Pages

Friday, May 30, 2014

இரட்டை குழந்தைகள் பிறக்கும் அமைப்பு!!


புதன் ஐந்தில்மேவ மற்றோர் மறைவு ஆகினும்
புகர்மதி சேய் பதனங்கள் இன்றி உக்குமம் சார்ந்து பனிமதியின்
சுதனும் கண் நோக்க தனுதண்டு உதயமும் தோன்ற ரவி மதியும் பொனும் உக்குமம் ஆகின் ரட்டை மகவுஉளதே
--ஜோதிட யவன காவியம்

5ல் புதன் இருக்க மற்ற கிரகங்கள் 6-8-12 ல் இருந்தாலும்
சுக்ரன் செவ்வாய் சந்திரன் ஆகியோர் பலமிழந்து இரட்டை ராசிகளில் இருக்க புதன் பார்த்தாலும் .
மிதுனம் தனுசு லக்னமாகி சூர்யன் சந்திரன் குரு ஆகியோர் இரட்டை படை ராசிகளில் இருந்தாலும்
அந்த ஜாதகருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கும் என்றே பொருள் அறியவும்

காகத்திற்கு உணவிடுவது ஏன்?


நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வழங்க வேண்டும். காரணம், நம்முடைய முன்னோர்கள் காகத்தின் வடிவில் வருவதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. அவர்களுடைய ஆசியினால் தான் நாம் இவ்வுலகில் அமைதியாக, சந்தோஷமாக, நிம்மதியாக வாழ முடிகிறது. எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு காகத்திற்கு தினசரி உணவிடுகின்றனர்.
காகத்திற்கு உணவிடும் பழக்கத்தினால் கணவன், மனைவி ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலைக்கும் என்பது நம்பிக்கை. சனீஸ்வர பகவானின் வாகனமாகையால், காகத்திற்கு உணவளிப்பதன் மூலம் சனி பகவான் தரும் கெடுபலன்களிலிருந்து விடுபடலாம்.
இறைவனின் பரிபூரண அருளையும், அன்பையும் பெறலாம். இதில் இன்னொரு தத்துவமும் இருக்கிறது. காகத்தை “ஆகாயத்தோட்டி என்பர். இந்தப் பறவை யாருக்கும் கெடுதல் செய்வதும் இல்லை. இது நம்மைச் சுற்றியுள்ள அசுத்தங்களை அடியோடு களைவதாலும் இந்த இனம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதின் அடிப்படையிலும் உணவிடும் பழக்கம் வந்தது. எப்படியிருப்பினும், ஜீவகாருண்யம் மிக்க புண்ணியச்செயல் இது.

2பெளர்ணமி 2அமாவாசை

ஒரு மாதத்தில் 2பெளர்ணமி 2அமாவாசை வந்தால் அது மலட்டு மாதம் அந்த மாதம் சுபகாரியம் தவிர்க்க வேண்டும்

கடன்பட்டு கலங்குபவர்கள்


5-ஆம் அதிபதிலக்னத்தில் இருப்பது.-?
12 -ஆம் அதிபதி 2 -ல், 2- ஆம் அதிபதி 6-ல் , 9-ஆம்
அதிபதிபலமற்று இருப்பது.

6-ஆம் அதிபதிஉச்சம்பெற 9ஆம்அதிபதி12-ல்,
12ஆம்அதிபதி குருவுடன் கூடி 2-ல்,சந்திரனுக்கு 2ஆம் அதிபதி பலம்மற்று இருப்பது,
8,-9-ஆம் அதிபதிகள் 12-ல்இருந்து 12-ஆம் அதிபதியை பார்ப்பது,
சந்திரனுக்கு6-ஆம் அதிபதி உச்சம் பெற,7-ஆம் அதிபதி 12-ல் லக்னாதிபதி 2-ல்,
6-9அதிபதிகள் கூடி பலமடைய ,12-ஆம் அதிபதி 2ல்
6-ஆம் அதிபதி உச்சம் பெற்று 2-ஆம் அதிபதி யுடன் கூடி 12-ல்,
குருவிற்கு 6-ஆம் அதிபதி பார்வை ஏற்பட்டால் கடன் தொல்லை என்றும் இருக்கும்.

செல்வ சேர்க்கை


ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 1---2---3---ஆகிய இடங்களில் குரு,சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் தொடர்ந்து இடைவிடாமல் இடம் பெற்று இருந்தால் அந்த ஜாதகி உயர்ந்த அழகு ,தனதான்யா விருத்தி ,செல்வசேர்க்கை ,சுகவாழ்வு ஆகியவை பொருந்த வாழ்வாள்.

சுக்கிரன் பிறப்பு காலத்தில்

சுக்கிரன் பிறப்பு காலத்தில் லக்னத்துக்கு 1--4--7--10--போன்ற இடங்களில் இருந்து விட்டால் அச் ஜாதகர் செய்த பாவ புண்ணிய பலனை இப்பிறவியிலேயேஅனுபவிக்க செய்வார்.
2---5---8---11--- போன்ற இடங்களில் சுக்கிரன் இருப்பின் கடந்த பிறப்பில் செய்த பாவபுண்ணிய பலனை இப் பிறப்பில் அனுபவிக்கச் செய்வார் ,
3----6---9----12---போன்ற இடங்களில் சுக்கிரன் இருப்பின் இப் பிறப்பில் செய்த பாவபுண்ணிய பலனை வரும் பிறப்பில் அனுபவிக்கச் செய்வார்.
சுக்கிரன் தசாகாலம் ஒருவருக்கு 19 முதல் 20 வயதுக்குள் வருவது சிறப்பல்ல பல தீய வழிகளுக்கு ஆளாக்கிவிடலாம்.இதே சுக்கிர தசை 26 முதல் 34 வயதுக்குள் தொடங்குவதுமிகச் சிறப்பாகும். இக்காலம் பிற்கால வாழ்கைக்கு தேவையானவைகளை தேடி வைத்துக் கொள்ள இடம் உண்டு.
34 வயதுக்கு மேல் தொடங்கும் சுக்கிர தசை வாழ்வில் பல விதமான கஷ்ட, நஷ்டங்களை ஏற்படுத்தும்.அத்தோடு கொடுத்து கெடுக்கும் 34 வயதுக்கு மேல் தொடங்கும் சுக்கிர தசைக்காரர்களுக்கு அவரவர் ஜாதகத்தில் சுக்கிரன் ,சனி , சேர்க்கை பெற்று இருந்தாலும் ,அல்லது மகர,கும்ப நவாம்சத்தைப் பெற்று இருந்தாலும் சுக்கிர தசை பல வித சோதனைகள் தரும் தசையாக இருக்கும்.

Monday, May 12, 2014

கடன்பட்டு கலங்குபவர்கள்


5-ஆம் அதிபதிலக்னத்தில் இருப்பது.-?
12 -ஆம் அதிபதி 2 -ல், 2- ஆம் அதிபதி 6-ல் , 9-ஆம்
அதிபதிபலமற்று இருப்பது.

6-ஆம் அதிபதிஉச்சம்பெற 9ஆம்அதிபதி12-ல்,
12ஆம்அதிபதி குருவுடன் கூடி 2-ல்,சந்திரனுக்கு 2ஆம் அதிபதி பலம்மற்று இருப்பது,
8,-9-ஆம் அதிபதிகள் 12-ல்இருந்து 12-ஆம் அதிபதியை பார்ப்பது,
சந்திரனுக்கு6-ஆம் அதிபதி உச்சம் பெற,7-ஆம் அதிபதி 12-ல் லக்னாதிபதி 2-ல்,
6-9அதிபதிகள் கூடி பலமடைய ,12-ஆம் அதிபதி 2ல்
6-ஆம் அதிபதி உச்சம் பெற்று 2-ஆம் அதிபதி யுடன் கூடி 12-ல்,
குருவிற்கு 6-ஆம் அதிபதி பார்வை ஏற்பட்டால் கடன் தொல்லை என்றும் இருக்கும்.

கிரக காரகங்கள் பற்றி.


குரு
ஆண் குழந்தையோ அல்லது பெண் குழந்தையோ அதன் ஐந்து வயதுவரை குருவின் காரகாத்தால் ஆளுமை செய்யபடும்.

புதன்
5 வயது முதல் 15 வயதுவரை உள்ள பருவம் புதனின் காரகாத்தால் ஆளுமை செய்யப்படும்.
செவ்வாய்
15 வயது முதல் 22 வயது வரை உள்ள நிலை ஆண் மற்றும் பெண் பருவமடையும் வயது. இந்த நிலையில் காம குணங்கள் நிறைந்தது காணப்படும். இவர்கள் செவ்வாயின் காரகாத்தல் ஆளுமை செய்யப்படுவார்கள். செவ்வாயை போககாரகர் எனவும் அழைப்பர்.
சுக்கிரன்
திருமணம் ஆகாத பெண்கள் அனைவருக்கும் சுக்கிரன் காரகமாக அமைவார். சுக்கிரனை காமகாரகன் அல்லது களத்திர காரகன் என்று அழைப்பர்.
சூரியன்
ஒரு ஆண் குழந்தை பெற்றவுடன் அவர் சூரியனின் ககாரகமான தந்தை காரகம் வகிக்க ஆரம்பிப்பார்.
சந்திரன்
ஒரு பெண் குழந்தை பெற்றவுடன் சந்திரனின் காரகம் வகிக்க ஆரம்பிப்பார்.
ராகு
ஆண் தான் பெற்ற குழந்தைக்கு திருமணம் ஆகி குழந்தை பெற்றவுடன் பாட்டன் காரகமான ரகுவின் காரகத்தை வகிக்க ஆரம்பிப்பார்.
கேது
பெண் தான் பெற்ற குழந்தை திருமணம் ஆகி குழந்தை பெற்றவுடன் பாட்டி காரகமான கேதுவின் காரகத்தை வகிக்க ஆரம்பிப்பார்.
சனி
பாட்டன் காகரமும், பாட்டி காரகமும் உடைய மனிதர்கள் வயதான காலத்தில் சனியின் காரகமான ஆயுள் காரகமாக மற்றம் அடைகின்றனர்,.

உங்கள் கனவில் எந்த மரம் வருகின்றது?


* அரசமரம் கனவில் வந்தால் குழந்தைச் செல்வம் உண்டாகும்.
* ஆலமரம் கனவில் வந்தால் புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும்.
* பனைமரம் கனவில் வந்தால் உறவினர்களின் ஒத்துழைப்பு குறையும்.
* நெல்லி மரம் கனவில் வந்தால் ஆரோக்கியம் சீராகும்.
* வேம்பு கனவில் வந்தால் எதிர்ப்புகள் அகலும்.
* பலா மரம் கனவில் வந்தால் குடும்ப ஒற்றுமை உண்டாகும், உறவினர் பகை அகலும்.

"தன லாபம்"- யார் மூலம் கிடைக்கும்?


2ம் பாவ புத்திநாதன் நின்ற நட்சத்திரம் கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்து, 2ம் பாவத்திற்கு சாதகமான தொடர்பு பெற்றும். உப நட்சத்திரமும் சாதகமாக இருப்பின் அந்த கிரக காரகத்துவ ரீதியாக "தன லாபம்" அந்த ஜாதகர் அடைவார்.
1. சூரியன்....அரசு மூலம், அரசு அதிகாரிகள் மூலம், தந்தை மூலம் தனலாபம் கிடைக்கும்.
2. சந்திரன்....தாய் மூலம், பூமி மூலம் கிடைக்கும்.
3. செவ்வாய் ..... சகோதரன் மூலம், இயந்திரம் மூலம்,
4. புதன் ..... மாமன், செக், டிராப்ட், டாக்குமென்ட், நுண்ணிய கருவிகள் மூலம் கிடைக்கும்.
5. குரு ...... குழந்தைகள், பெரியவர்கள், சட்ட ரீதியாக, மஞ்சள் நிறம் கொண்ட பொருட்கள் மூலம் கிடைக்கும்.
6.சுக்கிரன் ..... பெண்கள், மனைவி, அழகு பொருட்கள் மூலம் கிடைக்கும்.
7. சனி..... வயதானவர்கள், சித்தப்பா,கருப்பு நிறம் கொண்ட பொருட்கள், மரச்சாமான்கள், இரும்பு பொருட்கள் மூலம் தனலாபம் கிடைக்கும்.
8. ராகு,கேது ...பாட்டன், பாட்டியை குறிக்கும். ராகு கேது நின்ற நட்சத்திரம், ராசி அதிபதியின் பலன்கள் செய்யும்.
2ம பாவ புத்திநாதன் நின்ற நட்சத்திரம்........
சரம் ராசியானால்......தன நிலை உயரும்.
ஸ்திரம ராசியானால் .... நிலையான தனநிலை கிடைக்கும்.
உபய ராசியானால் .... ஏற்றம் இறக்கம் இருக்கும்.
பூமி ராசியில் இருந்தால... தன நிலை விருத்தி அடையும்.
காற்று ராசியில் இருந்தால் ... திடீர் விரையம் ஏற்படும்.
நீர் ராசியில் இருந்தால் .... தனக்கும், தனது சுற்றதார்க்கும்
பயன்படும் வகையில் இருக்கும்.
நெருப்பு ராசியில் இருந்தால் ...சேமித்த சொத்துக்களை பிறர் அனுபவிப்பார்கள்

"கூட்டுத்தொழில்" யாருக்கு சிறப்பாக இருக்கும்?


ஒரு ஜாதகரின் தொழில் பற்றி 10ம் பாவம் மூலம் அறியலாம். அவரின் கூட்டாளி 7ம் பாவம். 7ம் பாவத்திற்கு (தொழில்) 10ம் பாவம் 4ம் பாவம் ஆகும்.
7ம் பாவபுத்திநாதன் 4 10ம் பாவங்களை தொடர்பு பெற்றால் "கூட்டுத் தொழில்" சிறப்பாக இருக்கும்.
1 7ம் பாவ புத்திநாதன் 4 10ம் பாவங்களை தொடர்பு பெற்றால் "நீண்ட காலம் கூட்டுத்தொழில்" செய்வார்கள்.
7ம் பாவபுத்திநாதன் 5 11ம் பாவ தொடர்பு பெற்றால், அவர்களின் கூட்டுத்தொழில் சந்தோசமாக இருக்கும்.
7ம் பாவபுத்திநாதன் 3 9 பாவதொடர்பு பெற்றால், கூட்டாக தொழில் செய்ய முடியாது. (நமது தொழில் 10 க்கு 12ம் பாவம் 9ம் பாவமும், கூட்டாளி தொழில் 4க்கு 12ம் பாவம் 3ம் பாவம்)
7ம் பாவபுத்திநாதன் 4 6 10 12ம் பாவ தொடர்பு பெற்றால், கூட்டு தொழில் செய்து, பிரிய வேண்டிய வாய்ப்பு வரும். ஏனெனில், 6 12ம் பாவம் செயல்படும் போது (கணவன் - மனைவி (அ) நண்பர்கள் பிரியக் கூடிய வாய்ப்பு உண்டு)
7ம் புத்திநாதன் 2 8 12 பாவ தொடர்பு பெற்றால், கூட்டுத் தொழில் மூலம் பொருளாதாரம் இழப்பு சந்திக்க நேரும்.
7ம் பாவ புத்திநாதன் 2 8 பாவங்களை தொடர்பு பெற்றால். கூட்டுத் தொழிலில் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள்.
7ம்பாவ புத்திநாதன் 6 8 12 பாவங்களை தொடர்பு பெற்றால், கூட்டுத் தொழில் மூலம், பொருளாதாரம் இழப்பு, கடன் இவைகளை சந்திக்க வாய்ப்பு உண்டு.
இதில் 7ம் பாவ புத்திநாதன் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம்
கிரககாரத்திற்கேற்ப பலன்கள் அமையும்

Sunday, May 11, 2014

திருமணம் தாமதம்

லக்னத்தில் சனி இருந்தால் அந்த பெண் விதவை ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம். குருவின் பார்வை கிடைத்தால் சில வருடங்கள் தள்ளி போகும்.
7 இல் குரு தனித்து இருந்தால் சற்று தாமத திருமணம்
குடும்ப ஸ்தானமாகிய 2ம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தாலும் சற்று தாமத திருமணம் தான்
லக்னத்தில் மாந்தி இருந்தால் அந்த ஜாதகர் வாழ்க்கையில் எதேனும் ஒரு வகையில் மணக்கவலை இருக்கும்.

முக அமைப்பு

ஜாதகத்தில் சந்திரனுக்கு 1-5-9 அல்லது 3-7-11 அல்லது 2-12ல் சுக்கிரன் இருந்தால் கண்கள் பெரியதாக அழகாக இருக்கும். கண்களைக்குறிக்கும் கிரகம் சந்திரனாகும். அழகைக்குறிக்கும் கிரகம் சுக்கிரனாகும்.
இத்தகைய முக அமைப்பு உடையவர்களுக்கு காம உணர்வு அதிகமாக இருக்கும்.எனவே சிறுவயதிலேயே இவர்கள் உடல் ரீதியாக கெட்டுப்போகும் வாய்ப்புகள் அதிகம்.பெண்களுக்கு இத்தகைய முக அமைப்பு இருந்தால் அவர்களூக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடவேண்டும்.இல்லையென்றால் அவர்களால் குடும்பத்திற்கு தலைகுணிவு ஏற்படும். திருமணம் ஆகும்வரை இவர்களை கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும்.ஆண்களுக்கு இத்தகைய முக அமைப்பு இருந்தால் அவர்கள் பெண்பித்தர்களாக இருப்பார்கள்.

உயர் கல்வி பெற


4,9- ஆம் அதிபதிகள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் பெறுவது.
9,10-ஆம் அதிபதிகள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் பெறுவது.
12ம-ஆம் அதிபதி 4-5-9ஆம் அதிபதிகள் (or)அந்த பாவங்களோடு சம்பந்தம் பெறுவது.
5-ஆம் அதிபதி லக்னம் (அ) ராசிக்கு12-ல் இருப்பது.
தசம்சத்தில் 5-லஆம்அதிபதி 9-ல்இருப்பது.
4-ஆம் அதிபதி9-12-ஆம் அதிபதிகளுடன் தசம்சத்தில் சம்பந்தம் பெறுவது.
தசம்சத்தில் 10-12-ஆம் அதிபதிகள் சம்பந்தம் பெறுவது.

தசம்சத்தில் 5-10-ஆம் அதிபதிகள் சம்பந்தம் அயல்நாட்டில் தொழிலில் ,உத்தியோகத்தைதரும்.

Friday, May 2, 2014

லக்கினம் அல்லது ராசில் குரு அமர்ந்தால் என்ன பலன்

லக்கினத்தை அல்லது ராசியில் குரு அமர்ந்தால் அது ஒரு புண்ணிய ஜாதகம்.
ஏனெனில் அங்கு இருக்கும் குரு, 5‍,7,9 ஆம் பார்வைகளால் புத்திரம்,களத்திரம் மற்றும் பிதா ஸ்தானங்களை பார்ப்பதால் மிக நல்ல வாழ்க்கையை ஜாதகர் அடைவார்
ஆனால் குரு பகை, நீசம் இல்லாமல் இருத்தல் வேண்டும்