதலனிடம் உஷாராக இருக்க வேண்டியது அவசியம்
ஏழாம் இடம்: இந்த இடம் காதலை,
காமத்தை நிர்ணயிக்கும் இடம். இதை களத்திர ஸ்தானம்
என்று சொல்வார்கள். இந்த இடம், இந்த இடத்தின்
அதிபதி பலம் பெறுவதும், நீச்சம் அடையாமல்
இருப்பதும் முக்கியம். இந்த இடத்தை வைத்துதான்
ஒருவரது நடத்தை, ஆசை, விருப்பம், காதல்
ஈடுபாடு போன்றவற்றை அறிய முடியும். இந்த
இடத்தில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள்
அறவே இருக்க கூடாது. கூடுமானவரை இந்த இடம்
எந்த கிரகமும் இல்லாமல் இருப்பது விசேஷம்.
அப்படி அமைந்தால் காதலும் வாழ்க்கையும் சிறப்பாக
அமையும். ஏழாம் வீட்டில் கிரகம் இருந்தால் அதன்
தன்மை, வலிமைக்கு ஏற்ற
ஜாதகங்களை கொண்டவர்களுக்கே இனிமையான காதல்
அமையும். ஏழாம் வீட்டிலோ, ஏழாம்
அதிபதியுடனோ பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய
கிரகங்கள், ராகுகேது போன்ற நிழல் கிரகங்கள்
சேர்ந்தாலும், பார்த்தாலும் காதல் தடம்
மாறிப்போகும். ஒழுக்க குறைபாடு ஏற்படக்கூடிய
சூழ்நிலையும் உருவாகும். காதலர்களுக்கு இடையில்
கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரவர்
தனித்தனி பாதையில் போகும் நிலையும் ஏற்படலாம்.
குரு பார்வை இருந்தால் ரகசியமாக,
சாமர்த்தியமாக, மாட்டிக்கொள்ளாமல் காதல்
செய்வார்கள். சுபக்கிரக பார்வை இல்லாமலோ, நீச்ச
கிரக திசை, பாவ கிரக திசை நடந்தாலோ ரகசிய
காதலுக்கு வாய்ப்பே இல்லை. இவர்களது காதல்
ஊருக்கே தெரிந்துவிடும். நல்ல கிரக அம்சங்கள்
இருந்தால் நல்ல காதலர் அமைவார்.

12ம் இடம்: இந்த இடம் அயன, சயன போக ஸ்தானம். இந்த
இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவது மிக
அவசியம். காதல், காம சுகங்கள் இந்த இடம்
மூலமாகத்தான் கிடைக்கிறது. இந்த இடத்தில் நீச்ச,
பாவ, தீய கிரகங்கள் இல்லாமல் இருப்பது நலம் தரும்.
இந்த இடத்தை நீச்ச கிரகங்கள், பாவ கிரகங்கள்
பார்த்தால் காதல் சிறப்பாக அமையாது.
விவகாரமான சனிசந்திரன்
சனி, சந்திரன் சேர்க்கை, பார்வை பரிவர்த்தனை,
நட்சத்திர சாரம், சனி வீட்டில் சந்திரன், சந்திரன்
வீட்டில் சனி, சனி, சந்திரன் நீசம் போன்ற அமைப்புகள்
ஜாதகத்தில் இருந்தால் அப்படிப்பட்டவர்கள் சுலபமாக
மனதை மாற்றிக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள்.
புகழ்ச்சிக்கு மயங்குவார்கள், சபல புத்தி, சஞ்சல
மனம் இருக்கும். இவர்களை காதல்
வயப்படுத்துவது ஈஸி. அதே நேரம், மனம்
மாறி எளிதில் வேறொருவர் மீது நாட்டம்
ஏற்பட்டுவிடக்கூடிய சூழலும் இருக்கிறது.
பெண்களின் ஜாதகத்தில் சுக்கிரனும், ஏழாம்
அதிபதியும் பலம் குறைந்து நீச்சமாக இருப்பது,
ஏழாம் வீட்டில் ராகுசனி, சுக்கிரன்கேது இருப்பது.
நவாம்சத்தில் சுக்கிரன் வீட்டில் சனியும்,
சனி வீட்டில் சுக்கிரனும்
இருப்பது ஆகியவை இருந்தால் பெண்கள்
மீதே அவர்களுக்கு நாட்டம் ஏற்படலாம்.
ஆண்கள் ஜாதகத்தில் லக்னத்தில்
ராகு அல்லது கேது இருந்து பத்தாம் இடத்தில் புதன்
இருந்தால் வயதில் மூத்த காதலி அமைவார். ஏழாம்
வீட்டில் நீச்ச கிரகம் இருந்தால் சபல
புத்தி உண்டாகும். காதலியை மடக்குவதற்கு தந்திர
நடவடிக்கைகளை கையாள்வார்கள். ஏழாம் வீட்டில்
கூட்டுக்கிரக சேர்க்கை இருந்தால்,
காதலி கண்டுகொள்ளாமல் சென்றால்கூட பின்னால்
அலைவார்கள். ஏழாம் வீட்டில் சனிசுக்கிரன் இருந்தால்,
ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த பெண்ணின்
தொடர்பு உண்டாகும். ஜாதகத்தில் இருக்கும் கிரக
அமைப்புகள்தான் யோக, அவயோகத்துக்கு காரணமாக
இருக்கிறது. நன்மை,
தீமை இரண்டுக்குமே கிரகங்கள்தான் காரணம்.
ஒருவருக்கு கிடைக்கும் நல்லது,
கெட்டது எல்லாவற்றையுமே ‘பிராப்தம்’
என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
அதனால்தான் திருமண பொருத்தத்தின்போது ஜாதக
பொருத்தம் மிக அவசியம் என்று கூறுகிறார்கள்.
இதில் சொல்லப்பட்டுள்ள கிரக அமைப்புகள் எல்லாம்
இருந்தபோதிலும், சில நேரம் கைகூடாமல் போகலாம்.
அதற்கு வேறு கிரக சேர்க்கைகள் காரணமாக
இருக்கும். மேலும் காதல், காமம் போன்ற விஷயங்களில்
சந்தர்ப்ப சூழ்நிலைகளும் முக்கிய
பங்கு வகிக்கின்றன. அத்துடன் நீச்ச கிரக, பாவ
கிரக, திசா புக்தி அந்தரங்களில் தொடர்புகள்
ஏற்படுகின்றன. ராசிநாதன், லக்னாதிபதி பலமாக
இருந்தால், எந்த சூழ்நிலையிலும் அவர் சஞ்சலம்,
சபலம் அடையமாட்டார் என்று அடித்து சொல்லலாம்.
இதில், ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில்
பொதுவான பலன்கள், கருத்துகளே கூறப்பட்டுள்ளன.
அவரவர் சொந்த ஜாதகப்படி இதில் மாற்றங்கள் வரலாம்.
செவ்வாயும் ராகு கேதுவும் தோஷமா? சந்தோஷமா?
திருமணத்துக்கு ஜாதக பொருத்தம்
பார்க்கும்போது இரண்டு விஷயங்களை முக்கியமாக
கவனிப்பார்கள். ஒன்று செவ்வாய் தோஷம்,
மற்றொன்று ராகுகேது தோஷம். செவ்வாய்
லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12ல் இருந்தால் தோஷம்.
ராகுகேது லக்னம், 2, 7, 8ல் இருந்தால் தோஷம். இந்த
இடங்கள் எல்லாம் காதல் சுகத்தையும், குடும்ப
தாம்பத்ய சுகத்தையும், இல்லற வாழ்க்கையையும்
குறிக்கும் இடங்களாகும். செவ்வாய் 7, 8ல் இருந்தால்
காதல் உணர்வு அதிகம் காணப்படும். அதற்கு இணையாக,
அந்த ஜாதகக்காரருக்கு ஈடுகொடுக்கும் வகையில்
இல்லத்துணை அமைய வேண்டும் என்ற நோக்கில்தான்,
அதேபோல் காதல் உணர்வு அதிகம் உள்ள 7, 8ல் செவ்வாய்
உள்ள ஜாதகமாக பார்த்து சேர்த்தார்கள்.
ஜோடிகள் இடையே காதல் சுகம் அதிகரிக்க வேண்டும்
என்பதைத்தான் இலைமறை காய்மறையாக ‘தோஷ
ஜாதகங்களை மட்டுமே சேர்க்க வேண்டும்’
என்று கூறினார்கள். ராகுகேது விஷயத்திலும்
அதே அணுகுமுறைதான். லக்னத்துக்கு 7, 8ல்
ராகுகேது உள்ள ஜாதகத்துடன் அதே சமதோஷமுள்ள
ஜாதகத்தை சேர்ப்பதன் மூலம் அவர்களின் ஆசைகள்,
உணர்ச்சிகள் ஒத்துப்போகின்றன. இருவருக்கும்
சரிபாதி இன்பம் கிடைக்கிறது. தோஷம் உள்ள
ஜாதகங்கள் சேராமல், ஒருவருக்கு மட்டும் தோஷம்
இருந்து மற்றவருக்கு தோஷம் இல்லாதிருந்தால் காதல்
சுகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போய்,
கருத்து வேறுபாடு ஏற்பட்டு விடுகிறது.
அதனால்தான், ‘தோஷம்‘ என்று சொல்லி சம தோஷ
ஜாதகத்தை சேர்க்க சொல்லியிருக்கிறார்கள்.
சுக்கிரன் செவ்வாய் ஆகாத கூட்டணி
ஆண், பெண் எந்த ஜாதகமாக இருந்தாலும், விருச்சிக
ராசியில் செவ்வாய் இருந்தால் காதல் வேட்கை அதிகம்
இருக்கும். விருச்சிக ராசியில் சுக்கிரன்
இருந்தால், காதல் ஒரு வெறியாகவே இருக்கும்.
காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள்.
சுக்கிரனும், செவ்வாயும்
கூட்டணி சேர்ந்து அமர்ந்துவிட்டால்
கேட்கவே வேண்டாம்.. காதல் வேட்கையை தீர்த்துக்கொள்ள
எந்த எல்லை வரை போகவும் தயங்கமாட்டார்கள்.
ஸ்கூல், காலேஜ், ஆபீஸ்..
பள்ளியில் தொடங்கி, கல்லூரி, பணி புரியும் இடம்
என எல்லா இடங்களிலும் காதல் மலர்கிறது. இளம்
வயது என்பது பக்குவம் இல்லாத வயது என்பதால்
அப்போது மலரும் ஈர்ப்பை காதலாக கருத முடியாது.
கல்லூரி காலம் என்பது குழப்பமான பருவம் என்பதால்,
அந்த காதலும் பெரும்பாலும் சக்ஸஸ் அடைவதில்லை.
ஓரளவு பக்குவம் வந்த பிறகு மலரும் காதல்தான்
அன்யோன்யமாக, நீடித்திருப்பதாக அமைகிறது.
இதுவும் ஜாதகம் மற்றும் அந்தந்த நேரத்தில் உள்ள
கிரக அமைப்புகளை பொருத்ததே. பள்ளி,
கல்லூரி பருவத்தில் லக்னாதிபதி, 5ம் எண்
அதிபதி ஆகியோர் வலுவாக இருந்தால் காதல்
போன்றவற்றில் உங்கள் கவனம் செல்லாது. கிரகங்களின்
அனுக்கிரகத்தால் நீங்கள்
பொறுப்பு உணர்ந்து படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.
பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள் அமைந்தால்
காதலின்பால் நாட்டம் ஏற்பட்டு வழிதவறி செல்ல
வேண்டிய நிலை ஏற்படும்.
கள்ளக்காதல் ரகசியம்
குரு போக காரகன், சுக்கிரன் காம காரகன். இந்த
இருவரும் இணைவது, பார்ப்பதில் நல்லதும் கெட்டதும்
இருக்கிறது. இந்த இரண்டு கிரகங்களுக்கும் பாவ
கிரக பார்வை, நீச்ச சேர்க்கை ஏற்பட்டால் ரகசிய
உறவுகள் ஏற்படலாம். 8ம் இடத்தில்
குரு அல்லது சுக்கிரன் இருப்பதால் ஒன்றுக்கும்
மேற்பட்டவர்களுடன் காதல் கொள்வதற்கான, வாய்ப்பு ஏற்படும்

Tuesday, January 28, 2014

அரசாங்கம் வேலை யாருக்கு?


1.சூரியன் நல்ல நிலையில் 10ல் அமரவேண்டும்.அதை உத்தியோககாரகன் செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்று பார்த்தால் அரசாங்கம் வேலை உறுதி.
2. குரு 10 ல்ஆட்சி உச்சம் பெற்றால் வங்கி ,இண்சூரன்ஸ், போன்றவற்றில் ஜாதகர் வேலை பார்ப்பார்.கல்வித்துறை உயர்அதிகாரி.
3.10ல் செவ்வாய் இருந்தால் மின்சாரத்துறை அதிகாரி, இராணுவம்,போலீஸ், காவல் சம்மந்தமான வேலை உறுதி
4.10ல் சனி இருந்ததால் காவல் சம்மந்தமான துறையில் உயர் பதவி.அடிமை நிலை, தாழ்ந்நிலை வேலைகள்.அராசாங்க வக்கீல் போன்ற வேலைகள்.
5.சந்திரன் 10ல் இருந்தால் மக்கள் தொடர்பு, அயல் நாட்டு தூதுவர் கப்பல் படையில் அதிகாரி.
5.கேது10ல் இருந்தால் அராசாங்க மருத்துவர்,இந்து அறநிலையத்துறை அதிகாரி.
6.புதன் 10ல் இருந்தால் கணக்கு தணிக்கத்துறை அதிகாரி,உளவுதுறை அதிகாரி.
7.இராகு 10ல் இருந்தால் வருவாய்துறை,பத்திரப்பதிவு அதிகாரி.
8.சுக்கிரன் 10ல் இருந்தால் கைத்தறித் துறை அதிகாரி.
குறிப்பு:ஜாதகத்தில் 6ம் இடத்தில் கிரகம் இருந்தால்தான் அரசாங்கம் வேலை.ஜாதகத்தில் ராஜகிரகமான குரு,சனி, சூரியன்,செவ்வாய் கெடக்கூடாது.

யாருக்கு அன்பான மனைவி அமையும்?


1.எந்த ஆண் ஜாதகமானாலும் லக்னாதிபதியை விட, 7ம் அதிபதி வலுப்பெற கூடாது.
2. ஆண் ஜாதகத்தில் 7ம் அதிபதி கேந்திர ஸதானமான 1,4,7,10, ல் அமர்ந்தால் வரகூடிய பெண் இவரை அடக்கி ஆள்வாள்.
3.செவ்வாய் ,சூரியன் 7ம் அதிபதியாக வந்தாள் மனைவி கையே வீட்டில் ஓங்கி இருக்கும்.
4.ஆண் ஜாதகத்தில் லக்னாதிபதி 7ல் தனித்து அமரக்கூடாது.

இலக்கினம் கூறும் இரகசியம்

.
1.புதன் வீட்டை இலக்கினமாக கொண்டவர்கள்,எப்பொமுதும் சுயநலம் கொண்டே காரியத்தில் ஈடுபடுவர்.
2.சிம்மலக்னத்தில் பிறந்தவர்கள் பாவ காரியங்களில் துணிந்து ஈடுபடுவர்.
3.விருச்சிகத்தில் பிறந்தவர் பாவகாரியம் செய்ய அஞ்சுவர்.
4.மகரஇலக்னத்தில் பிறந்தவர் புத்திசாலி.,ஆனால் பழிவாங்கும் குணம் கொண்டவர்.
5. கும்பலக்னத்தில் பிறந்தவர் பணத்தாசை பிடித்தவர்.வஞ்சகன்.

பெண் ஜாதகத்தில் கூடகூடாத கிரகம் எது?


1.பெண் ஜாதகத்தில் செவ்வாய்,சுக்கிரன் எந்த இடத்திலும் சேர்ந்தாலும் ஒழுக்க குறைபாடு உன்டாகும்.
2.பெண் ஜாதகத்தில் செவ்வாய், சூரியன் சேர்க்கை இளம் விதவையாக ஆக்கிவிடும்.
3.பெண் ஜாதகத்தில் 7ல் குரு, இராகு சேர்க்கை காமத்தை தூண்டி கற்ப்புக்கு களங்கம் ஏற்படுத்தும்

கற்பு நிலை தவறும் பெண் யார்?


1.ஆண் ஜாதகத்தில் லக்னாதிபதியும்,சுக்கிரனும் 6ல் பாவகிரகத்துடன் இனைந்தால் கற்பு நிலை தவறுவாள்.
2.ஆண் ஜாதகத்தில் குரு,ராகு சேர்க்கை 7ல் இருந்தால் மனைவி சோரம் போவாள்.
3.ஆண் ஜாதகத்தில் 7ல் அமரும் கிரகம்,7க்குடையவன் சனி சாரம் பெற்றால் மனைவி சோரம் போய்விடுவாள்.

யார் நல்ல நண்பர்?


உங்கள் நண்பர் எப்படி என்பதை தெரிந்துகொள்ள கீழ்கண்ட விதிகளை கவனிக்கவும்.
1.இலக்னாதிபதி,நட்த்திராதிபதி மேஷம்,ரிஷபம்,மிதுனம்,கடகம் ஆகிய வீடுகளுக்குள் இருந்தால் அந்த நபர் சுயநலவாதி.
2.சிம்மம்,கன்னி,துலாம், விருச்சிகம் ஆகிய வீடுகளுக்குள் இராசியாதிபதி,நட்சத்திராதிபதி அமர்ந்தால் Give and take பாலிஸி உடையவர் நீங்கள் செய்தவை மட்டுமே திரும்பி வரும்.
3.தனுசு,மகரம்,கும்பம்,மீனம் ஆகியவற்றில் லக்னாதிபதி நட்சத்திராதிபதி அமர்ந்தால் தன்னலம் பாராட்டாதவர் பிறர்க்காக தன் உயிரையும் தருபவர்.

நீருக்கிரைத்த எள்ளும் சோறும் பித்ருக்களுக்குப் போய் சேருமா?



ஒருவர் இறந்த திதியையொட்டி பித்ரு காரியங்கள் செய்யப்படுகின்றன. திதி என்பது பஞ்சாங்கத்தில் உள்ள ஐந்து அங்கங்களில் ஒன்றாகும்.
பஞ்சாங்கம் – பஞ்ச பூதம்
வாரம் - நெருப்பு
திதி – நீர்
நட்சத்திரம் – காற்று
யோகம் – ஆகாயம்
கரணம் – நிலம்
பஞ்ச பூதங்களில் ஒன்றான திதியானது நீர் தத்துவத்தைக் குறிக்கிறது. பித்ரு பூஜைகளும் நீர் நீர்நிலைகளுக்கு அருகிலேயே செய்யப் படுகிறது. பித்ரு பூஜையின் முக்கிய அம்சம் என்னவென்றால் பூஜை செய்பவன் எள்ளையும்,சோற்றுப்பிண்டத்தையும் நீரில் வைத்து அதன் மீது நீரை தெளிப்பான்.இவ்வாறு நீருக்கிரைக்கப்படும் எள்ளும்,சோற்றுப்பிண்டமும் பித்ருக்களைப்போய் சேருமா? என்பதற்கு தத்துவார்த்தமான விடை உண்டு, அதை பார்ப்போம்.
பஞ்ச பூதம் – புலனுறுப்பு – புலனறிதல்
நிலம் – உடல் – உணர்தல்
நீர் – வாய் –சுவையறிதல்
நெருப்பு – கண்கள் – பார்த்தல்
காற்று – மூக்கு – நுகர்தல்
ஆகாயம் – காது – கேட்டல்
பஞ்ச பூதங்களில் நீரானது புலனுறுப்புகளில் வாயைக்குறிக்கிறது.எனவே நீரில் தெளித்த எள்ளும்,சோறும் பித்ருக்களின் வாய்க்குள் செல்வதாக கொள்ளலாம். மேலும் இறந்தவர்களை வைகுண்ட பதவி அடைந்ததாக கருதுவது வழக்கம். வைகுண்ட நாதனான விஷ்ணு பாற்கடலில் பள்ளிகொண்டுள்ளான். எனவே வைகுண்டம் என்பது சமுத்திரத்தைக்குறிக்கிறது. சமுத்திரத்தில் மீன் வடிவத்தில் முன்னோர்கள் இருக்கிறார்கள் என்பது ஒரு நம்பிக்கை.
பித்ரு பூஜையை சரிவர செய்ய முடியாதவர்கள் அமாவாசை நாட்களில் புனித நதிகளில் நீராடி மீன்களுக்கு சாதம்,பொரி போன்ற உணவுப்பொருட்களை அளித்தால் பித்ருக்கள் சந்தோசமடைவார்கள். இதன் மூலம் பித்ரு தோசத்திலிருந்து நிவாரணமடையலாம்.

நவாம்ச இலக்கினப்படி புத்திர பலன்


நவாம்ச இலக்கினத்திலிருந்து ஐந்தாவது பாவாதிபனும் புதனும் சுபர்களுடன் கூடியாவது அல்லது சுபரால் பார்க்கப்பட்டாவது இருந்தால் ஜாதகனுக்கு அதிக புத்திரர்கள் பிறப்பார்கள் மேலும் பாபருடன் கூடியாவது பாபரால் பார்க்கப்பட்டாவது இருந்தால் புத்திர சுகமில்லை 

Monday, January 27, 2014

செவ்வாய் தரும் திருமணம்?

 1.செவ்வாய் சனியுடன் சேர்ந்தால் திருமணம் தாமதமாகும், நோய்யுள்ள மனைவி அமைவாள். 2.செவ்வாய், சூரியனுடன் சேர்ந்தால் உஷ்ணமானா தேகமுடைய வீரமங்கை மனைவியாவாள். 3.செவ்வாய்,புதன் சேர்ந்தால் எதுகை மோனை பேசக்கூடிய இளமை தோற்றம் கொண்ட பெண் மனைவீயாவாள். 4.செவ்வாய்,ராகு சேர்ந்தால் சண்டபிரசண்டமான மனைவி அமைவாள்.

செய்வினை நீக்கும்



செய்வினை நீக்கும் எளிய பரிகாரமுறை இக்காலத்தில் பொறாமை, வஞ்சனை கொண்ட மனிதர்கள் தமது எதிரிகளை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் மறைமுகமாக தாக்கி அழிக்கவே ஏவல், பில்லி, சூனியம் மற்றும் செய்வினை இவற்றை செய்கின்றனர். இப்படிப்பட்ட செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு.
இதோ அதன் செய்முறை…!
பொருட்கள் அளவு:
1. வெண்கடுகு - 250 கிராம்
2. நாய்க்கடுகு - 250 கிராம்
3. மருதாணி விதை - 250 கிராம்
4. சாம்பிராணி - 250 கிராம்
5. அருகம்புல் பொடி - 50 கிராம்
6. வில்வ இலை பொடி - 50 கிராம்
7. வேப்ப இலை பொடி - 50 கிராம்
இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் வெகு எளிதாக கிடைக்கக்கூடியவை. சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள 6 பொருட்களுடன் சேர்த்து ஒரு கலனில் அடைக்கவும்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்களின் கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும். தி்னமும் செய்தால் தவறில்லை. 48 நாட்களுக்குள் நிச்சயம் பலனுண்டாகும். ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நிச்சயம் நீங்கும்.
குடும்பத்தில் அமைதி உண்டாகும். குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும். மேற்கண்ட கலவையை நெருப்பில் தூவும் போது கீழே சிந்தாமல் கவனித்துக் கொள்ளவும்.
ஏனெனில் மேற்கண்ட 7 பொருட்களும் தெய்வத்தன்மை பொருந்தியவை. யார் காலிலும் படக்கூடாது. மேற்கண்ட முறையை பயன்படுத்தி மாந்திரீக கோளாறுகளிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை காப்பாற்ற எல்லாம் வல்ல இறைவன் அருள் துணை நிற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

விபூதி பூசுவது எதுக்கு..? சந்தனம்,குங்குமம் வைப்பது எதுக்கு..?


நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப் பட்டுள்ளன. உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகச் செல்கின்றன. ஆகவே நெற்றிப் பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தியிருக்கிறது. ஆனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப் படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனால்தான் காய்ச்சல் என்றால் நெற்றியில் கைவைத்து உஷ்ணத்தின் தன்மையை அறிகிறோம். வாகனங்க ளின் எஞ்சின் தொடர்ந்து இயங்கும்போது அதிகம் சூடாகும். இந்த சூட்டைக் குறைத்து எஞ்சினுக்கு அதிக ஆயுளைக் கொடுப்பது ரேடியேட்டர். அதுபோல நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்வதே நாம் நெற்றியில் பூசும் சந்தனக்குழம்பு செய்யும் தலையாய கடமை.
தலையில் ஏற்படும் வியர்வை, தலை மேல் விழும் பனித்துளிகள் மற்றும் தண்ணீர் போன்றவற்றின் சிறுபகுதி கெட்டிப்பட்டுத் தலைப்பகுதியில் தங்கிவிடும். இதனால் தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். இப்படிப்பட்ட கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றவே விபூதி தரிப்பதன் நோக்கம். நெற்றிப்பகுதி அதிக சூடாவதால் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிருமித் தொற்றைத் தடுக்கவே மஞ்சள்; அதிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமம். குங்குமம், சந்தனம், விபூதி ஆகிய மூன்றும் சிறந்த கிருமிநாசினிகள். அதை மறந்து பெண்கள் இன்று மஞ்சள், குங்குமத்தை ஒதுக்கி வருகின்றனர். பெரும்பாலான பெண்கள் ஸ்டிக்கர் பொட்டையே நம்பியிருக்கிறார்கள். ஸ்டிக்கர் பொட்டு உடல்நலனுக்குக் கெடுதியே செய்யும். அதில் தடவியிருக்கும் ஒட்டும்பசை ரசாயனத்தால் ஆனது. இது நெற்றியில் எரிச்சலை ஏற்படுத்தும். மற்றும் சூரிய ஒளி நெற்றிப் பொட்டில் விழுவதைத் தடுத்துவிடும். கண் மற்றும் புருவங்களுக்கு ஸ்டிக்கர் பொட்டு ஆபத்தானது

இந்து மதம் கூறும் சில அறிவுரைகள்.




1. சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையில் இருந்தால் அவர்களுக்கு உதவ வேண்டும்.
2. பெண்கள் எதிர்பாராமலோ, தவறு என்று தெரியாமலோ கற்பிழக்க நேரிட்டால் புண்ணிய நதியில் நன்கு மூழ்கிக் குளித்தால் அந்த குறை அகன்று விடும்.
3. உடல் ஊனமுற்றவர், கல்வியில்லாதவர்க முதியவர்கள், வறுமையிலிருப்பவரகள் குறைகளை சுட்டிக் காட்டிப் பேசக் கூடாது.
4. பிறர் அணிந்த ஆடைகள், செருப்பு, மாலை,படுக்கை, இருக்கை போன்றவற்றை உபயோகிக்கக் கூடாது.
5. பகலில் உறங்குதல், உடலுறவு கொள்வது, பால் பருகுவது கூடாது.
6. நெல்லிக்காய், ஊறுகாய், இஞ்சி, தயிர் இவற்றை இரவில் உண்ணக் கூடாது.
7.நோயாளி, கர்ப்பிணி, உடல் ஊனமுற்றவர், முதியவர்கள் போன்றவர்களுக்கு ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும்.
8. நெருப்புத் துண்டுகளை அணைக்காமல் கீழே போடக் கூடாது.
9. இருட்டில் வெளிச்சமில்லாமல் சாப்பிடக் கூடாது.
10. நம்மை ஒருவர் கேட்காத நிலையில், நாம் அவருக்கு அறிவுரை கூறக்கூடாது.

Saturday, January 25, 2014

புரட்டாசியில் அசைவ உணவைத் தவிர்ப்பது ஏன்?



புரட்டாசி மாதத்தில் பிரண்டையும் காயும் என்பார்கள் (தண்ணீர் இல்லாமல் அது வளரும்). அது கூட காயும் என்பார்கள். ஏனென்றால், அந்த அளவிற்கு புராட்டாசியில் வெயில் இருக்கும். 

சாதாரணமாக சைவ உணவு நமது உடலிற்கு எல்லா வகையிலும் உகந்தது. இந்த மாதிரியான வெயில் காலங்களில் அசைவ உணவுகளைத் தவிர்த்தால் நமக்கு நல்லது. 

இது தவிர, புரட்டாசி மாதம் என்பது புதனுடைய வீட்டில் சூரியன் இருக்கக்கூடியது. புதன் என்பது ஒரு சாத்வீகமான கிரகம். செளமியன் என்று புதனைக் குறிப்பிடுவது உண்டு. செளமியன் என்றால் சாது. சாத்வீகமானவர், அதிர்ந்து கூட பேசமாட்டார் என்று சொல்வார்களே, அதுபோல.

புதனுடைய உணவு என்று எடுத்துக்கொண்டால், அது உப்பு சப்பு இல்லாத உணவுதான். துவர்ப்பு சக்தி அதிகமுள்ள உணவுகளெல்லாம் புதனுடைய உணவு. இந்த புதனுடைய உணவாக அசைவ உணவுகள் வரவே வராது. காய், கனிகள், பிரசாதங்கள் இதுபோன்ற உணவுகளெல்லாம்தான் புதனுக்கு வரும்.

அதனால்தான் அந்த மாதத்தில் அசைவ உணவுகள் தவிர்க்கப்படுகிறது. சைவ உணவுகள் என்பது கிரகங்களுடன் ஒத்துழைத்துப் போகும்படியாக இருக்கிறது.

இறந்தவர்களைக் கனவில் கண்டால் என்ன பலன்?



இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும். 

ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும். 

இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம். வஸ்திர தானம் செய்யலாம். 

வயதானவர்கள், பெரியவர்கள், வாழ்க்கை முழுவதும் சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில் வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை.

பாதச் சனி காலத்தில் நல்லது நடக்குமா?



ஜோதிடத்தில் ஏழரைச் சனி (7.5 ஆண்டு) காலகட்டத்தை 3 பிரிவாகப் பிரித்துள்ளனர். இதில் முதல் இரண்டரைக் ஆண்டுகள் விரயச் சனி என்றும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் ஜென்ம சனி என்றும், கடைசி இரண்டரை ஆண்டு பாதச்சனி என்றும் அழைக்கப்படுகிறது.

எந்த ஒரு கிரகமாக இருந்தாலும் ஒரு இடத்தில்/வீட்டில் இருந்து விலகும் போது ஏதாவது ஒரு நன்மையைச் செய்து விட்டுப் போகும் என்பது ஜோதிட நம்பிக்கை. அந்த வகையில் “பெரும் சனி, பாம்பு இரண்டும் பிற்பலன் செய்யும்” என்று பாடல் உள்ளது. எனவே, சனி, ராகு, கேது ஆகியோர் (தங்களது தசாபுக்தி காலத்தில்) பிற்பலன் செய்வார்கள்.

இதில், பாதச் சனியைப் பொருத்தவரை நல்லது, கெட்டது என இரண்டுமே நடக்கும். ஒரு சிலருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள நேரலாம். உயிர் கண்டங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட ஜாதகர் பிறக்கும் போது சனி எங்கே, எப்படி இருந்தது என்பதை வைத்தே இதனைக் கணிக்க முடியும்.

ஆனால், விரயச் சனி, ஜென்ம சனியைக் காட்டிலும் பாதச் சனி காலத்தில் நன்மைகள் நடக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.

மனிதனின் உறுதிப்பாட்டை மனதின் ஆசை வென்று விடுகிறதே? இது ஏன்?



ஒரு மனிதனுடைய குணங்கள், நடத்தை ஆகியவற்றை ஜோதிட ரீதியாக கணிக்க உதவுவது லக்னம். ஒருவர் எந்த லக்னத்தில் பிறந்தாலும், லக்னத்திற்கு உரியவர் சிறப்பாக இருக்க வேண்டும்.

உதாரணமாக மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்னங்களிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். ஆனால் லக்னாதிபதி சிறப்பான இடங்களில் இருந்து விட்டால் அந்த ஜாதகருக்கு சபல புத்தி இருக்காது.

அதற்கடுத்தபடியாக 5ஆம் இடம்தான் மனிதனுக்குள் எண்ண அலைகளை உருவாக்கக் கூடியது. ஐந்துக்கு உரியவர் 5இல் இருந்தாலோ அல்லது 9க்கு உரியவர் ஒன்பதில் இருந்தாலோ அல்லது லக்னதிபதி 5ஆம் இடத்தில் இருந்தாலோ அவர் சபலமடையாத குணம் உள்ளவராக இருப்பார்.

ஒருவர் ஜாதகத்தில் 4ஆம் இடம் நடத்தைக்கு உரியது. எனவே 4ஆம் இடத்திற்கு உரிய கிரகம் கெடாமல் இருக்க வேண்டும். சிலர் வெளியில் நன்றாகப் பேசினாலும், உள்ளுக்குள் திரைமறைவு வாழ்க்கை வாழக் கூடியவர்களாக இருப்பர். அதேவேளையில் 4ஆம் இடம் நன்றாக இருந்தால் அவர்கள் மனிதருள் மாணிக்கமாகத் திகழ்வார்கள்.

ஒருவருடைய ஜாதககத்தில் லக்னாதிபதி, 4ஆம் இடம், 5ஆம் இடம் ஆகியவை வலுவாக இருந்து விட்டாலே, அவர்கள் உன்னதமான நிலையை உடையவர்களாக, மனதைக் கட்டுப்படுத்தும் தன்மை வாய்ந்தவர்களாகவும், புறச்சூழல்களால் பாதிக்கப்படாதவர்களாகவும் இருப்பர்.

வா‌ழ்‌க்கை‌த் துணை‌ப் ‌பி‌ரி‌ந்து செ‌ல்வத‌ற்கான காரண‌ம்?



ஜாதகப் பொருத்தங்கள் பார்க்கும்போதே சரியாகப் பார்க்காமல் விட்டுவிடுவதே இதற்கு முக்கியக் காரணம். ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே பார்க்கின்றனர். நட்சத்திரப் பொருத்தம் பார்த்தாலும், ஜாதகப் பொருத்தம் பார்க்க வேண்டியது அவசியம். 

இதுமட்டுமல்லாமல், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் ஜாதகங்களை சிறு வயதிலேயே நல்ல ஜோதிடரிடம் அளித்து அதன் தன்மைப் பற்றி அறிந்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. பிள்ளையின் குணஸ்தானம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து வைத்துக் கொள்வது நல்லது.

ஒரு சில ஜாதகருக்கு 21 வயதிலேயே திருமண யோகம் வந்துவிடும். எனவே பெற்றோர் அந்த வயதிலேயே நல்ல பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்துவிடுவது கண்ணியமாக இருக்கும். இல்லாவிட்டாலும் தானே திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு வந்துவிடும்.

மேலும் சிலருக்கு 32 வயதில்தான் திருமணம் நடக்கும் என்று இருக்கும். அவர்களுக்கு என்னத்தான் தேடினாலும் அப்போதுதான் நடக்கும். அவர்களின் ஜாதகத்தில் ஏதேனும் கடுமையான தோஷங்கள், குணாதிபதி கெட்டுப்போதல், மாங்கல்யக்காரகன் கெட்டுப்போதல் போன்றவை இருக்கும்.

எனவே பெற்றோர், தங்களது பிள்ளைகளின் ஜாதகம் பற்றி அறிந்து வைத்திருந்தால், எந்த காலக்கட்டத்தில் எச்சரிக்கையாக பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த வயதில் திருமணம் செய்யலாம், எப்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் குழப்பமிருக்காது.

சிலர் குடும்ப பின்னணியை பார்த்துத்தான் திருமணம் செய்கின்றனர். சிலருக்கு 7ஆம் இடம், 8ஆம் இடம் கடுமையாக இருந்து லக்னாதிபதியும் பலவீனமாக இருந்தால் திருமணத்திற்கு வருபவர்கள் எல்லாம் அவர்களைத் திட்டுவது போல் நீங்கள் பெண் எடுங்கள் என்று சொல்வோம். அதாவது, சொந்த வீடு வசதியாக இருக்கும் ஒருவர், வாடகை வீட்டில் இருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொண்டால், திருமணத்திற்கு வருபவர்கள் அவர்களை என்ன இப்படி ஒரு வீட்டில் பெண் எடுத்திருக்கிறீர்களே? என்று திட்டுவார்கள். அதுதான் உங்களுக்கு நல்லது என்று சொல்கிறோம்.

அதாவது, ஏதாவது ஒரு குறைபாடு இருக்கும் அல்லது நம்மை விட சிறிது தாழ்ந்த நிலையில் இருக்கும் பெண் எடுத்தால் அவர்களுக்கு சிறப்பாக இருக்கும் என்பது அவர்களது ஜாதக அமைப்பாகும்.

மாங்கல்ய ஸ்தானம், மனைவி ஸ்தானம் எல்லாம் பார்க்க வேண்டும். மேலும் 4ஆம் இடம் குணஸ்தானம், அதையும் பார்க்க வேண்டும். சில ஜாதகம் பார்த்தால் நட்சத்திரப் பொருத்தம் இருக்கும், ஜாதகப் பொருத்தம் இருக்கும். நன்றாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் திடீரென பிரிவு ஏற்படும். இதற்கு அவர்களது தசா புக்திகளின் மாறுபாடே காரணம். மிகமோசமான தசா புக்தி வரும், இதனால் ஓடிப்போவது போன்றவை ஏற்படும். தசா புக்தியை மாற்ற இயலாது. ஆனால் பெண்ணுக்கு கெட்ட தசா புக்தி வரும்போது, ஆணுக்கு நல்ல தசா புக்தி நடந்தால் பெண்ணின் மனதை அது மாற்றி விடும்.

எனவே பொருத்தம் பார்க்கும்போது மோசமான தசைகள் ஆணுக்கோ, பெண்ணுக்கோ வருகிறதா என்பதைப் பார்த்து, அவ்வாறு வந்தால், எதிர்பாலருக்கு அதனை சமாளிக்கக் கூடிய தசா புக்தி வருகிறதா என்பதைப் பார்த்து திருமணம் முடிக்க வேண்டும். இவ்வாறு எல்லாவற்றையும் பார்த்து திருமணம் செய்தால் ஓடிப்போதல் போன்றவை ஏற்படாது.

அதில் மிக முக்கியமானது நடத்தை ஸ்தானம், ஒரு சிலர் அடிப்படையிலேயே கெட்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு அவர்களுக்கேற்றபடியான ஒரு ஜாதகத்தைப் பார்த்துத்தான் சேர்க்க வேண்டும்.

மனைவி ஓடிப் போவதற்கு ஆணின் ஆண்மைத் தன்மை குறைபாடு காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறதே?

பொதுவாக செவ்வாய் என்பது ரத்தத்துக்குரியது. 10 சொட்டு ரத்தம் சேர்த்து ஒரு விந்து உருவாகிறது. அப்போ ரத்தத்தின் தன்மை என்ன என்பதை பார்க்க வேண்டும். செவ்வாய், சுக்ரன் கிரகங்கள்தான் காமத்தை தூண்டக்கூடிய கிரகங்களாகும். இவை பகை வீட்டில் இருக்கிறதா, ஆட்சி வீட்டில் இருக்கிறதா, உச்சம் பெற்றுள்ளதா, நீச்சம் பெற்றுள்ளதா என்பதை கண்டறிய வேண்டும். அது சேர்ந்த கிரகம் உள்ளிட்டவற்றையும் பார்த்தால் ஒரு ஆணின் தன்மையை அறிந்து கொள்ள முடியும்.

இதேபோன்றுதான் பெண்ணின் ஜாதகத்திலும் அவரது கர்ப்பப்பையின் தன்மையை அறிந்து கொள்ள முடியும்.

லக்னத்திற்கு 3ஆம் இடம்தான் போக ஸ்தானம். எனவே 3ஆம் இடம் நன்றாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். அதற்கடுத்து சுக்ரன், செவ்வாய் எங்கு இருக்கிறது, எவ்வாறு இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். சுக்ரன் நல்ல இடத்தில் இருந்தால், ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலைப்பாட்டுடன் வாழ்வார்கள்.

சுக்ரன் பாவ கிரகங்களுடன் சேர்ந்து, சனியும் சுக்ரனும் பார்த்துக் கொண்டால் அவர்கள் தாம்பத்தியத்தில் அவ்வளவு எளிதாக திருப்தி அடைய மாட்டார்கள். மேற்கொண்டு பலரை நாடுவார்கள்.

சுக்ரன் செவ்வாயுடன் சேர்ந்து சனி பார்த்துவிட்டால் அவர்கள் நீலப்படங்களை அதிகம் பார்ப்பார்கள். சுக்ரனும் சனியும் ஒன்றாக இருந்து செவ்வாய் பார்த்தால் அவர்கள் பிறர் மனையை நாடுவார்கள்.

பிறர் மனையை நாடும் ஜாதகங்களை நாம் பொருத்தம் பார்க்க வரும்போதே இந்த ஜாதகம் வேண்டாம் என்று சொல்லிவிடுவோம். ஆனால் அதையெல்லாம் ஏற்காமல் வீடு, வசதியைப் பார்த்து பெண்ணைக் கொடுத்துவிட்டு பின்னர் புலம்பும் நிலைதான் உள்ளது.

எனவே பொருத்தம் பார்ப்பதை நல்ல ஜோதிடரை அணுகி பொருத்தம் பாருங்கள். அவர் இந்த ஜாதகம் வேண்டாம் என்று கூறியும், வீடு வசதியைப் பார்த்து திருமணம் செய்து பின்னர் கண்ணீர் சிந்தும் நிலை வேண்டாம்.

அஷ்டமி, நவமி திதிகளில் சுபகாரியங்கள் மேற்கொள்ளத் தயக்குவது ஏன்?



அஷ்டமி, நவமி திதிகளில் தொட்டது துலங்காது என முன்னோர்கள் கூறுவர். அஷ்டமி, நவமி திதிகளில் மேற்கொள்ளும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது; தொடர்ந்து கொண்டே போகும் என்பதாலேயே அப்படிக் கூறினர்.

கோகுல அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அந்தத் திதியில் பிறந்த காரணத்தால் அவர் எத்தனை கஷ்டங்களை அனுபவித்தார். அவதார புருஷன் என்பதால் அவற்றை சமாளித்தார்; இறுதியில் வெற்றி பெற்றார்.

இதேபோல் நவமியில் பிறந்த ராமர், அரியணை ஏற்கும் நேரத்தில் மறஉடை தரித்து காட்டிற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சீதையை பிரிந்து அவர் பட்ட துயரங்கள் எல்லாம் நவமி திதியில் அவர் பிறந்த காரணத்தால்தான் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

எனவேதான் நவமி, அஷ்டமி திதிகளில் சுப காரியங்கள் (திருமணம், கிரஹப் பிரவேசம், சொத்து வாங்குதல் உள்ளிட்டவை) மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்தத் திதிகள் தெய்வீக காரியங்களுக்கு (தீட்சை பெறுவது, மந்திரங்கள் ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்டவை) உகந்தவை என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

செங்கல் சூலைக்கு நெருப்பு மூட்ட, எதிரிகள் மீது வழக்கு தொடுக்க, ஆயுதங்கள் பிரயோகிக்க, எதிரி நாட்டின் மீது போர் தொடுப்பது போன்ற செயல்களுக்கு அஷ்டமி, நவமி திதிகள் ஏற்றவையாகும்.

மனதை வருத்தும் நிகழ்வுகள்: பரிகாரம் என்ன?



இந்த மாதிரியான பாதிப்புகளுக்கெல்லாம், ஜாதகப்படி பார்த்தீர்களென்றால் குல தெய்வக் கோயில், சிலர் இஷ்ட தெய்வம் என்று சொல்வார்கள் இல்லையா, என்னதான் குலதெய்வம் இருந்தாலும் இந்த கோயிலுக்கு வந்தால்தான் நிம்மதியாக இருக்கும் என்று நினைக்கிறார்களோ அங்கு வந்து உட்கார்ந்து சில ஜபம், தபம் இதெல்லாம் செய்யலாம். அவர்களை நினைத்து, அந்த நேரத்தில் இந்த மாதிரியான கேள்வி கேட்டுவிட்டேன். அவர்கள் மனது எவ்வளவு புண்பட்டிருக்கும். கடுமையாக திட்டினேன், வனமையாகக் கண்டித்தேன். சேர வேண்டிய பங்கு சேரவிடாமல் தடுத்தேன், அதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருப்பார்கள்.

இதை அவர்களுடைய உள் மனது வரை ஆராய்ந்து பாவத்தை நினைத்து வருத்தப்பட்டாலே போதும். இதற்கு பதிலாக அவர்களுடைய சந்ததிகளுக்கு இவர்கள் உதவலாம். நான் உங்கள் அண்ணனுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். மிகவும் நெருக்கமாக இருந்தோம். ஒரு காலகட்டத்தில் இரண்டு பேருக்கும் பிரச்சனை வந்துவிட்டது. இருந்தாலும் நான் உன்னை மதிக்கிறேன். உனக்கு ஏதாவது உதவி வேண்மென்றால் சொல், ஏதாவது செய்கிறேன் என்று கூறலாம், இல்லையென்றால் நோகப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு உதவலாம். இவைகே தக்க பரிகாரங்களாகும்.

எ‌த்தனை வய‌தி‌‌‌ற்கு‌ள் ‌திருமண‌ம் செ‌ய்து‌விட வே‌ண்டு‌ம்?



இந்த யுகம் கலி யுகம். கலி என்று பார்த்தால் அது சனி. சனி யுகம் என்றும் சொல்லலாம். சனி என்று பார்த்தால் எல்லாம் அவசரகதி, வக்கரகதி என்ற ரீதியில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதனுடைய பக்க விளைவுகள் எல்லாம் பார்ப்பதில்லை. 

அதனால், முன்பைவிட தற்பொழுது பாலுணர்வு அதிகரித்துள்ளது சிறுவர்களிடம். அதனால்தான் உலக அறிஞர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விழிப்புணர்வு கொண்டுவர வேண்டும், பாலியல் குறித்த பாடம் கொண்டுவர வேண்டும், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இதனால்தான், 22 அல்லது 23இல் திருமணம் முடித்தால் நல்லது. ஒவ்வொரு குறிப்பிட்ட வயதிற்கும் ஒவ்வொரு கிரகத்தினுடைய ஆளுமை இருக்கும். அப்படி பார்க்கும் போது 20 முதல் 24 வயது வரை சுக்ரன் மற்றும் இராகுவினுடைய காம்பினேஷனில் வருகிறது. இது ஒருவிதமான கிளர்ச்சியை உண்டாக்கும். இதனால் பாதை மாறும் வாய்ப்பு உள்ளது.

அதன்பிறகு, குழு மனப்பான்மை, குழுவாகச் சேர்ந்து தாக்குதல், குழுவாகச் சேர்ந்து திட்டமிடுதல், இது நன்மைக்கும் கொண்டு போகும் தீமைக்கும் கொண்டு போகும். அதனால்தான் குறிப்பாக 22, 23இல் மணம் முடித்தால் செம்மையாக இருக்கும்.

ஆண்களுக்கு?

ஆண்களுக்கு 24, 25, 27 இதில் திருமணம் முடித்தால் நலம். ஏனென்றால் குருவினுடைய ஆதிக்க எண்ணாக வரக்கூடியது எண்ணாக வரக்கூடியது, அதனால் இதில் திருமணம் செய்தால் சிறப்பாக இருக்கும்.