Pages

Saturday, March 28, 2015

காம்பயோகம்

காம்பயோகம்
ஒரு ஜாதகத்தில் 2ம் இடத்தில் குரு இருக்க, 4ம் இடத்தில் சுக்கிரன் இருக்க, 7ம் இடத்தில் செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்ந்து இருக்க, லக்கினாதிபதி வலுப்பெற்றிருந்தால் அதற்கு "காம்பயோகம்" என்று பெயர். இந்த யோகம் இருக்கப்பெற்றவர்கள், வாகன வசதி, மாளிகை போல வீடு, அழகான அன்பான மனைவி, நல்ல குழந்தைகள், வாக்கு வன்மை போன்ற பலன்கள் உண்டாகும்.

அனுசம்

அனுசம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்
தாமரை பூப்போல் தழைந்த முகமும்
நீண்ட மூக்கும், உயர்ந்த கண்களும்,
பூரித்த கொங்கையும்,
புதுமலர் மணமும்,
தத்தைபோல் சொல்லும் சுத்த முடைமையும்
மனமகிழ் அன்பும் உடைய தெய்வதம்
அனுஷ நாளில் பிறந்தவள் அறிக ,!

ஆண்மை குறைவு! வருமுன் காப்பது எப்படி?


ஆண் மலடு நீங்க:-
அரச விதைதூள் மலத்தினை நீக்கும்
ஆண்மை குறைவு நீங்க:-
மாதுளம் பாசம் இரவில் தினந்தோறும் சாப்பிடவும்
இழந்த இளமையை பெற:-
அமுக்கிராபொடி கசகசா, பாதாம் பருப்பு, சாரப்பருப்பு சேர்த்து சாப்பிட்டு வரலாம்
ஆண்மை பெற:-
சுரைக்காய் விதைகளை கருப்பட்டி அல்லது சர்க்கரை சேர்த்து 10 கிராம் உண்டு வரலாம்.
மருந்துகலாக பெறலாம்......

பெண் ருதுவாகும் கிழமைகளின் பலன்கள்


திங்கள்
திங்கள் கிழமையில் ருதுவாகும் பெண்கள் சந்திரனை ஒத்த அழகுடையவர்கள். அறிவிற் சிறந்தவர்கள் சற்றே பூசினாற் போன்ற உடல்வாகு உடையவர்கள். நீளமான கூந்தலை உடையவர்கள்.தங்களை தாங்களே அலங்கரிப்பதில் ஆர்வமுடையவர்கள். குளிர்ச்சியான இடத்தில் வசிக்கவே விரும்புவார்கள்.
செவ்வாய்
செவ்வாய் கிழமையில் ருதுவாகும் பெண்கள் ஒல்லியான உடல்வாகு உடையவர்கள். சிவப்பு நிறமுடையவர்கள்.கூந்தல் அடர்த்தி குறைந்த அளவே உள்ளவர்கள். உஷ்ணமான உடம்பை கொண்டவர்கள்.
எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள்
புதன்
புதன் கிழமை ருதுவான பெண்கள் அறிவிற்சிறந்தவர்கள். கணிதத்தில் வல்லர்கள்.ஓரளவு அடர்த்தியான முடியை உடையவர்கள். புகுந்த வீட்டில் குடும்பமே மெச்ச கூடிய பெண்ணாக இருப்பார்கள். எந்த சூழ்நிலையையும் திறம்பட சமாளிக்க கூடிய திறமை பெற்றவர்கள்.
வியாழன்
வியாழக் கிழமை ருதுவான பெண்கள் சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கையுள்ள குடும்பத்தில் பிறந்தவர்கள். தெளிவான அறிவு பெற்றவர்கள். இவர்கள் செய்யும் அனைத்துச் செயல்களுக்குப் பின்னூம் ஒரு காரணம் இருக்கும்.
வெள்ளி
வெள்ளிக் கிழமை ருதுவான பெண்கள் மிகுந்த கர்வம் உடையவர்கள். அடுத்தவர்களை எளிதில் தூக்கியெறிந்து பேசும் குணமுடையவர்கள். இவர்களில் சிலரே தங்களை அலங்கரிப்பதில் ஆர்வமுடையவர்கள்.பிறந்த இடத்தை விட வசதியான இடத்தில் வாழ்க்கை படுபவர்கள்.
சனி
சனிக் கிழமையையில் ருதுவாகும் பெண்கள் பெரும்பாலும் கருப்பு அல்லது மாநிறம் உடையவர்கள். எத்தகைய வறுமையிலும் வாழ்க்கை நடத்துவார்கள்.சராசரியை விட சற்றே குள்ளமாக இருப்பார்கள். பிறந்த இடத்தை விட வசதி குறைவான இடத்தில் வாழ்க்கை படுவார்கள்.

ஞாயிறு
ஞாயிற்றுக் கிழமையில் ருதுவான பெண்கள் அடுத்தவர்களை அடிமைப் படுத்தும் எண்ணம் உடையவர்கள். இவர்களும் குறைவான முடி உள்ளவர்களே. அனைவரும் இவர்களை எப்போதும் புகழவேண்டும் என்று விரும்புவர்கள். இவர்கள் வாழ்க்கைப் படும் இடத்தில் இவர்கள் சொல் மட்டுமே எடுபடும்.

திருவோணம்

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்
சிவந்த மேனியும் செல்வமும் கூடி
பலனில் லாதசொல் பாராட் டாமையும் ஆழ்ந்த அறிவும் அன்பும் நிறைந்து
சினங்கொண்டாலும் சீக்கிரம் தணிந்து
நாயகன் தானே நாடிடும் தெய்வதம்
திருவோ ணத்தில் பிறந்தவள், தெளிக !

உத்திரட்டாதி

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்
பட்டியல் தூண்போல் பருத்த தொடையும்
ஒன்றையும் விரும்பி ஒடாத குணமும்
மழலைப் பேச்சும்
மலர் போல் பாதமும்
அழகிய கணைக்கால் அளவுள்ள உடம்பும்
நாயகன் தனயே நயக்கும் அன்பும்
கள்ளம் கபடம் காடுகள வின்றி
மனதைத் திறந்து வார்த்தைகள் வீசும்
உத்தமத் தெய்வதம் உத்தரட் டாதி
நாளில் பிறந்த நன்மகள் ,அறிக!

தெய்வ தத்துவ லட்சண பெண்களின் ஆசைகள்
முதல் நட்சத்திரமான ஹஸ்தம்
ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்
புளிப்போடு கூடிய உணவுகளை உன்ன விரும்புவாள்
நல்ல விஷயங்களையே பேசுவாள்

இவள் பிறந்த இடத்திலும் புகுந்த இடத்திலும் செல்வம் கொழிக்கும்
நல்ல குணம் படைத்தவள்
தாமரை மொட்டுப்போல் கொங்கை இருக்கும்
வளமான பரந்த கண்கள் இருக்கும்
மற்றவர்களைப் பற்றிப் புகழ்ந்து பேசுவாள்

பெண் நட்சத்திரங்களான ஹஸ்தம்,மிருகசீரிடம்,திருவாதிரை, ரோகிணி


இவர்களின் ஆசைகள்
சிவப்பு சேலை கட்டுவதயே அதிகம் விரும்புவாள்.
இனிப்பு அதிகம் சாப்பிடுவார்கள்.
காலை பொழுதில் உறங்குவார்கள்
நல்ல குணம் உடையவர்கள்
செண்டு பூசிக் கொள்வதில் ஆசை உடையவர்கள்
தனது கணவனோடு தனியாகவே வாழ விரும்புவாள்.

ரோகிணி

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த பெண் உடம்பு மாசு மருவில்லாமல் சுத்தமாக இருக்கும்.
ஆனால் கடுமையான கோபக்காரி.
காடுகளிலும்,பூந்தோட்டங்களிலும் சுற்றி வர ஆசைப்படுவாள்.
தன் கணவனைவிட மற்றவர்களைச் சேருவதயே விரும்புவாள்
யாரிடமும் நிலையான அன்பிருக்காது.
கபடம் நிறைந்தவள்.
மிகப்பெரிய பால் சொம்புபோல் தனம் இருக்கும்.

மிருகசீரிடம்

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்
கருத்து பெருத்த வாய் உடையவள்
கருணை இல்லாதவள்
சிலருக்கு சோறு கூடப் போடமாட்டாள்
வீட்டில் அமைதியாக ஆனந்தமாக இருக்க மாட்டாள்
அடிக்கடி வெளியே நடப்பாள்
அறிமுகமான அனைவரிடமும் பேசுவாள்
புளிப்பு மிகவும் பிடிக்கும்
மிகவும் பெரிய தனங்கள் தோள்வரை உருண்டு இருக்கும்

திருவாதிரை

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு மறைவிடத்தில் ரோமம் அதிகமாய் இருக்கும்.
ஆனால்
அண்டி வருபவர்களுக்கு உபகாரம் செய்வாள்.

அழகாய் சுத்தமாக இருப்பாள்.
புருசனுக்கு நல்லதயே செய்வாள்.
இவள் பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
ஆனால்
ஆழமான மனம் உடையவள்.

உறவு முறைகளில் ஒரு சில விதிகள்

1) 5 -ம் இடத்தை குரு பார்த்தால் ஒரு மாமன் சிறப்பு.
2) புதன் மறைந்திருந்து சனி பார்த்தால் மாமன் வர்க்கம் 3-க்கு மேல்.
3) 3-ஆம் அதிபதியை சனி பார்த்தால் உடன்பிறப்பு - 5- பேர்.

மாந்தி நன்மை & தீமைகள்

மந்தன் என்பவன் சனி, அவனுடைய புதல்வன் மாந்தி, சனிக் கிரகத்தில் இருந்து வெளிவந்தவன் என்று அர்த்தம். அவனுக்குக் குளிகன் என்றும் பெயர் உண்டு ! ஜாதக பலன் சொல்லும்போது, மாந்தியையும் அதாவது குளிகனையும் சேர்த்துச் சொல்ல வேண்டும் என ஜாதகாதேசம், ஜாதக பாரிஜாதம் முதலான ஜோதிட நூல்கள் பரிந்துரைக்கின்றன.
சூரியன், சனி, செவ்வாய் ஆகியோரைப் போல், பாப கிரகங்களில் அடங்குபவன்; ஆகவே, குளிகன் இருக்கும் ராசிநாதன், அவன் சுபனாக இருந்தாலும், குளிகைச் சேர்க்கையால் பாபியாக மாறுவான் என்கிறது ஜோதிடம். உதாரணமாக, குளிகன் இருக்கும் ராசிக்கு உடையவன், ஆண் ஜாதகத்தில் 7ல் இருந்தால் மனைவியை இழப்பான் என்றும், பெண் ஜாதகத்தில் 7ல் இருந்தால் கணவனை இழப்பாள் என்றும் சொல்வர் (மாந்திராசீச்வரோவா). திருமணப் பொருத்த விஷயத்தில், கேரள அறிஞர்கள் இன்றைக்கும் குளிகனையும் சேர்த்துப் பலன் சொல்கின்றனர். அனுதினமும் குளிகன் உதிக்கும் வேளையை நாம் தவிர்ப்போம். ராகு கால அட்டவணை போல், குளிகை கால அட்டவணையையும் குறிப்பிடுகிறது பஞ்சாங்கம். நல்ல காரியங்களுக்கு ராகுவைத் தவிர்ப்பது போல், குளிகனையும் தவிர்ப்பது உண்டு. முகூர்த்த சாஸ்திரம், குளிகை காலத்தைத் தவிர்க்கச் சொல்கிறது. முற்பிறவியின் கர்மவினைப் பலனை, காலம் அதாவது வேளை நம்முடன் இணைக்கும். காலத்துடன் இணைந்த மாந்தி எனப்படும் குளிகனுக்கும் கர்மவினையை வெளிப்படுத்துவதில் பங்கு இருப்பதால், பலன் சொல்லும் விஷயத்தில் அவனையும் கவனிப்பது பொருந்தும். சனியின் புதல்வன் குரூரன், துஷ்டன்; எதையும் அழிக்கும் இயல்பு கொண்டவன்; பாம்பு வடிவில் தோன்றுபவன்; கண்ணுக்கு இடுகிற மை நிறத்தில், கருநீல நிறத்திலானவன். வட்ட முகமும், சிவந்த கண்களும், நீண்ட பற்களும் (த்ம்ஷ்ட்ரம்) கொண்டு, பயமுறுத்தும் தோற்றத்தைக் கொண்டவன் என்கிறது ஹோரா சாஸ்திரம். அவனால் ஏற்படும் இன்னல்களை அகற்ற குளிக சாந்தியைப் பரிந்துரைக்கின்றன பரிகார நூல்கள். அவனுடைய காயத்ரியைச் சொல்லி (குளிக காயத்ரி) வழிபட்டால் நன்மை என்கிறது சாந்திமயூகம்.
பிரஸ்னம் எனும் ஜோதிடப் பிரிவு, குளிகஸ்புடத்தைச் சேர்த்துப் பலன் சொல்கிறது. மரணத்தை வரையறுக்க, மரண குளிகனைக் கவனித்து முடிவு எடுப்பார்கள். த்ரிஸ்புடம் எனும் பிரிவில் குளிகஸ்புடத்துக்கும் பங்கு உண்டு. ஞாயிற்றுக்கிழமை, சூரியோதயத்தில் இருந்து 26 நாழிகையில் தோன்றுவான் குளிகன். நான்கு நாழிகை குறைந்து, அடுத்தடுத்து வரும் கிழமைகளில் (26ல் இருந்து 22, அடுத்து 18,14,10,6,2) என சனிக்கிழமை வரை உதயமாகும் வேளையை அறிந்து, ஜாதகத்தில் இருக்கும் ராசியில் இடம் பிடித்துவிடுவான். அவன், லக்னத்தில் இருந்தால் சிந்தனை வளம் குறையும்; பாப கிரகத்துடன் இணைந்தால், ஏமாற்றுபவனாக மாறுவான்; அதிக ஆசையால் சிக்கித் தவிப்பான். இரண்டில் இருந்தால், புலன்களின் வேட்கையைத் தணிப்பதில் முனைப்புக் காட்டுவான். அங்கே, பாப கிரகத்துடன் இணைந்தால், ஏழ்மையில் தவிக்கச் செய்வான். 3ல் இருந்தால், அந்த ஜாதகதாரர் மிதப்புடன் தென்படுவார்; உடன்பிறந்தாரை இழப்பார்; பணம் ஈட்டுவதில் கவனம் செலுத்துவார். தேக ஆரோக்கியமின்றி இருப்பார். 4வது வீட்டில் தென்பட்டால், கல்வி, மகிழ்ச்சி, வீடு, நிலபுலன்கள் ஆகியவற்றை இழக்கச் செய்வான். 5ல் இருந்தால், மனதின் பலத்தை இழக்க நேரிடும்; தவறான செயல்களில் ஈடுபடுவர்; பிள்ளைச் செல்வத்தைக் குறைத்து விடுவான் குளிகன். 6ல் இருந்தால், எதிரிகளை அழிப்பான்; செப்படி வித்தை, மாயாஜாலம் ஆகியவற்றைக் கையாள்வான். 7ல் இருந்தால், சண்டைச் சச்சரவை ஏற்படுத்துவான். தரம் தாழ்ந்த மனைவியைப் பெற நேரிடும்; செய்நன்றியை மறக்கச் செய்வான். 8ல் இருந்தால், கண்கள் மற்றும் முகத்தின் அழகை இழக்க வாய்ப்பு உண்டு. 9ல் இருந்தால், தந்தை மற்றும் பெரியோரை வெறுக்க நேரிடும். 10ல் இருந்தால், சூடுசொரணை இல்லாதவராக மாற்றுவான்; தரத்துக்குச் சம்பந்தமில்லாத வேலையில் காலம் கடத்துவான். 11ல் இருந்தால், செல்வம், புகழ், வெகுமதி, வாழ்வில் உயர்வு, பெருந்தன்மை, சமூக அங்கீகாரம் ஆகியவற்றை அளிப்பான். 12ல் இருந்தால், ஆண்டியின் நிலையை ஏற்படுத்துவான்; அடுத்தவரிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளுவான். குளிகன், 11ல் மட்டும் நல்லவன்; மற்ற வீடுகளில் அவன் கெடுதலையே வழங்குவான் எனச் சுருக்கமாகச் சொல்வர். 11ல் அவன் ஆகலாம்; மற்ற பதினொன்றில் அவன் ஆகா என்கிற சொல்வழக்கு உண்டு. ஆனால் ஒன்று... அவனுடன் இணைந்த கிரகங்களின் சேர்க்கையில், குளிகை பலம் மாறுபடும் என்பதை மறக்கக்கூடாது.
வலுவான கிரகங்களுடன் இணையும்போது, குளிகனின் பலன் மங்கிவிடும். ஷட்பலம், ÷ஷாடசபலம் ஆகியவற்றை ஆராயும்போது, குளிக பலனின் மாற்றத்தை அறியலாம். ஆழமான சிந்தனையின் அடிப்படையில், கிரகங்களின் தராதரத்தைச் சீர்தூக்கிப்பார்த்து, கூட்டுப்பலனை வெளியிடும் தருணத்தில், குளிக பலன் மாறுபாட்டைச் சந்திக்கும். குளிகன், சூரியனுடன் இணைந்தால், தகப்பனை வெறுப்பான்; சந்திரனுடன் இணைந்தால், தாயாருக்குத் துயரத்தைத் தருவான். செவ்வாயுடன் இணைந்தால், சகோதரனை இழப்பான்; அல்லது, வெறுப்பான். புதனுடன் இணைந்தால், மனநலம் குன்றும்; குருவுடன் இணைந்தால், நன்னடத்தை மறையும். சுக்கிரனுடன் இணைந்தால், தரம்தாழ்ந்த மனைவியுடன் வாழ்வான்; தரம் தாழ்ந்த பெண்களின் சேர்க்கையில் தனது உடல்நலனை அழித்துக் கொள்வான். சனியுடன் இணைந்தால், உலகவியல் இன்பத்தை அனுபவிப்பான். ராகுவுடன் இணைந்தால், ஈவு இரக்கம் இல்லாதவனாக மாறி, விஷம் வைத்து பிறரை அழிக்கவும் துணிவான். கேதுவுடன் இணைந்தால், நெருப்பு மூட்டிப் பொருட்களை அழிக்கவும் தயங்கமாட்டான். அவனது முடிவும் சில தருணங்களில் நெருப்பில் சேர்ந்துவிடும்.
குளிகன் இருக்குமிடத்தில் எந்த நட்சத்திரத்தின் தொடர்பு இருக்கிறதோ, அந்த நட்சத்திரத்தில் விஷக் கடிகையும் சேர்ந்திருந்தால், அரசனும் ஆண்டியாவான். குளிகோதய வேளையின் சேர்க்கை, பல கிரகங்களின் பலன்களை மாற்றி அமைக்கக் காரணமாகிறது. கண்ணில் இருக்கும் விழி சற்றே நகர்ந்திருந்தால், முகத்தின் மொத்த அழகையும் பாதிக்கும். திக்குவாய் சொல்லழகை இழக்கச் செய்யும். நீளமான கழுத்து, உடலழகை பாதிக்கும். ஏழ்மை வாட்டி வதைக்கும்போது, புத்திசாலியும் தவறு செய்வான். அதுபோல் குளிகனின் சேர்க்கை, விபரீத பலனையே தரும் என்பது ஜோதிடத்தின் கணிப்பு. குளிகனுடன் இணைந்த புதன், குளிக ராசிக்கு உடையவன் புதன் அல்லது குளிக ராசிக்கு உடையவனுடன் (மற்ற கிரகங்களுடன்) புதனின் சேர்க்கை, பார்வை ஆகியன இருப்பின், மன நலம் அற்றவர்களாக மாற்றிவிடும். அறிவு, சிந்தனை வளம் பெருக, புதனின் பங்கு உண்டு. அங்கு குளிக சேர்க்கை மன வளத்தைச் குன்றச் செய்யும். படிப்பில் ஈடுபாடு இன்மை, பாடங்கள் மனதில் பதியாதது, பதிந்தது நினைவுக்கு வராமல் தடுமாறுவது, அபஸ்மாரம், காக்காவலிப்பு, ஆராயும் திறன் இல்லாத நிலை, பிறருடன் இயைந்து பழக முடியாத குணம், எதிலும் பயம், பதற்றம், நம்பிக்கையின்மை ஆகிய அனைத்தும் குளிகன் சேர்க்கையில் விளையும் என்கிறது ஜோதிடம்.
பல விஷயங்களில் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி வெற்றி காண்பவர் கூட, குறிப்பிட்ட விஷயத்தில் மட்டும் சுணக்கத்துடன் இருப்பார்கள். உலகவியலில் கொடிகட்டிப் பறப்பவன், தாம்பத்தியத்தில் சூன்யமாக இருப்பான். மேதைத்தனம் குன்றி, எதையும் கிரகிக்கும் தகுதியை இழந்து, குழந்தை போல் முதிர்ச்சி அடையாத நிலையில் இருப்பார்கள். இவை எல்லாமே குளிகனின் செயல்கள்தான் ! மனதில் தோன்றும் எண்ணங்களையும், நிகழ்வுகளையும் வெளியே இருப்பதாக நினைத்து மனம் கலங்கும். நிலையும் அவனது சேர்க்கையில் நிகழும். இல்லாத சப்தம் காதில் விழுவதாகச் சொல்லி, அந்த ஒலி தம்மைத் துன்புறுத்துவதாக நினைத்து மனப்பிரமையில் வாடும் நிலைமையும் அவனுடைய அட்டகாசம்தான் ! ஆக, மன வளத்தைப் பல கோணங்களிலும் சிதறடிக்கும் திறன் அவனுக்கு இருப்பதால், மனதை ஆராயும் விஷயத்தில் குளிகனைப் பற்றிய தகவலும் சரியான முடிவுக்கு உதவும். ஆகவே, அவனைச் சேர்த்துப் பலன் சொல்வது பொருந்தும். இதனை பிரச்னை மார்க்கம், பிரச்னானுஷ்டான பத்ததி போன்ற நூல்கள் பரிந்துரைக்கின்றன. காலத்தின் அறிவை ஜோதிடம் புகட்டும். காலத்தில் அடங்கியுள்ள அனைத்தும் அதன் வடிவத்தில் அடங்கும். குளிகனும் அதில் அடங்கியிருப்பதால், அவனையும் கவனித்து முடிவுக்கு வருவதே உத்தமம் என்றனர் முன்னோர்கள். அவனது செயல்பாடுகளையும் விளக்கியுள்ளனர். ராகுகேதுவுக்கு மற்ற கிரகங்களின் தகுதி இல்லையாயினும், காலத்துடன் அவை இணைந்திருப்பதால் சேர்த்துப் பலன் சொன்னார்கள். அதுபோல், குளிகனையும் சேர்த்தால் தெளிவான பலன் கிடைக்கும்; ஏமாற இடமிருக்காது !
ராகு காலத்தையும் குளிகை காலத்தையும் கவனித்துப் பழக்கப்பட்ட நமக்கு, பிறந்த வேளையில் குளிகன் இருப்பதால் விளைகிற நன்மை தீமைகளை அறிந்து செயல்படுவது எளிது. நவக்கிரகங்களைப் போல், குளிகனும் வழிபடுகிற கிரகமாக இருப்பதால், அவனை வழிபடுவது சிறப்பு. கும் குளிகாயநம: எனும் பீஜாட்சர மந்திரத்தைச் சொல்லி, அவனுடைய உருவத்தை 16 உபசாரங்களுடன் வழிபடலாம். அதேபோல், மந்தாத்மஜாய வித்மஹே ரக்த நேத்ராய தீமஹி. தந்நோ குளிக: பிரசோதயாத் எனும் செய்யுளைச் சொல்லி, 16 உபசாரங்களைச் செய்து வழிபடலாம். நீலாஞ்ஜனஸங்காசோ ரக்தா÷ஷாவிஷமபீஷணோதீர்க்க: பஞ்சாஸ்யா: பிருது தம்ஷ்ட்ரோ பயங்கர: ஸர்வதாகுளிக: என்று சொல்லி வணங்கலாம். சனியின் புதல்வன் குளிகன். எனவே, எள்ளுருண்டை நைவேத்தியம் செய்து, குழந்தைகளுக்கு வழங்கலாம். அன்றாடப் பணிகளில் சிக்கித் தவிக்கும் நாம், சனிக்கிழமையில் மட்டுமேனும் சனி பகவானுடன் சேர்த்துக் குளிகனை வழிபடலாம். உற்சாகத்தில் தினமும் வழிபட நினைத்துச் செயல்பட்டால், பிறகு நடுவில் வழிபாடு நின்றுவிடலாம். ஈடுபாடும் குறையும். ஆகவே, வாரத்தில் ஒருநாள், ஒரு வேளை.. சனியை வணங்கும் வேளையில் குளிகனையும் சேர்த்து வணங்கினால், பொறுமையுடன் வழிபடலாம்; இயலாதவர்கள், நீராடிய பிறகு குளிகன் காயத்ரியை 12 முறை ஜபித்தாலே போதுமானது !

சிறு துளி::- சனி - ராகு தரும் ராஜயோகம்

1) லக்கனத்திற்கு - 7- ல் உள்ள ராகு நிச்சயமாய் செல்வமும், வளமையும், புகழும் தருவார்.
2) லக்கனத்திற்கு - 3 - 9 -ஆம் இடத்து சனி நிச்சயம் ராஜயோகம் தருவார்.
குறிப்பு :::::-
ராகு ::-
=========
லக்கனத்திற்கு 7 -ஆம் இடத்தில் அமர்ந்த ராகு மண வாழ்வைக் கொடுத்து, பணவாழ்வைத் தரும். செல்வம், அதிகாரம், புகழ் ஆகியவற்றைத்தரும். ஆனால், உடல் , குடும்பம்,சுகம், நிம்மதி ஆகியவைகளைத் தருவதில்லை.
சனி:::-
========
3 - ஆம் இடத்தில் சனி இருக்கப் பிறந்தவர் அதிக முன்னெச்சரிக்கை உடையவராக இருப்பர். தொழிலில் வளைவு, நெளிவு, சுளிவு இருக்கும் ஆயுள் பலம், நிர்வாகம், பொறியியல் அறிவு, சன்மானம், சாஸ்திர திறமை, அரசு உதவி, ஆட்சித் திறன் ஆகியவைகள் இருக்கும். சுகவாசியாக இருப்பார். ஆனாலும், 3 - ஆம் இடத்து சனி தந்தைக்குத் தோஷம் தரும். வீண் செலவு, அயன சயன போகம் தோஷம் உண்டாகும்.
9 -ஆம் இடத்து சனியால் தந்தைக்குத் தோஷம் தருவார். சகோதர நாசம், வீண் செலவு, அவப்பெயர் ஆகியவைகள் உண்டாகும். என்றாலும், உயர்பதவி, தன யோகம் கிட்டும். முழுக்கமுழுக்க ஜாதகர் தன்னுடைய கடின உழைப்பால் வாழ்க்கையின் பிற்பகுதியிலேயே முன்னுக்கு வருவார். இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

சூரிய சந்திர கிரகணத்தில்

சூரிய சந்திர கிரகணத்தில்; குழந்தை பிறக்கினும் முதல் ருதுவானாலும் வியாதி பீடை முதலிய துன்பத்தைத் தரும்.
பூராடம் -ரேவதி -3ம் பாதம்
சித்திரை -பூசம் -2ம் பாதம் உத்திரம் முதல் பாதம் குழந்தை பிறந்தால் தாய் தந்தைத் அரிஷ்டம் .
உத்திரம் -2மாதமும்
பூசம் -3மாதம்
பூராடம் -ரேவதி -8மாதமும்
சித்திரை -6-மாதம் தோஷம் அதுவரை குழந்தையை தந்தை பார்க்கக் கூடாது சாந்தி செய்யவும்
சாந்தி பரிகாரமாக
உத்திரத்திற்கு எள்ளுடன் கூடிய பாத்திரமும்
பூசத்திற்கு கோதானமும்
சித்திரைக்கு ஆடு தானமும்
பூராடம் ரேவதிக்கு சுவர்ண தானமும் செய்க

Saturday, March 14, 2015

மருத்துவமும்ஜோதிடமும்‬

ஜாதகத்தில் சூரியன்,சந்திரன் ஆட்சி,உச்சம் பெற்று நின்றால் நோய்கள் எளிதில் குணமாகும்.
மேசம்,சிம்மம்,ரிசபம்,கடகம்,துலாம் ஆகிய லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு நோய் எளிதில் குணமாகும்.
கன்னி லக்கினம்,கன்னி ராசியில் பிறந்த பெண்கள் நல்ல செவிலியராக செயல்படுவர்.
ஜாதகத்தில் சூரியன்,சந்திரன் நிற்கும் ராசிகள் குறிக்கும் உடல் பாகங்களில் எந்தவிதமான அறுவை சிகிச்சையும் செய்யக்கூடாது.
லக்கினத்திற்கு 6-8 ல் நின்ற கிரகம் அல்லது 6-8 க்குடைய கிரகங்கள் சம்பந்தமான நோய்கள் வரும்.
ராகு ,கேதுக்கள் நின்ற பாவங்கள் குறிக்கும் உடல் உறுப்புகளில் ஏதாவது நோய் இருக்கும்.