Pages

Friday, May 30, 2014

சுக்கிரன் பிறப்பு காலத்தில்

சுக்கிரன் பிறப்பு காலத்தில் லக்னத்துக்கு 1--4--7--10--போன்ற இடங்களில் இருந்து விட்டால் அச் ஜாதகர் செய்த பாவ புண்ணிய பலனை இப்பிறவியிலேயேஅனுபவிக்க செய்வார்.
2---5---8---11--- போன்ற இடங்களில் சுக்கிரன் இருப்பின் கடந்த பிறப்பில் செய்த பாவபுண்ணிய பலனை இப் பிறப்பில் அனுபவிக்கச் செய்வார் ,
3----6---9----12---போன்ற இடங்களில் சுக்கிரன் இருப்பின் இப் பிறப்பில் செய்த பாவபுண்ணிய பலனை வரும் பிறப்பில் அனுபவிக்கச் செய்வார்.
சுக்கிரன் தசாகாலம் ஒருவருக்கு 19 முதல் 20 வயதுக்குள் வருவது சிறப்பல்ல பல தீய வழிகளுக்கு ஆளாக்கிவிடலாம்.இதே சுக்கிர தசை 26 முதல் 34 வயதுக்குள் தொடங்குவதுமிகச் சிறப்பாகும். இக்காலம் பிற்கால வாழ்கைக்கு தேவையானவைகளை தேடி வைத்துக் கொள்ள இடம் உண்டு.
34 வயதுக்கு மேல் தொடங்கும் சுக்கிர தசை வாழ்வில் பல விதமான கஷ்ட, நஷ்டங்களை ஏற்படுத்தும்.அத்தோடு கொடுத்து கெடுக்கும் 34 வயதுக்கு மேல் தொடங்கும் சுக்கிர தசைக்காரர்களுக்கு அவரவர் ஜாதகத்தில் சுக்கிரன் ,சனி , சேர்க்கை பெற்று இருந்தாலும் ,அல்லது மகர,கும்ப நவாம்சத்தைப் பெற்று இருந்தாலும் சுக்கிர தசை பல வித சோதனைகள் தரும் தசையாக இருக்கும்.

No comments:

Post a Comment