Pages

Sunday, May 17, 2015

பஞ்சமாதிபதி தசாபலன்


பஞ்சமாதிபதி தசையில் பஞ்சமாதிபதி பலவானானால் புத்திர பிராப்தியும் பந்து ஜனங்களின் ஆதரவும் மந்திரித்துவமும் வெகுமான சுக போஜனங்களும் அன்னதானமும் நல்ல கீர்த்தியும் நல்ல ஜனங்களின் ஆதரவும் உண்டாகும்

ஐந்தாமாதிபதி பலமில்லாதவனானால் அவன் தசையில் புத்திர நாசம் புத்திப்பிரமை லஞ்சம் பெறுதல் வயிர்ருந்நோய் இராஜகோபம் சுயபல நாசம் இவைகளை அடைவான் 

Sunday, May 10, 2015

வலம் புரிச்சங்கு பூஜை சிறப்பும், பலனும்..!

1.ஒரு வீட்டில் இச்சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ëந்து இருக்கும்.
2. கடலில் உள்ள ஒரு வகை நத்தையின் கழிவு மூலம் ஓடு போன்று உருவாகி வருவதே சங்கு என்றாலும் குபேரன் அருளைப் பெற்றுத் தருவது.
3. வலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்தால் நமக்கு பிரம்மகத்திதோஷம் இருப்பின் போய்விடும்.
இதையே தர்ம சாஸ்திரம். ``சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோ ஸ்ரீ! அங்க லஷணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாயுதம் தாகத்'' என்று விளக்குகிறது.
சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும்.
கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்கு அபிஷேகத்தில் நடுவில் வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருப்பார்.
4. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சங்கு நாதத்தால் ஆழ்வார்கள் பக்திப் பரவசம் அடைவதை, பேதாண்டப் பெதுவி என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றனர்.
5. வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும்.
6. செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்து விடும்.
7. அதிகக் கடன் வாங்கியவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்கும், அர்ச்சனை செய்து வர கண்ணுக்குத் தெரியாமல் கடன் தீரும். 16-வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றிட கடன் தீரும்.
8.சுத்தமான உண்மையான வலம்புரிச்சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஓடிவிடும்.
9. ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறுகிறோம்.
10. பிறந்த குழந்தைக்கு ஜுரம் வந்தால் சங்கில் நீர்விட்டு உத்ராட்சம் இட்டு அது ஊறிய நீரை மட்டும் ஊட்டி விட ஜுரம், தோஷங்கள் அனைத்தும் விலகும்.
11. பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி போட்டு அதில் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வருவதால் உணவுக்குப்பஞ்சமே வராது

இராஜ யோகம்

தருமகருமாதிபதிகளான இலக்கினத்திற்கு 9,10க்கு உடையவர்கள் இருவரும் சேர்ந்து நல்ல பாவங்களிலிருந்தால் இராஜ யோகம் ஏற்படும்
பேரி சங்க நாதங்களோடு வெண்மை பொருந்திய குடையும்  குதிரை யானை மக்கடசேனை முதலியவைகளையும் பாடகர்களால்  ஸ்தோத்திரம் பண்ணப்  பெறுதலையும் ஆனந்தவித காணிக்கைகளைக் கையிலேந்திய சிர்ரரசரகளால் துதிக்கப் படுதலையும் உடைய அசர சிரேஷ்டனாதல்     இராஜயோக பலனாகும்

இலக்கினாதிபதி தசாபலன்

இலக்கினாதிபதி பலமாயிருந்தால் அவர் தசையில் ஜாதகன் பாலசந்திரனைப் போல் தினம் தினம் விருத்தியடைவான் எவ்வாறெனில் அவன் தன்னைச் சார்ந்தவர்களுக்குத் தலைவனாகவும் சுகமனுபவிப்பநிமாகவும் நல்ல ஆரோக்கியமுள்ள சுக தேகியாகவும் நல்ல தேஜஸ் உடையவனாகவும் மேன்மேலும் அபிவிருத்தியடைபவனாகவும் இருப்பான்

இலக்கினாதிபதி சத்துரு மூட நீச க்ஷேத்திரத்திலோ 6,8,12லோ இருந்தால் அவர்தசையில் பிறரால் நிர்ப்பந்தத்தையும் அஞ்ஞாத வாசத்தையடைவதோடு பயம் வியாதி சுவாதீனமின்மை ஒருவர் வேலைக்குத் தான் ஆசையுறல் இடமாறல் ஆபத்துக்குள்ளாதல் ஆகிய அவஸ்தைகளைப்  பெறுவான் 

பன்னிரு பாவ தசாபலங்கள் நிர்ணயம்

மானிடரது நிர்ணயிக்கப்பட்ட பரம ஆயுள் 120 வருடங்களாகும்  அவர்தம்  கர்மவினையாலும் சுருமங்களையும் கீழ்க்கண்டவாறு நவக்கிரங்களுக்கு பிரித்துக் கொடுக்குப் பட்டுள்ளது
சூரியன்  6வருடம்
சந்திரன்  10 வருடம்
செவ்வாய்  7வருடம்
ராகு 18வருடம்
குரு 16 வருடம்
சனி 19வருடம்
புதன் 17வருடம்
சுக்கிரன் 20வருடம்
கேது 7வருடம்
ஆக மொத்தம் 120 வருடம் 

கல்வி

இன்றைய காலகட்டத்தில் ஒருவருக்கு தன்னுடைய ஜீவனத்தித்ற்கு , சுக போக எதிர்கால வாழ்விற்கு, சமூகத்தில் மதிப்புடன் வாழ மற்றும் நல்ல குணநலன்களை பெற்று வாழ்கையில் திருப்புமுனையாக அமைத்து கொடுப்பது இந்த கல்வி ஆகும். எனவே தற்போது இதற்கு முக்கியத்துவம் கொடுத்து தங்களுடைய குழந்தைகளை முன்னணியில் உள்ள கல்வி நிறுவனத்தில் பல லட்சம் செலவழித்து படிக்க வைக்கின்றனர். ஆனால் இதெல்லாம் எதற்கு? தன் குழந்தைகளை DOCTOR,ENGGINEER,PROFESSIONAL மற்றும் இதர துறைகளில் படித்தவுடன் CAMPUS INTERVIEW ல் வேலை கிடைக்கவேண்டும் என்றா நோக்கத்தில் தான். ஆனால் இதெல்லாம் நடக்கிறதா? பலருக்கு தோல்வி ஏற்படுகிறது இதற்கு காரணம் பல உண்டு அவற்றில் ஒன்று ஜாதகத்தை ஆராயாமல் ஜாதகரின் திறமைகளை அறியாமல் செய்யப்படும் முடிவும் ஒன்று ஆகும்.
எனவே PRE KG சேர்க்கும் முதலே குழந்தைகளின் ஜாதகத்தினை ஆராய்ந்து அவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பது, நல்ல நாள் பார்த்து ஆரம்ப கல்வியை கல்வி நிறுவனத்தில் ஆரம்பிப்பது, இதெல்லாம் கணக்கில் கொண்டு பெற்றோர்கள் செயல் படும் போது குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வாய்ப்புகள் ஏற்படுகிறது
அதற்கு ஜாதகத்தில் ஆராயவேண்டியவைகள் :
• 2 மிடம் ஜாதகரின் ஆரம்ப கல்வியை குறிக்கிறது
• 4 மிடம் பட்டப்படிப்பையும்
• 8 மிடம் தொழில் நுணுக்கக் கல்வியையும்
• 9 மிடம் உயர் கல்வி – PG COURSE
• 12 மிடம் ஆராய்ச்சி கல்வி
• 5 மிடம் திறமை,புத்திசாலித்தனம், ஞாபக சக்தி ஆகியவை குறிக்கும்
• மேலும் கல்வி காரகன் புதனின் நிலை, மனோ காரகன் சந்திரனையும், மூளை காரகன் குருவையும் ஆராய்ந்து பலன் உரைக்க வேண்டும்
• புதன் நீசமாக கூடாது. அந்த நீசா புதனை பாவ கிரகத்தின் பார்வை இருக்க கூடாது. 2ல் நீசக்கிரகம் இருக்ககூடாது
• புதன் நீசமானாலும் சில கிரக அமைப்பினால் கல்வியை ஏற்படுத்தி கொடுத்து விடும் உதாரணம் : மீனத்தில் புதன் நீசமடைந்து அங்கு குரு பகவான் ஆட்சி பெறும் போது நீசபங்கம் ஆகி புதன் பலம் பெற்று கல்வியை அளித்து விடுவார்.
• புதன் 2 மிடத்தில் இருப்பது கல்வியை ஏற்படுத்தி கொடுத்து விடும் என்பது விதி. புதனுடன் சூரியன் அல்லது குரு சேர்ந்து இருந்தால் நல்ல கல்வியை ஏற்படுத்தி விடும். ஆனால் தீய கிரகங்கள் தொடர்பு கல்வியை கெடுத்து விடும் அல்லது தடங்கல்களை ஏற்படுத்திவிடும்.
• எந்த லக்கனமாக இருந்தாலும் புதன் கன்னியில் இருந்தால் கல்வியில் உயர்வு உண்டு ஆனால் பாவக சக்கரத்தில் மாறாமல் இருந்து பரலின் எண்ணிக்கை 24 க்கு குறையாமல் இருந்து பாவ கிரகத்தின் தொடர்ப்பு இல்லாமல் இருக்கவேண்டும்
• பாவகர்த்தாரி தோஷத்தில் புதன் இருக்ககூடாது
• காரகன் பலமாக இருந்தாலும் காரகத்தின் வீடுகள் கெட்டுவிடக்கூடாது.
எனவே இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு ஜாதகரின் கல்வி நிலையை ஆராய்ந்து தேர்ந்தெடுக்கும் கல்வி நல்ல சிறப்பையும் அதற்கு உண்டான உத்தியோகம் / தொழிலை ஏற்படுத்தி கொடுத்து அவர்கள் வாழ்க்கை சுமை இல்லாமல் சுமூகமாக சிறக்க வழிவகை செய்யும்

Sunday, May 3, 2015

கோசார குரு பலன்

கோசார குரு இலக்கணத்திற்கு
1,2,4,5,6,9,10,11,இல் வரும் காலம் உடல் நலம் செல்வம் புகழ் வெற்றி வாய்ப்புகள் எண்ணங்கள் நிறைவேறும் வாய்ப்பு பகை வெல்லும் நிலை கல்வியில் தேர்ச்சி புகழ் இவை ஏற்படும் 3,8,12இல் வரும் காலம் அனைவருடனும் சண்டை சச்சரவு பகைவரால் தொல்லை வியாதிகள் நோக்கமில்லா  செயல்பாடுகள் இவை ஏற்படும் 

குருபகவான் வக்கிரம்

குருபகவான் பிறந்த ஜாதகத்தில் வக்கிரம் பெற்று 2,4,5,7,9,11இல் இருப்பது அதிர்ஷ்டமே .1,3,6,8இல் இருப்பது வியாதிகளைத் தரும்

கிரகங்கள் ஒரு நாள் செல்லும் தூரம்


சந்திரன் -பாகையில் இருந்து 15 பாகை வரை
சூரியன் -1 பாகை
சனி -2 நிமிடம்
குரு -5.15 நிமிடம் வரை
செவ்வாய் -30.45 .நிமிடம் வரை
புதன் -66.10  நிமிடம் வரை
சுக்கிரன் -62.82. நிமிடம் வரை
யுரானஸ் -42. செகண்ட்
நெப்டியூன்-24. செகண்ட்

Sunday, April 26, 2015

கணவன் மனைவி மரணம்

8ஆம் இடத்தில் பாபர் இருந்தால் புருஷன் மரணமடைவான் அதுபோல் புருஷனுக்கு 2ல் பாபர் இருந்தால் ஸ்திரீ மரனாமடைவால் 

நீசபங்க ராஜயோகங்கள்


எந்தக் கிரகம் நீசமடைந்துள்ளதோ அந்தநீச ராசி நாதனாவது அக்கிரகமாவது சந்திர எக்கிரகத்திற்கு இருந்தால் தருமவானும் சக்கரவர்த்தியும் ஆவான்

சூரியன் துலாத்தில் நீசம் பெற்றாலும் அந்தநீச ராசிக்கு உச்ச நாதனான சனி சந்திரனுக்குச் கேந்திரத்தில் இருந்ப்பதால் சூரியன் நீசபங்க ராஜயோகம் கொடுக்கும்

நீசனிருக்கிற ராசி நாதனாவது அல்லது அந்நீச ராசிக்கு உச்ச நாதனாவது இலக்கினத்திற்குக் கேந்திரத்தில் இருந்தால் அவன் அனைத்து ராஜாக்களாலும்  வணங்கப் பெறும் சக்கரவர்த்தியாவான்

ஓர் கிரகம் ஒரு ராசியிலிருந்து அவ்விராசிநாதானால் பார்க்கப் பெற்றால் கீர்த்தியுள்ள அரசனாவான் அவ்விதமாய் நல்ல ஸ்தானங்களில் இருந்துவிட்டால் அரசனாவதற்குத்  தடையேயில்லை

நீச கிரகத்திற்கு நீச ராசிநாதணும் அந்நீச கிரகத்திற்கு எது உச்ச ராசியோ அவ்விராசினாதணும் சம்மந்தப்பட்டாலும்  ராஜாவாவான்

சுக்கிரன் கன்னியில் நீசம் நீச ராசிநாதன்  புதன் சுக்கிரனுடைய  உச்சராசியான மீனத்திற்கு ராசிநாதன் குரு இப்புதணும் குருவும் ஒரு ராசியில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் இருந்தாலும்  நீசபங்க ராஜ யோகமாகும்   

கேள்வி அரசன் யார்

குருவினாலாவது புதனாலாவது இலக்கினாதிபன் பார்க்கப் பெற்றால் கல்வி கேள்வியில் அரசனாவான் 

Sunday, April 12, 2015

அழகிய நல்ல வீடு

இலக்கினத்திற்க்குக் கேந்திர திரிகோண பாகங்களில் எத்தனைக் கிரங்கள் இருக்கின்றதோ அத்தனை அழகிய நல்ல வீடுகள் ஜாதகனுக்கு உண்டு 

சிறந்த கொடையாளி

இரண்டாவது பாவத்தில் சந்திரனிருந்து சுக்கிரனால் பார்க்கப்பட்டால் ஜாதகன் சிறந்த கொடையாளி  

தனம்

இலக்கின பாவமும் 2வது பாவமும் பரிவர்த்தனமானால் அதிகப் பிரயாசையில்லாமல் ஜாதகனுக்கு தனம் வந்து சேரும்

Sunday, April 5, 2015

தாம்பத்திய. சுகம்

லக்னத்திற்கு 12 ல் ராகு அல்லது கேது அல்லது செவ்வாய் அல்லது சனி இருந்தாலும் அல்லது பார்த்தாலும், தாம்பத்திய. சுகம் திருப்திகரமாக. இருக்காது, சுக்ரன் நன்றானால் ஓரளவு நன்றாகும். 

Saturday, April 4, 2015

கண் நோய்

12,2 இவ்விடங்களைச் சனி  அல்லது செவ்வாய் பார்த்தாலும் அல்லது அவ்விடங்களில் இருந்தாலும் சூரிய சந்திரர்களில் அவ்விதம் 12,2 மிடங்களில் இருந்தாலும் அல்லது அவ்விடங்களைப் பார்த்தாலும்
கண்நோய் பாதிக்கப்பருவான்

பொதுவாக இலக்கினத்திற்கும் இருபிறம் பாபக்கிரகங்கள் இருந்தால் கண் நோயால் பாதிக்கப்படுவான் 

7ம் 6ம் இடம் பலன்


7 ஆமிடத்தில் ராகு சூரியன் இவர்கள் சேர்ந்திருப்பின் பெண்கள் சகாசத்தால் பொருள் நாசமேற்படும்

Saturday, March 28, 2015

காம்பயோகம்

காம்பயோகம்
ஒரு ஜாதகத்தில் 2ம் இடத்தில் குரு இருக்க, 4ம் இடத்தில் சுக்கிரன் இருக்க, 7ம் இடத்தில் செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்ந்து இருக்க, லக்கினாதிபதி வலுப்பெற்றிருந்தால் அதற்கு "காம்பயோகம்" என்று பெயர். இந்த யோகம் இருக்கப்பெற்றவர்கள், வாகன வசதி, மாளிகை போல வீடு, அழகான அன்பான மனைவி, நல்ல குழந்தைகள், வாக்கு வன்மை போன்ற பலன்கள் உண்டாகும்.

அனுசம்

அனுசம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்
தாமரை பூப்போல் தழைந்த முகமும்
நீண்ட மூக்கும், உயர்ந்த கண்களும்,
பூரித்த கொங்கையும்,
புதுமலர் மணமும்,
தத்தைபோல் சொல்லும் சுத்த முடைமையும்
மனமகிழ் அன்பும் உடைய தெய்வதம்
அனுஷ நாளில் பிறந்தவள் அறிக ,!

ஆண்மை குறைவு! வருமுன் காப்பது எப்படி?


ஆண் மலடு நீங்க:-
அரச விதைதூள் மலத்தினை நீக்கும்
ஆண்மை குறைவு நீங்க:-
மாதுளம் பாசம் இரவில் தினந்தோறும் சாப்பிடவும்
இழந்த இளமையை பெற:-
அமுக்கிராபொடி கசகசா, பாதாம் பருப்பு, சாரப்பருப்பு சேர்த்து சாப்பிட்டு வரலாம்
ஆண்மை பெற:-
சுரைக்காய் விதைகளை கருப்பட்டி அல்லது சர்க்கரை சேர்த்து 10 கிராம் உண்டு வரலாம்.
மருந்துகலாக பெறலாம்......

பெண் ருதுவாகும் கிழமைகளின் பலன்கள்


திங்கள்
திங்கள் கிழமையில் ருதுவாகும் பெண்கள் சந்திரனை ஒத்த அழகுடையவர்கள். அறிவிற் சிறந்தவர்கள் சற்றே பூசினாற் போன்ற உடல்வாகு உடையவர்கள். நீளமான கூந்தலை உடையவர்கள்.தங்களை தாங்களே அலங்கரிப்பதில் ஆர்வமுடையவர்கள். குளிர்ச்சியான இடத்தில் வசிக்கவே விரும்புவார்கள்.
செவ்வாய்
செவ்வாய் கிழமையில் ருதுவாகும் பெண்கள் ஒல்லியான உடல்வாகு உடையவர்கள். சிவப்பு நிறமுடையவர்கள்.கூந்தல் அடர்த்தி குறைந்த அளவே உள்ளவர்கள். உஷ்ணமான உடம்பை கொண்டவர்கள்.
எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள்
புதன்
புதன் கிழமை ருதுவான பெண்கள் அறிவிற்சிறந்தவர்கள். கணிதத்தில் வல்லர்கள்.ஓரளவு அடர்த்தியான முடியை உடையவர்கள். புகுந்த வீட்டில் குடும்பமே மெச்ச கூடிய பெண்ணாக இருப்பார்கள். எந்த சூழ்நிலையையும் திறம்பட சமாளிக்க கூடிய திறமை பெற்றவர்கள்.
வியாழன்
வியாழக் கிழமை ருதுவான பெண்கள் சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கையுள்ள குடும்பத்தில் பிறந்தவர்கள். தெளிவான அறிவு பெற்றவர்கள். இவர்கள் செய்யும் அனைத்துச் செயல்களுக்குப் பின்னூம் ஒரு காரணம் இருக்கும்.
வெள்ளி
வெள்ளிக் கிழமை ருதுவான பெண்கள் மிகுந்த கர்வம் உடையவர்கள். அடுத்தவர்களை எளிதில் தூக்கியெறிந்து பேசும் குணமுடையவர்கள். இவர்களில் சிலரே தங்களை அலங்கரிப்பதில் ஆர்வமுடையவர்கள்.பிறந்த இடத்தை விட வசதியான இடத்தில் வாழ்க்கை படுபவர்கள்.
சனி
சனிக் கிழமையையில் ருதுவாகும் பெண்கள் பெரும்பாலும் கருப்பு அல்லது மாநிறம் உடையவர்கள். எத்தகைய வறுமையிலும் வாழ்க்கை நடத்துவார்கள்.சராசரியை விட சற்றே குள்ளமாக இருப்பார்கள். பிறந்த இடத்தை விட வசதி குறைவான இடத்தில் வாழ்க்கை படுவார்கள்.

ஞாயிறு
ஞாயிற்றுக் கிழமையில் ருதுவான பெண்கள் அடுத்தவர்களை அடிமைப் படுத்தும் எண்ணம் உடையவர்கள். இவர்களும் குறைவான முடி உள்ளவர்களே. அனைவரும் இவர்களை எப்போதும் புகழவேண்டும் என்று விரும்புவர்கள். இவர்கள் வாழ்க்கைப் படும் இடத்தில் இவர்கள் சொல் மட்டுமே எடுபடும்.

திருவோணம்

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்
சிவந்த மேனியும் செல்வமும் கூடி
பலனில் லாதசொல் பாராட் டாமையும் ஆழ்ந்த அறிவும் அன்பும் நிறைந்து
சினங்கொண்டாலும் சீக்கிரம் தணிந்து
நாயகன் தானே நாடிடும் தெய்வதம்
திருவோ ணத்தில் பிறந்தவள், தெளிக !

உத்திரட்டாதி

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்
பட்டியல் தூண்போல் பருத்த தொடையும்
ஒன்றையும் விரும்பி ஒடாத குணமும்
மழலைப் பேச்சும்
மலர் போல் பாதமும்
அழகிய கணைக்கால் அளவுள்ள உடம்பும்
நாயகன் தனயே நயக்கும் அன்பும்
கள்ளம் கபடம் காடுகள வின்றி
மனதைத் திறந்து வார்த்தைகள் வீசும்
உத்தமத் தெய்வதம் உத்தரட் டாதி
நாளில் பிறந்த நன்மகள் ,அறிக!

தெய்வ தத்துவ லட்சண பெண்களின் ஆசைகள்
முதல் நட்சத்திரமான ஹஸ்தம்
ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்
புளிப்போடு கூடிய உணவுகளை உன்ன விரும்புவாள்
நல்ல விஷயங்களையே பேசுவாள்

இவள் பிறந்த இடத்திலும் புகுந்த இடத்திலும் செல்வம் கொழிக்கும்
நல்ல குணம் படைத்தவள்
தாமரை மொட்டுப்போல் கொங்கை இருக்கும்
வளமான பரந்த கண்கள் இருக்கும்
மற்றவர்களைப் பற்றிப் புகழ்ந்து பேசுவாள்

பெண் நட்சத்திரங்களான ஹஸ்தம்,மிருகசீரிடம்,திருவாதிரை, ரோகிணி


இவர்களின் ஆசைகள்
சிவப்பு சேலை கட்டுவதயே அதிகம் விரும்புவாள்.
இனிப்பு அதிகம் சாப்பிடுவார்கள்.
காலை பொழுதில் உறங்குவார்கள்
நல்ல குணம் உடையவர்கள்
செண்டு பூசிக் கொள்வதில் ஆசை உடையவர்கள்
தனது கணவனோடு தனியாகவே வாழ விரும்புவாள்.

ரோகிணி

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த பெண் உடம்பு மாசு மருவில்லாமல் சுத்தமாக இருக்கும்.
ஆனால் கடுமையான கோபக்காரி.
காடுகளிலும்,பூந்தோட்டங்களிலும் சுற்றி வர ஆசைப்படுவாள்.
தன் கணவனைவிட மற்றவர்களைச் சேருவதயே விரும்புவாள்
யாரிடமும் நிலையான அன்பிருக்காது.
கபடம் நிறைந்தவள்.
மிகப்பெரிய பால் சொம்புபோல் தனம் இருக்கும்.

மிருகசீரிடம்

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்
கருத்து பெருத்த வாய் உடையவள்
கருணை இல்லாதவள்
சிலருக்கு சோறு கூடப் போடமாட்டாள்
வீட்டில் அமைதியாக ஆனந்தமாக இருக்க மாட்டாள்
அடிக்கடி வெளியே நடப்பாள்
அறிமுகமான அனைவரிடமும் பேசுவாள்
புளிப்பு மிகவும் பிடிக்கும்
மிகவும் பெரிய தனங்கள் தோள்வரை உருண்டு இருக்கும்

திருவாதிரை

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு மறைவிடத்தில் ரோமம் அதிகமாய் இருக்கும்.
ஆனால்
அண்டி வருபவர்களுக்கு உபகாரம் செய்வாள்.

அழகாய் சுத்தமாக இருப்பாள்.
புருசனுக்கு நல்லதயே செய்வாள்.
இவள் பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
ஆனால்
ஆழமான மனம் உடையவள்.

உறவு முறைகளில் ஒரு சில விதிகள்

1) 5 -ம் இடத்தை குரு பார்த்தால் ஒரு மாமன் சிறப்பு.
2) புதன் மறைந்திருந்து சனி பார்த்தால் மாமன் வர்க்கம் 3-க்கு மேல்.
3) 3-ஆம் அதிபதியை சனி பார்த்தால் உடன்பிறப்பு - 5- பேர்.

மாந்தி நன்மை & தீமைகள்

மந்தன் என்பவன் சனி, அவனுடைய புதல்வன் மாந்தி, சனிக் கிரகத்தில் இருந்து வெளிவந்தவன் என்று அர்த்தம். அவனுக்குக் குளிகன் என்றும் பெயர் உண்டு ! ஜாதக பலன் சொல்லும்போது, மாந்தியையும் அதாவது குளிகனையும் சேர்த்துச் சொல்ல வேண்டும் என ஜாதகாதேசம், ஜாதக பாரிஜாதம் முதலான ஜோதிட நூல்கள் பரிந்துரைக்கின்றன.
சூரியன், சனி, செவ்வாய் ஆகியோரைப் போல், பாப கிரகங்களில் அடங்குபவன்; ஆகவே, குளிகன் இருக்கும் ராசிநாதன், அவன் சுபனாக இருந்தாலும், குளிகைச் சேர்க்கையால் பாபியாக மாறுவான் என்கிறது ஜோதிடம். உதாரணமாக, குளிகன் இருக்கும் ராசிக்கு உடையவன், ஆண் ஜாதகத்தில் 7ல் இருந்தால் மனைவியை இழப்பான் என்றும், பெண் ஜாதகத்தில் 7ல் இருந்தால் கணவனை இழப்பாள் என்றும் சொல்வர் (மாந்திராசீச்வரோவா). திருமணப் பொருத்த விஷயத்தில், கேரள அறிஞர்கள் இன்றைக்கும் குளிகனையும் சேர்த்துப் பலன் சொல்கின்றனர். அனுதினமும் குளிகன் உதிக்கும் வேளையை நாம் தவிர்ப்போம். ராகு கால அட்டவணை போல், குளிகை கால அட்டவணையையும் குறிப்பிடுகிறது பஞ்சாங்கம். நல்ல காரியங்களுக்கு ராகுவைத் தவிர்ப்பது போல், குளிகனையும் தவிர்ப்பது உண்டு. முகூர்த்த சாஸ்திரம், குளிகை காலத்தைத் தவிர்க்கச் சொல்கிறது. முற்பிறவியின் கர்மவினைப் பலனை, காலம் அதாவது வேளை நம்முடன் இணைக்கும். காலத்துடன் இணைந்த மாந்தி எனப்படும் குளிகனுக்கும் கர்மவினையை வெளிப்படுத்துவதில் பங்கு இருப்பதால், பலன் சொல்லும் விஷயத்தில் அவனையும் கவனிப்பது பொருந்தும். சனியின் புதல்வன் குரூரன், துஷ்டன்; எதையும் அழிக்கும் இயல்பு கொண்டவன்; பாம்பு வடிவில் தோன்றுபவன்; கண்ணுக்கு இடுகிற மை நிறத்தில், கருநீல நிறத்திலானவன். வட்ட முகமும், சிவந்த கண்களும், நீண்ட பற்களும் (த்ம்ஷ்ட்ரம்) கொண்டு, பயமுறுத்தும் தோற்றத்தைக் கொண்டவன் என்கிறது ஹோரா சாஸ்திரம். அவனால் ஏற்படும் இன்னல்களை அகற்ற குளிக சாந்தியைப் பரிந்துரைக்கின்றன பரிகார நூல்கள். அவனுடைய காயத்ரியைச் சொல்லி (குளிக காயத்ரி) வழிபட்டால் நன்மை என்கிறது சாந்திமயூகம்.
பிரஸ்னம் எனும் ஜோதிடப் பிரிவு, குளிகஸ்புடத்தைச் சேர்த்துப் பலன் சொல்கிறது. மரணத்தை வரையறுக்க, மரண குளிகனைக் கவனித்து முடிவு எடுப்பார்கள். த்ரிஸ்புடம் எனும் பிரிவில் குளிகஸ்புடத்துக்கும் பங்கு உண்டு. ஞாயிற்றுக்கிழமை, சூரியோதயத்தில் இருந்து 26 நாழிகையில் தோன்றுவான் குளிகன். நான்கு நாழிகை குறைந்து, அடுத்தடுத்து வரும் கிழமைகளில் (26ல் இருந்து 22, அடுத்து 18,14,10,6,2) என சனிக்கிழமை வரை உதயமாகும் வேளையை அறிந்து, ஜாதகத்தில் இருக்கும் ராசியில் இடம் பிடித்துவிடுவான். அவன், லக்னத்தில் இருந்தால் சிந்தனை வளம் குறையும்; பாப கிரகத்துடன் இணைந்தால், ஏமாற்றுபவனாக மாறுவான்; அதிக ஆசையால் சிக்கித் தவிப்பான். இரண்டில் இருந்தால், புலன்களின் வேட்கையைத் தணிப்பதில் முனைப்புக் காட்டுவான். அங்கே, பாப கிரகத்துடன் இணைந்தால், ஏழ்மையில் தவிக்கச் செய்வான். 3ல் இருந்தால், அந்த ஜாதகதாரர் மிதப்புடன் தென்படுவார்; உடன்பிறந்தாரை இழப்பார்; பணம் ஈட்டுவதில் கவனம் செலுத்துவார். தேக ஆரோக்கியமின்றி இருப்பார். 4வது வீட்டில் தென்பட்டால், கல்வி, மகிழ்ச்சி, வீடு, நிலபுலன்கள் ஆகியவற்றை இழக்கச் செய்வான். 5ல் இருந்தால், மனதின் பலத்தை இழக்க நேரிடும்; தவறான செயல்களில் ஈடுபடுவர்; பிள்ளைச் செல்வத்தைக் குறைத்து விடுவான் குளிகன். 6ல் இருந்தால், எதிரிகளை அழிப்பான்; செப்படி வித்தை, மாயாஜாலம் ஆகியவற்றைக் கையாள்வான். 7ல் இருந்தால், சண்டைச் சச்சரவை ஏற்படுத்துவான். தரம் தாழ்ந்த மனைவியைப் பெற நேரிடும்; செய்நன்றியை மறக்கச் செய்வான். 8ல் இருந்தால், கண்கள் மற்றும் முகத்தின் அழகை இழக்க வாய்ப்பு உண்டு. 9ல் இருந்தால், தந்தை மற்றும் பெரியோரை வெறுக்க நேரிடும். 10ல் இருந்தால், சூடுசொரணை இல்லாதவராக மாற்றுவான்; தரத்துக்குச் சம்பந்தமில்லாத வேலையில் காலம் கடத்துவான். 11ல் இருந்தால், செல்வம், புகழ், வெகுமதி, வாழ்வில் உயர்வு, பெருந்தன்மை, சமூக அங்கீகாரம் ஆகியவற்றை அளிப்பான். 12ல் இருந்தால், ஆண்டியின் நிலையை ஏற்படுத்துவான்; அடுத்தவரிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளுவான். குளிகன், 11ல் மட்டும் நல்லவன்; மற்ற வீடுகளில் அவன் கெடுதலையே வழங்குவான் எனச் சுருக்கமாகச் சொல்வர். 11ல் அவன் ஆகலாம்; மற்ற பதினொன்றில் அவன் ஆகா என்கிற சொல்வழக்கு உண்டு. ஆனால் ஒன்று... அவனுடன் இணைந்த கிரகங்களின் சேர்க்கையில், குளிகை பலம் மாறுபடும் என்பதை மறக்கக்கூடாது.
வலுவான கிரகங்களுடன் இணையும்போது, குளிகனின் பலன் மங்கிவிடும். ஷட்பலம், ÷ஷாடசபலம் ஆகியவற்றை ஆராயும்போது, குளிக பலனின் மாற்றத்தை அறியலாம். ஆழமான சிந்தனையின் அடிப்படையில், கிரகங்களின் தராதரத்தைச் சீர்தூக்கிப்பார்த்து, கூட்டுப்பலனை வெளியிடும் தருணத்தில், குளிக பலன் மாறுபாட்டைச் சந்திக்கும். குளிகன், சூரியனுடன் இணைந்தால், தகப்பனை வெறுப்பான்; சந்திரனுடன் இணைந்தால், தாயாருக்குத் துயரத்தைத் தருவான். செவ்வாயுடன் இணைந்தால், சகோதரனை இழப்பான்; அல்லது, வெறுப்பான். புதனுடன் இணைந்தால், மனநலம் குன்றும்; குருவுடன் இணைந்தால், நன்னடத்தை மறையும். சுக்கிரனுடன் இணைந்தால், தரம்தாழ்ந்த மனைவியுடன் வாழ்வான்; தரம் தாழ்ந்த பெண்களின் சேர்க்கையில் தனது உடல்நலனை அழித்துக் கொள்வான். சனியுடன் இணைந்தால், உலகவியல் இன்பத்தை அனுபவிப்பான். ராகுவுடன் இணைந்தால், ஈவு இரக்கம் இல்லாதவனாக மாறி, விஷம் வைத்து பிறரை அழிக்கவும் துணிவான். கேதுவுடன் இணைந்தால், நெருப்பு மூட்டிப் பொருட்களை அழிக்கவும் தயங்கமாட்டான். அவனது முடிவும் சில தருணங்களில் நெருப்பில் சேர்ந்துவிடும்.
குளிகன் இருக்குமிடத்தில் எந்த நட்சத்திரத்தின் தொடர்பு இருக்கிறதோ, அந்த நட்சத்திரத்தில் விஷக் கடிகையும் சேர்ந்திருந்தால், அரசனும் ஆண்டியாவான். குளிகோதய வேளையின் சேர்க்கை, பல கிரகங்களின் பலன்களை மாற்றி அமைக்கக் காரணமாகிறது. கண்ணில் இருக்கும் விழி சற்றே நகர்ந்திருந்தால், முகத்தின் மொத்த அழகையும் பாதிக்கும். திக்குவாய் சொல்லழகை இழக்கச் செய்யும். நீளமான கழுத்து, உடலழகை பாதிக்கும். ஏழ்மை வாட்டி வதைக்கும்போது, புத்திசாலியும் தவறு செய்வான். அதுபோல் குளிகனின் சேர்க்கை, விபரீத பலனையே தரும் என்பது ஜோதிடத்தின் கணிப்பு. குளிகனுடன் இணைந்த புதன், குளிக ராசிக்கு உடையவன் புதன் அல்லது குளிக ராசிக்கு உடையவனுடன் (மற்ற கிரகங்களுடன்) புதனின் சேர்க்கை, பார்வை ஆகியன இருப்பின், மன நலம் அற்றவர்களாக மாற்றிவிடும். அறிவு, சிந்தனை வளம் பெருக, புதனின் பங்கு உண்டு. அங்கு குளிக சேர்க்கை மன வளத்தைச் குன்றச் செய்யும். படிப்பில் ஈடுபாடு இன்மை, பாடங்கள் மனதில் பதியாதது, பதிந்தது நினைவுக்கு வராமல் தடுமாறுவது, அபஸ்மாரம், காக்காவலிப்பு, ஆராயும் திறன் இல்லாத நிலை, பிறருடன் இயைந்து பழக முடியாத குணம், எதிலும் பயம், பதற்றம், நம்பிக்கையின்மை ஆகிய அனைத்தும் குளிகன் சேர்க்கையில் விளையும் என்கிறது ஜோதிடம்.
பல விஷயங்களில் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி வெற்றி காண்பவர் கூட, குறிப்பிட்ட விஷயத்தில் மட்டும் சுணக்கத்துடன் இருப்பார்கள். உலகவியலில் கொடிகட்டிப் பறப்பவன், தாம்பத்தியத்தில் சூன்யமாக இருப்பான். மேதைத்தனம் குன்றி, எதையும் கிரகிக்கும் தகுதியை இழந்து, குழந்தை போல் முதிர்ச்சி அடையாத நிலையில் இருப்பார்கள். இவை எல்லாமே குளிகனின் செயல்கள்தான் ! மனதில் தோன்றும் எண்ணங்களையும், நிகழ்வுகளையும் வெளியே இருப்பதாக நினைத்து மனம் கலங்கும். நிலையும் அவனது சேர்க்கையில் நிகழும். இல்லாத சப்தம் காதில் விழுவதாகச் சொல்லி, அந்த ஒலி தம்மைத் துன்புறுத்துவதாக நினைத்து மனப்பிரமையில் வாடும் நிலைமையும் அவனுடைய அட்டகாசம்தான் ! ஆக, மன வளத்தைப் பல கோணங்களிலும் சிதறடிக்கும் திறன் அவனுக்கு இருப்பதால், மனதை ஆராயும் விஷயத்தில் குளிகனைப் பற்றிய தகவலும் சரியான முடிவுக்கு உதவும். ஆகவே, அவனைச் சேர்த்துப் பலன் சொல்வது பொருந்தும். இதனை பிரச்னை மார்க்கம், பிரச்னானுஷ்டான பத்ததி போன்ற நூல்கள் பரிந்துரைக்கின்றன. காலத்தின் அறிவை ஜோதிடம் புகட்டும். காலத்தில் அடங்கியுள்ள அனைத்தும் அதன் வடிவத்தில் அடங்கும். குளிகனும் அதில் அடங்கியிருப்பதால், அவனையும் கவனித்து முடிவுக்கு வருவதே உத்தமம் என்றனர் முன்னோர்கள். அவனது செயல்பாடுகளையும் விளக்கியுள்ளனர். ராகுகேதுவுக்கு மற்ற கிரகங்களின் தகுதி இல்லையாயினும், காலத்துடன் அவை இணைந்திருப்பதால் சேர்த்துப் பலன் சொன்னார்கள். அதுபோல், குளிகனையும் சேர்த்தால் தெளிவான பலன் கிடைக்கும்; ஏமாற இடமிருக்காது !
ராகு காலத்தையும் குளிகை காலத்தையும் கவனித்துப் பழக்கப்பட்ட நமக்கு, பிறந்த வேளையில் குளிகன் இருப்பதால் விளைகிற நன்மை தீமைகளை அறிந்து செயல்படுவது எளிது. நவக்கிரகங்களைப் போல், குளிகனும் வழிபடுகிற கிரகமாக இருப்பதால், அவனை வழிபடுவது சிறப்பு. கும் குளிகாயநம: எனும் பீஜாட்சர மந்திரத்தைச் சொல்லி, அவனுடைய உருவத்தை 16 உபசாரங்களுடன் வழிபடலாம். அதேபோல், மந்தாத்மஜாய வித்மஹே ரக்த நேத்ராய தீமஹி. தந்நோ குளிக: பிரசோதயாத் எனும் செய்யுளைச் சொல்லி, 16 உபசாரங்களைச் செய்து வழிபடலாம். நீலாஞ்ஜனஸங்காசோ ரக்தா÷ஷாவிஷமபீஷணோதீர்க்க: பஞ்சாஸ்யா: பிருது தம்ஷ்ட்ரோ பயங்கர: ஸர்வதாகுளிக: என்று சொல்லி வணங்கலாம். சனியின் புதல்வன் குளிகன். எனவே, எள்ளுருண்டை நைவேத்தியம் செய்து, குழந்தைகளுக்கு வழங்கலாம். அன்றாடப் பணிகளில் சிக்கித் தவிக்கும் நாம், சனிக்கிழமையில் மட்டுமேனும் சனி பகவானுடன் சேர்த்துக் குளிகனை வழிபடலாம். உற்சாகத்தில் தினமும் வழிபட நினைத்துச் செயல்பட்டால், பிறகு நடுவில் வழிபாடு நின்றுவிடலாம். ஈடுபாடும் குறையும். ஆகவே, வாரத்தில் ஒருநாள், ஒரு வேளை.. சனியை வணங்கும் வேளையில் குளிகனையும் சேர்த்து வணங்கினால், பொறுமையுடன் வழிபடலாம்; இயலாதவர்கள், நீராடிய பிறகு குளிகன் காயத்ரியை 12 முறை ஜபித்தாலே போதுமானது !

சிறு துளி::- சனி - ராகு தரும் ராஜயோகம்

1) லக்கனத்திற்கு - 7- ல் உள்ள ராகு நிச்சயமாய் செல்வமும், வளமையும், புகழும் தருவார்.
2) லக்கனத்திற்கு - 3 - 9 -ஆம் இடத்து சனி நிச்சயம் ராஜயோகம் தருவார்.
குறிப்பு :::::-
ராகு ::-
=========
லக்கனத்திற்கு 7 -ஆம் இடத்தில் அமர்ந்த ராகு மண வாழ்வைக் கொடுத்து, பணவாழ்வைத் தரும். செல்வம், அதிகாரம், புகழ் ஆகியவற்றைத்தரும். ஆனால், உடல் , குடும்பம்,சுகம், நிம்மதி ஆகியவைகளைத் தருவதில்லை.
சனி:::-
========
3 - ஆம் இடத்தில் சனி இருக்கப் பிறந்தவர் அதிக முன்னெச்சரிக்கை உடையவராக இருப்பர். தொழிலில் வளைவு, நெளிவு, சுளிவு இருக்கும் ஆயுள் பலம், நிர்வாகம், பொறியியல் அறிவு, சன்மானம், சாஸ்திர திறமை, அரசு உதவி, ஆட்சித் திறன் ஆகியவைகள் இருக்கும். சுகவாசியாக இருப்பார். ஆனாலும், 3 - ஆம் இடத்து சனி தந்தைக்குத் தோஷம் தரும். வீண் செலவு, அயன சயன போகம் தோஷம் உண்டாகும்.
9 -ஆம் இடத்து சனியால் தந்தைக்குத் தோஷம் தருவார். சகோதர நாசம், வீண் செலவு, அவப்பெயர் ஆகியவைகள் உண்டாகும். என்றாலும், உயர்பதவி, தன யோகம் கிட்டும். முழுக்கமுழுக்க ஜாதகர் தன்னுடைய கடின உழைப்பால் வாழ்க்கையின் பிற்பகுதியிலேயே முன்னுக்கு வருவார். இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

சூரிய சந்திர கிரகணத்தில்

சூரிய சந்திர கிரகணத்தில்; குழந்தை பிறக்கினும் முதல் ருதுவானாலும் வியாதி பீடை முதலிய துன்பத்தைத் தரும்.
பூராடம் -ரேவதி -3ம் பாதம்
சித்திரை -பூசம் -2ம் பாதம் உத்திரம் முதல் பாதம் குழந்தை பிறந்தால் தாய் தந்தைத் அரிஷ்டம் .
உத்திரம் -2மாதமும்
பூசம் -3மாதம்
பூராடம் -ரேவதி -8மாதமும்
சித்திரை -6-மாதம் தோஷம் அதுவரை குழந்தையை தந்தை பார்க்கக் கூடாது சாந்தி செய்யவும்
சாந்தி பரிகாரமாக
உத்திரத்திற்கு எள்ளுடன் கூடிய பாத்திரமும்
பூசத்திற்கு கோதானமும்
சித்திரைக்கு ஆடு தானமும்
பூராடம் ரேவதிக்கு சுவர்ண தானமும் செய்க

Saturday, March 14, 2015

மருத்துவமும்ஜோதிடமும்‬

ஜாதகத்தில் சூரியன்,சந்திரன் ஆட்சி,உச்சம் பெற்று நின்றால் நோய்கள் எளிதில் குணமாகும்.
மேசம்,சிம்மம்,ரிசபம்,கடகம்,துலாம் ஆகிய லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு நோய் எளிதில் குணமாகும்.
கன்னி லக்கினம்,கன்னி ராசியில் பிறந்த பெண்கள் நல்ல செவிலியராக செயல்படுவர்.
ஜாதகத்தில் சூரியன்,சந்திரன் நிற்கும் ராசிகள் குறிக்கும் உடல் பாகங்களில் எந்தவிதமான அறுவை சிகிச்சையும் செய்யக்கூடாது.
லக்கினத்திற்கு 6-8 ல் நின்ற கிரகம் அல்லது 6-8 க்குடைய கிரகங்கள் சம்பந்தமான நோய்கள் வரும்.
ராகு ,கேதுக்கள் நின்ற பாவங்கள் குறிக்கும் உடல் உறுப்புகளில் ஏதாவது நோய் இருக்கும்.

Saturday, February 28, 2015

செவ்வாய் தோஷம்

லக்னம் அல்லது சந்திரன் அல்லது சுக்கிரனுக்கு 2,4,7,8,12 செவ்வாய் இருப்பது செவ்வாய் தோஷம்...
லக்கினத்திற்கு 100% தோஷம்
சந்திரனுக்கு 75% தோஷம்
சுக்கிரனுக்கு 50% தோஷம்...

Tuesday, February 17, 2015

நண்பனும் எதிரி

ஒருவர் ஜாதகத்தில் 7-ம் இடம் நண்பர்களை பற்றி அறியும் இடமாகும்.
அந்த 7-ம் இடத்து அதிபதியோடு கேது அல்லது இராகு கூடி எங்கிருந்தாலும், நண்பர்களும் எதிரியாக மாறி விடுவார்கள்.
7-ம் இடத்து அதிபதி, 6,8,12-க்குரியவனோடு சேர்ந்தாலும், நண்பன் எதிரியாவான். 7-க்குரியவன் நீச்சம் பெற்று இருந்தாலும் இதே நிலைதான்.
ஆதலால், இப்படிபட்ட ஜாதகர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பதும், தொழிலில் கூட்டு சேரும்போது எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள் !!

தினசரி வாழ்க்கைக்கு ஆன்மீக குறிப்புகள்:

1. வீடு மற்றும் தொழிற்சாலைகளில் மற்றவர்கள் விட்ட பெருமூச்சு நீங்க வேண் டுமானால் சாம்பிராணிப்புகை அல்லது 60 வகை மூலிகை சேர்க்கையால் செய்யப்பட்ட மூலிகைப்புகை போடுவது நல்லது.
2. நீங்கள் குரு உபதேசம் பெற விரும்புகிறீர்களா? சுவாதி மற்றும் விசாகம் நட்சத்திரங்கள் நின்ற நாட்களிலும் கடகம் மற்றும் விருச்சிகம் லக்கினங்களிலும் குரு உபதேசம் பெற நன்று.
3. சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட்டால் நவக்கிரகங்கள் திருப்தியடையும்.இதனால், அஷ்டமச்சனி, கண்டகச்சனி, ஏழரைச்சனி முதலியவற்றின் தாக்கம் குறையும்.

கனவுகளும் நம்பிக்கைகளும்

இம்மானிட உலகில் உறக்கம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றே ஆனால் அவ்வுறக்கம் வரும் பொழுது மனிதன் உறக்கத்தில் சில நிகழ்வுகளைப் பற்றி அவர் தம் மனக்கண் முன்னே காண முடிகின்றது அவையே கனவு அவை நல்லவை, தீயவை, என்ற வகையில் அமைகின்றன இருப்பினும் அத்தகைய உளவியல் கூறுகளை ஒரு சிலர் ஏற்கின்றனர் மற்றொரு சாரார் ஏற்க மறுக்கின்றனர் காரணம் அக்கனவு ஒரு சிலர் வாழ்வில் அவர்கள் கண்டது போல் பலிக்கின்றன, சிலருக்கு பலிக்காமலும் போகின்றன இருப்பினும் சிலர் கனவுகள் காண்பதே தவறு என்றும் குறிப்பிடுகின்றனர் இத்தகைய வாதங்களுக்கு நடுவில் நம் முன்னோர்கள் பலர் கனவுகளும் அவற்றிற்கு ஏற்ற சில நம்பிக்கை முறைகளையும் கூறி வருகின்றனர் அவை பின்வருமாறு :
1) அதிகாலை கனவு பலிக்குமென நம்புகின்றனர்.
2) கனவில் சாவைக் காண்பது நல்லது என்பர்.
3) கனவில் திருமணத்தைக் காண்பது நல்லதல்ல என்பர்.
4) கனவில் மலத்தைத் தொட்டதாகக் கண்டால் செல்வம் அதிகரிக்கும் கனவில் ஆகாய விமானத்தைக் கண்டால் தமக்கு நேரவிருக்கும் ஆபத்தைக் குறிக்கும்.
5) கனவில் இரும்பைக் கண்டால் துன்பம் பல நேரும்.
6) வெள்ளி உலோகத்தைக் கனவில் கண்டால் வாழ்க்கையில் வெற்றியும் பரத்தையர் உறவும் ஏற்படும்.
7) கனவில் ஆப்பிள் பழங்களைக் கண்டால் அதிர்ஷ்டம் ஆகும்.
உப்பைக் கண்டாலும் அதிரஷ்டம் ஆகும், மேலும் ஆமையைக் காண்பதும் அதிர்ஷ்டம் ஆகும் .
8) கனவில் பன்றி, பூ, பெண்கள், ஆடு, பச்சைமரம், விறகு, முதிலியவற்றைக் காண்பது நல்லதல்ல.
9) கனவில் எழுதிக் கொண்டிருப்பதாகக் கண்டால் நல்ல செய்திகள் வரும், மேலும் கனவில் சந்திரனைக் கண்டால் காதலில் வெற்றி ஏற்படும்.
10) கனவில் ஏர் உழுவதாகக் கண்டால் எடுத்த காரியம் தாமதமாக வெற்றியடையும்.
11) வானத்தில் கழுகு வட்டமிடுவதாகக் கனவு கண்டால் தீமை வரும், மேலும் காகத்தைக் கனவில் கண்டால் மரணச் செய்தி வரும்.
12) கிணற்றில் நீந்துவதாகக் கனவு கண்டால் எடுத்த காரியம் வெற்றி பெறும்.
13) கனவில் தாமே இறப்பதாகக் கனவு கண்டால் ஆயுள் பெருகும், மேலும் சிறைச் சாலையில் இருப்பதாகக் கனவு கண்டால் பேரும் புகழும் உண்டாகும்.
14) பொற்சங்கிலி அணிவதுபோலக் கனவு கண்டால் நல்ல அறிகுறியாகும், மேலும் மணியோசைக் கேட்பதாகக் கனவு கண்டால் திருமணம் நடைபெறும்.
15) சீட்டு ஆடுவதாகக் கனவில் கண்டால் மனக்கவலை ஏற்படும், மேலும் மனைவியைத் தவிர மற்ற பெண்களுடன் உறவு வைப்பதாகக் கனவு கண்டால் ஆபத்து ஏற்படும்.
16) சூரிய கிரகணம் பிடித்திருப்பது போல் கனவு கண்டால் தீமை ஏற்படும், ஆனால் சூரியன் உதயமாவதாகக் கனவு கண்டால் எடுத்த காரியம் வெற்றி பெறும்.
17) தேர்வு எழுதுவதாகக் கனவு கண்டால் வேலைவாய்ப்பில் உயர்வு ஏற்படும்.
இவ்வாறு மனிதர்களின் கனவுகளுக்கு ஏற்ற நம்பிக்கை முறைகளை நம் முன்னோர்கள் பின்பற்றி வருகின்றனர் இவை வாழ்வியலுடன் ஒப்பிடும் பொழுது சில சமயங்களில் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாகவே இருக்கன்றது....

ராஜயோக அமைப்புகள்

7ல் புதனும், சுக்கிரனும் இருந்து, 11ல் சந்திரனும் இருந்து, குருவினுடைய பார்வை பெறுவதும் ஒருவகையில் ராஜ யோகமே. அந்தப் பெண்ணை மணந்து கொள்பவன் மகிழ்ச்சியில் திளைப்பான்.
ராஜ யோகம் உள்ள பெண்ணின் ஜாதகத்தில், லக்கினத்தில் குருவும், ஏழில் சந்திரனும், பத்தில் சுக்கிரனும் இருக்கும். அவளை மணந்து கொள்கிறவன் பாக்கியசாலி!.
கன்னி லக்கினத்தில் பிறந்த பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்தில் புதன் இருந்து, 11ல் (கடகத்தில்) குரு இருந்தால் அவளுக்கு ராஜ யோகம்தான்.
மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்,கும்பம் ஆகிய ஒன்று பெண்ணின் லக்கினமாகி, அதில் சந்திரன் இருந்து, அவளுடைய நான்கு கேந்திர வீடுகளிலும் பாவ கிரகங்கள் இல்லாமல் இருந்ததாலும் அவள் யோகமான பெண்தான்.
கும்ப லக்கினத்தில் பிறந்து, 4ஆம் வீட்டில் உச்ச சந்திரனும் இருந்து, அந்தச் சந்திரன் குருவின் பார்வை பெற்றால், அந்தப் பெண்ணை மணப்பவன் நாடாளும் பாக்கியத்தை பெறுவான்

திருமணத்தடை, திருமணமுறிவு ஏற்படுத்த கூடிய சில ஜாதக அமைப்புக்கள்:

1. லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டுக்குரியவனும் பலம் குறைந்து இருப்பதும், பாபக் கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்று இருப்பதும் கூடாது.
2. ஏழாம் வீட்டிற்கு இரு பக்கத்திலும், அல்லது லக்கினத்திர்கு இருபக்கத் திலும் தீயகிரகங்கள் அமர்ந்திருப்பது கூடாது.அதற்குத் தனிப் பெயர் உண்டு. அது பாபகர்த்தாரி யோகம் எனப்படும்
3. சுக்கிரன் நீசமடைந்து ஏழாம் வீட்டில் இருப்பதும், அல்லது தீய கிரகங்களுடன் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருப்பதும் கூடாது.
4. சுபக்கிரங்கள் மூன்றுமே, 3,6.8,12 ஆகிய மறைவிடங்களில் இருப்பது கூடாது.
5. குரு பலவீனமாகி ஆறாம் வீட்டில் குடியிருப்பது கூடாது. உடன் பாபக் கிரகங்கள் அந்த இடத்தில் அவருடன் சேர்ந்து இருப்பதும் கூடாது.
6. சுபக்கிரகங்கள் மூன்றும் நீசம் பெற்றிருத்தல் கூடாது
7. ஏழாம் வீட்டு அதிபதி அம்சத்தில் நீசம் பெற்றிருப்பதும் நல்லதல்ல!
8 ஏழாம் வீட்டு அதிபதி லக்கினத்திற்குப் பன்னிரெண்டில் அமர்வது நல்லதல்ல!
9. எட்டாம் வீட்டுக்காரன் ஏழில் குடியிருப்பது நல்லதல்ல!
10. ஏழில் சந்திரனுடன் சனி கூட்டணி போட்டு அமர்ந்திருப்பது நல்லதல்ல!
11. ஜாதகத்தில் சுக்கிரனுக்கு எதிர் வீட்டில் செவ்வாயும், சந்திரனுக்கு எதிர் வீட்டில் செவ்வாயும் இருப்பது நல்லதல்ல!
12. எழில் சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோர்கள் நல்ல நிலைமையில் அமர்ந்திருப்பது நல்லது. செவ்வாயும், சனியும் எந்த நிலையில் அமர்ந்திருந்தாலும் நல்லதல்ல

நவகிரகங்களும் நோய்களும்

 நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ” என்பது பழமொழி. ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதையே நாம் அனைவரும் விரும்புவோம். நாம் இந்த பூமயில் வாழ எத்தனை கோடான கோடி செல்வங்கள் இருந்தாலும் உடல் ஆரோக்கியம் கெட்டு விட்டால் அத்தனையும் வீண்தான். உடல் ஆரோக்கியமாக இருந்தால் மற்ற எல்லா செல்வங்களையும் சுயமாக சம்மாதித்து அனுபவிக்க முடியும். அப்படி பட்ட நல்ல ஆரோக்கியம் எல்லாருக்குமா அமைகிறதா என்றால் அது தான் இல்லை. நோய்கள் ஏழை பணக்காரர் என பாகுபாடு பார்த்து வருவதில்லை.
நோய் வராமல் தடுக்க மருத்துவ ரீதியாக எத்தனையோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டாலும் அவரரின் ஜெனன ஜாதக அமைப்பு என்று ஒன்றிருக்கின்றதல்லவா? அதில் அமையும் கிரகங்களின் நிலைப்படி நோய்கள் அந்ததந்த கிரகங்களின் தசா புக்தி நடைபெறும் காலங்களில் வந்தே தீரும்.
விஞ்ஞான வளர்ச்சிகள் நோயினை குணப்படுத்தி விடும் என்றாலும் ஜோதிட ரீதியாக நம்மை ஆளும் நவகிரகங்களும் நம்முடைய ஜனன ஜாதக ரீதியாக பலமாக அமைய வேண்டும். எவ்வளவு மருத்துவ செலவுகள் செய்தாலும் குணமாகாத நோய்கள் கூட மாரியம்மன் கோயில் வேப்பிலையால் குனமடைகிறதே அதற்கு காரணம் ஜோதிட ரீதியாக எந்த கிரகம் பாதிக்கப்பட்டிருக்கிறதோ அந்த கிரகத்திற்குரிய பரிகாரத்தின் மூலம் நலம் கிட்டும். உதாரணமாக ராகுவால் பாதிக்கப்பட்ட ஒருவர் அம்மன் வழிபாடு மேற்கொண்டு அதன் மூலம் கிட்டும் நற்பலனை வேப்பிலையால் குணமானதாக எடுத்துக் கொள்கிறார்.
ஜெனன ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 6&ஆம் வீடானது ருண ரோக ஸ்தானமாகும். இது நோய், தேக ஆரோக்கியம் போன்றவற்றை அறிய உதவும் ஸ்தானமாகும். இதில் அமைகின்ற கிரகங்களின் அமைப்பினை கொண்டு நோய்கள் ஏற்படுகின்றன.
ஜாதகத்தில் சாதகமாகவோ, பாதகமாகவோ அமைந்திருப்பதை வைத்து ஒவ்வொரு கிரகமும் தனக்கென சில தனித் தன்மையுடன் செயல்படுகின்றன. பாதகமாக அமைந்த கிரகங்களின் தசா புக்தி காலங்களில் அதனதன் காரகத்துவத்திற் கேற்ப நோய்கள் உண்டாகிறது.
ஒவ்வொரு கிரகங்களின் தன்மையை காண்போம்.
சூரியன்
சூரியனால் உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்கள், காய்ச்சல், வயிறு கோளாறு மூலம், இருதய நோய் தோல்வியாதி, நெருப்பால் கண்டம், எதிரிகளால் கண்டம், மரம், விஷம் மற்றும் பாம்பால் கண்டம், திருடர்களால் கண்டம், கண் நோய், தெய்வக் குற்றம் மூலம் உடல் நிலையில் பாதிப்பு போன்றவை உண்டாகும்.
சந்திரன்
சந்திரனால் மஞ்சள் காமாலை, ஜல தொடர்புடைய நோய்கள், தூக்கமின்மை, சோம்பேறித்தனம், மனநிலை பாதிப்பு, உணவு செரிக்காத நிலை, தைரிய குறைவு, சீதபேதி, குடல் புண், முகப்பரு, சுவையை அறியும் தன்மை இழக்கும் நிலை உண்டாகும். ஜலத்தால் கண்டம், தண்ணீரில் உள்ள மிருகத்தால் கண்டம், பெண்களால் பாதிப்பு, ரத்தத்தில் தூய்மை இல்லாத நிலை போன்ற பாதிப்புகளும். சளி, காய்ச்சல் போன்ற நோய்களும் ஏற்படும்.
செவ்வாய்
செவ்வாய் பகவானால் கண்களில் பாதிப்பு, குடல்புண், காக்காய் வலிப்பு, உஷ்ண நோய், தோல் நோய்கள் உண்டாகும். விஷம் மற்றும் ஆயுதத்தால் கண்டம் உண்டாகும். எதிரிகளிடமும் உடன்பிறப்புகளிடமும் சண்டை போடும் போது உடலில் காயம் உண்டாக கூடிய நிலை தொழுநோய், தோலின் மேல் பாகத்தில் நோய் போன்றவை உண்டாகும்.
புதன்
புதனால் வாய்ப்புண், கண்களில் பாதிப்பு, தொண்டை மற்றும் மூக்கில் பாதிப்பு, மனநிலை பாதிப்பு,திக்குவாய், இயற்கை சீற்றத்தால் உடல்நிலையில் பாதிப்பு, விஷத்தால் கண்டம், மூளையில் பாதிப்பு, தோல் வியாதி, மஞ்சள்காமாலை, கனவால் மன நிலை பாதிப்பு ஏற்பட்டு நோய்கள் உண்டாகும்.
குரு
குருபகவானால் ஞாபக மறதி, காதுகளில் பாதிப்பு, குடல் புண், மற்றும் பூச்சிகளால் பாதிப்பு, பிராமணர்கள் மற்றும் பெரியோர்களின் சாபத்தால் உடல்நிலை பாதிப்பு, வறுமையால் உடல்நிலை பாதிப்பு, கோவில் விவகாரங்களில் ஈடுபடுவதால் உடல்நிலையில் பாதிப்புகள் போன்றவை உண்டாகும்.
சுக்கிரன்
சுக்கிர பகவானால் சர்க்கரை வியாதி, சிறுநீரகக்கோளாறு, கண்களில் கோளாறு ரத்தசோகை, ரகசிய உறுப்பில் பாதிப்பு, சர்க்கரை நோய் போன்ற நோய்கள் ஏற்படும். பெண்களுடன் உடல் உறவு கொள்ள முடியாத நிலை, உடல் உறவு கொள்ள பயப்படும் நிலை, பெண்களால் பயம், போன்ற நோய்களும் ஏற்படும்.
சனி
சனிபகவானால் எலும்புகளில் பாதிப்பு ஏற்பட்டு உடலில் ஊனம் உண்டாகக்கூடிய நிலை, வயிற்றுக் கோளாறு, உடலில் உஷ்ணம் அதிகரித்து அவைகளால் நோய் உண்டாகக்கூடிய அமைப்பு, உடலில் மந்தமான நிலை, சோர்வு எதிர்பாராத விபத்துகளை சந்திக்கும்நிலை மனநிலை பாதிப்பு, காக்காய் வலிப்பு, டி.பி. சர்க்கரை நோய் போன்றவை உண்டாகும். விபத்துகளால் உடல் ஊனம், இயற்கை சீற்றத்தால் உடல் நிலையில் பாதிப்பு போன்றவைகள் உண்டாகும்.
ராகு
ராகுபகவானால் தொழுநோய், மூளையில் நோய், இருதய கோளாறு, நெருப்பால் பயம் ,விஷத்தால் கண்டம், எதிரிகளால் பாதிப்பு விபத்தால் கண்டம், மனச்சோர்வு, விபத்தால் கண்டம், தோல் வியாதிகள், மிருகங்களால் கண்டம், அஜீரண கோளாறு, புற்று நோய், தேவையற்ற சேர்க்கையால் தவறான பழக்கங்களுக்கு அடிமையாக கூடிய உண்டாகும்.
கேது
கேது பகவானால் உடலில் வெட்டு காயம், விஷத்தால் கண்டம், அஜீரண கோளாறு, குடல் புண் போன்ற நோய்கள் உண்டாகின்றன. வயிறு கோளாறு, இல்லற வாழ்வில் ஈடுபாடு குறைவு, பூசாரி மற்றும் பிராமணர்களால் தொல்லை போன்றவைகளும் உண்டாகும்.

ராசிகற்கள்

வைரம் - Diamond
வைடூரியம் - Cat's eye,
முத்து - Pearl
மரகதம் - Emerald
மாணிக்கம் - Ruby
பவளம் - Coral
புட்பராகம் - Topaz
கோமேதகம் - Hessonite
நீலம் - Sapphire
நவரத்தினங்கள் எனப்படுபவை ஒன்பது வகையான விலையுயர்ந்த கற்களாகும். நவரத்தினங்கள் என்பது திடீர் பணவரவயோ, வேலைவாய்ப்பையோ, உடனடிதிருமணத்தையோ உருவாக்கித்தராது. நவரத்தினகற்கள் முதலில் கண்திருஷ்டியை போக்கும், அடுத்தது உடல் நலத்தை பாதுகாப்பாக வைக்கும். ரத்தினங்களை வாங்கும் போது கற்களில் வெடிப்புகள் இல்லாமல் பார்த்து வங்க வேண்டும். நவரத்தினங்களின் விலை அதிகமாக இருந்தால் உபரத்தினங்களை வாங்கி அணியலாம். ராசிக்கற்களை அணியும் பொழுது நேரம், ராசி, லக்னம், நட்சத்திரம், பிறந்ததேதி ஆகியவற்றிக்கு ஏற்றவாரு வாங்கி அணியவேண்டும்.
மேஷம் - பவளம் (Coral):
மேஷராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.
ரிஷபம் - வைரம் (Diamond):
ரிஷப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம் இதை அணிந்தால் மகிழ்ச்சியையும் யோகத்தையும் வசீகரத்தையும் கொடுக்கும்.
மிதுனம் – மரகதம் (Emerald):
மிதுன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும், அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது.
கடகம் – முத்து (Pearl):
கடக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது முத்து. இது அமைதியும் மகிழ்ச்சியும் செல்வ விருத்தியும் அளிக்க வல்லது.
சிம்மம் - மாணிக்கம் (Ruby):
சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மாணிக்கம். இதை அணிந்தால் மிகுந்த அதிர்ஷ்டசாலியாகலாம்.
கன்னி – மரகதம் (Emerald):
கன்னி ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும் அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது
துலாம் - வைரம் (Diamond):
துலாம் - வைரம் (Diamond) :
துலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். இதை அணிந்தால் மகிழ்ச்சியையும், யோகத்தையும், வசீகரத்தையும் கொடுக்கும்.
விருச்சிகம் – பவளம் (Coral):
விருச்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.
தனுசு - கனக புஷ்பராகம். (Yellow Sapphire):
தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும் செல்வ விருத்தியையும் கொடுக்கும்.
மகரம் - நீலக்கல் (Blue Sapphire):
மகர ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது
கும்பம் - நீலக்கல் (Blue Sapphire):
கும்ப ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது
மீனம் - கனக புஷ்பராகம். (Yellow Sapphire) :
மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும், செல்வ விருத்தியையும் கொடுக்கும்.

Saturday, January 31, 2015

ஞானம் கிடைக்க எளிய வழி

1. இலக்கினத்திற்கு 12ல் குரு, கேது இருந்தாலும்,
2. இலக்கினத்திற்கு 12ல் இருக்கும் கேதுவை, குரு கண்டாலும்,
3. 12ல் இருக்கும் குருவை, 5,9க்குடையவர்கள் கண்டாலும்,
4. உச்சம்பெற்ற கிரகம் 12ல் இருந்து, அதை சுபக்கிரகம் கண்டாலும்,
5. 10ம் அதிபதி மூன்றுக்கு மேற்பட்டகிரகங்களுடன் கூடி கேந்திர, திரிகோணங்களில் இருக்கவும்,
6. 10ம் வீடு குருவிடையதாகவோ, அல்லது 10மிடத்தைக் குரு கண்டாலும்,
7. ஒன்பதாமிடத்தில் ஒருபலமான கிரகம் கேதுவுடன் இணைந்திருந்தாலும், அல்லது குருவீடு 12மிடமாகி, அதில் கேது இருக்க, குருவால் பார்க்கப்பட்டாலும்,
8. 5,9 ம் அதிபதிகள் நல்லநிலையில் இருக்க, 5,9,12 ஆகிய இடங்களில் ஏதிலாவது குரு_கேது இணைந்திருந்திருந்தாலோ அல்லது 12ம் இடம் மீனம், விருச்சிகமாகி, அதில் குரு_கேது இருந்தாலோ ஞானம் பெற்று, மோட்சயோகம் ஏற்படும். இந்த செய்தியை, ஒரு கதையோடு காண்போம்.
போதிமரத்தடியில் ஞானம் பெற்றபின், போதனைக்காக புத்தர், ஒரு ஊரில் இருந்து மறு ஊருக்கு செல்லும் போது, ஒரு கிராமத்தை கடந்து செல்லவேண்டும். அப்படி கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும், அக்கிராம மக்கள் ஒன்றுதிரண்டு புத்தரை தினமும் அடிக்கிறார்கள். இது தொடர்கதையாகவே நடந்து வந்தது. ஒருநாள் எல்லோரும் அடித்து முடித்தபின் அப்போதும் புத்தர் அந்த இடத்தைவிட்டு நகராமல் நிற்க, ’உன்னைத்தான் அடித்து முடித்துவிட்டோமே, இன்னும் ஏன் குனிந்துகொண்டு நிற்கிறீர்கள்” என்றனர். அப்போது புத்தர், “இன்னும் ஒரு அடி என்மேல் விழவேண்டியுள்ளது. அதனால்தான் நிற்கிறேன். உங்கலில் ஒருவர் இன்னும் என்னை அடிக்கவில்லை. அவரும் அடித்துவிட்டால் நானிங்கிருந்து போதனைக்காக மனநிம்மதியோடு, என்போதனையை செய்வேன். இன்னையென்றால், இன்று ஒருவருக்கு அவர் விரும்பியபடி என்னால் இருக்கமுடியவில்லையே, என்கிற வேதனை வந்துவிடும். அதனால், அந்த ஒருவரையும் வந்து அடித்துவிட்டுச் செல்ல சொல்லுங்கள்” என்று, அக்கிராம மக்களை வணங்கிக் கேட்டார். பின் “நான் இங்கேயே இருக்கிறேன். அவரை வந்து அடிக்கச் சொல்லூங்கள். எவ்வளவு நேரமானாலும் காத்திருக்கிறேன்”என்றார். அதே போல் காத்திருக்கிறார். பகல் மறைந்தது. இரவும் வந்தது. அப்போதும் அவர் வரவில்லை. இரவும் கழிந்தது. விடிந்ததும் விட்டது.
மீண்டும் எல்லா மக்களும் கூடினர். புத்தர் அங்கேயே இருப்பதைக் கண்டு வியந்து கேட்டனர். “அந்த ஒருவர் இன்னும் வரவில்லை. அவர்க்காகத்தான் காத்திருக்கிறேன்” என்றார். ஊர்மக்கள் அவரை ஒருவித பயம் கலந்த மரியாதையுடன் பார்த்துவிட்டு, அவரை அன்றைய பொழுது அடிக்காமல் ஊருக்குள் திரும்பிவிட்டனர், புத்தரும் அவர்களுடனே ஊருக்குள் வந்தார். ஊர்தலைவனைப் பார்த்து, “என்னை தினமும் அடிக்கவேண்டியவர்கள் அடிக்காமல்,ஊருக்குள் வந்துவிட்டார்கள். நீங்கள் உத்தரவு தந்து அவர்களை அடிக்கச் சொல்லுங்கள் “ என்றார். யாரும் எந்த பதிலும் சொல்லவில்லை. புத்தரோ அவர்களை தன்னை அடிக்க, வலிய கெஞ்சிக்கொண்டு இருந்தார். இவ்வளவு தூரம் தாழ்மையுடன் இருக்கும் புத்தரையா? நாம் துன்புறுத்துவத்தினோம். ஊர்மக்கள் தங்களின் செயலுக்காக மிகவும் வருந்தி, புத்தரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, சீடர்களாக மாறி, ஞானம் பெற்றனர்.

கோள்களிலிருந்து வருகின்ற காந்த அலைகள் மனிதனுடைய எந்தப்பகுதியோடு அதிகம் தொடர்புகொள்கின்றன.?

சூரியனிலிருந்து வருகின்ற அலை = எலும்புகளோடும்;
.
புதன் = தோல் மீதும்;
.
சுக்கிரன் = ஜீவ சக்தியோடும்;
.
சந்திரன் = இரத்த ஓட்டத்தோடும்;
.
செவ்வாய் = எலும்பிலுள்ள மஜ்ஜையோடும்;
.
குரு = மூளை செல்களோடும்;
.
சனி = நரம்புகளோடும்;
.
ராகு-கேது = ஓஜஸ்ஸோடும் தொடர்பு கொள்கின்றன.

சூரியன்

சூரிய குடும்பத்தின் முதன்மை கோளான சூரியனுக்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது. ஆதவன், அருணன், அரியமா, அருக்கன், அலரி, அழரவன், அனலி,அண்டயோனி, அரி, ஆதவன், ஆயிரஞ்சோதி, இருள்வலி,உதயம், ரவி, எல், எல்லை, எல்லோன், என்றுள், எழ்ப்ரியோன் , ஒளி, ஒளியோன் , கதிரவன், கனவி, கிரணமாலி, சண்டன், சவிதா, சான்றோன், சித்ரபானு, சுடரோன், சூரன், செங்கதிரோன் , சோதி, ஞாயிறு ,தபணன், தரணி, திவாகரன், தினகரன், தனமணி, பகலோன், பர்க்கன், பனிப்பகை, பானு, பகல், பங்கயன், பதங்கன், பரிகி, மார்த்தாண்டன், மித்திரன், விரிச்சிகன் , விரோசனன், விண்மனி, வெஞ்சுடர், வெயில், வேய்யோன் ரவிஆகியனவாகும்.
பால் : ஆண் கிரகம்.
நிறம் : வெண்மை
வடிவம் : சம உயரம்.
அவயம் : தலை.
உலோகம் : தாமிரம்.
ரத்தினம் : மாணிக்கம்.
மலர் : செந்தாமரை.
வாகனம் : மயில், தேர்.
சமித்து : எருக்கு.
சுவை : துவர்ப்பு.
பஞ்ச பூதம் : தேயு.
நாடி : பித்த நாடி.
திக்கு : கிழக்கு.
அதி தேவதை : சிவன்.
தன்மை : நிலையான கோள்.
குணம் : தாமஸ்ம்
ஆசன வடிவம் : வட்டம்.
நட்பு கோள்கள் : சந்திரன், வியாழன், செவ்வாய்.
பகை கோள்கள் : சுக்கிரன், சனி, ராகு, கேது.
சம கோள் : புதன்.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 1 மாதம்.
திசா காலம்: 6 ஆண்டுகள்.
நட்பு வீடு : விருச்சிகம், தனுசு, கடகம், மீனம்.
பகை வீடு : ரிஷபம், மகரம், கும்பம்.
ஆட்சி பெற்ற இடம் : சிம்மம்.
நீசம் பெற்ற இடம் : துலாம்.
உச்சம் பெற்ற இடம் : மேடம்.
மூலதிரி கோணம் : சிம்மம்.
உப கிரகம் : காலன்.
காரகத்துவம் : பித்ருகாரகன்.பிதா, ஆத்மா, சிராசு, தந்தம், வலது நேத்ரம், பித்தம், ஒருதலை நோவு போன்ற சிரசு ரோகங்கள், சித்தசுவாதீனம், சௌரியம், இரசவாதம், யானை, மலை, காடு, தபசு, பிரதாபம், தைரியம், இராஜசேவை, அரச உத்தியோகம், யாத்திரை, கிராம சஞ்சாரம், சைவானுஷ்டானம் இவைகளுக்கு எல்லாம் சூரியன்தான் காரகன்.
ஆன்மாவை பிரதிபலிப்பவன் சூரியன். ஓருவருக்கு ஆத்மபலம் அமைய வேண்டு மானால் சூரியபலம் ஜாதகத்தில் அமைய வேண்டும்.

சந்திரன்

சோதிடவியலில் இரண்டாவது கோளான சந்திரனுக்கு தமிழில் பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகிறது.
அமுதகிரணன், அம்புலி, அரி, அரிச் , அலவன், அல்லோன், ஆலோன், இந்து, இமகரன், இராக்கதிர், இவன், உடுபதி, உகுவின்வேந்தன், கலாநிதி, கலையினன், களங்கள், குபேரன், குமுதநண்பன், குரங்கி, சசி, சீதன், சுதாகரன், சோமன், தண்சுடர், கண்ணவன்,தாராபதி, தானவன், திங்கள், தெவ்வு, நிராசரன், நிசாபதி, நிலவு, பசுங்கதிர்,
மதி, மதியம், மனேந்தி, முயலின் கூடு, விது, வெண் கதிரோன், வேந்தன் ஆகியனவாகும்.
பால் : பெண் கிரகம்.
நிறம் : வெண்மை நிறம்.
வடிவம் : குள்ள மான உயரம்.
அவயம் : முகம், வயிறு.
உலோகம் : ஈயம்.
ரத்தினம் : முத்து.
மலர் : வெள்ளை அலரி.
வாகனம் : முத்து விமானம்.
சமித்து : முருக்கு.
சுவை : உப்பு.
பஞ்ச பூதம் : நீர்
நாடி : சிலேத்தும நாடி.
திக்கு : வடமேற்கு.
அதி தேவதை : பார்வதி.
தன்மை (சர - சத்திர - உபயம் ) : சரக் கோள்.
குணம் : வளர் பிறையில் சாந்தம், தேய்பிறையில் குரூரம் .
ஆசன வடிவம் : சதுரம்.
நட்புகோள்கள் : சூரியன், புதன்.
பகை கோள்கள் : இராகு, கேது.
சம கோள்கள் : செவ்வாய், வியாழன், சனி, சுக்கிரன்.
1 ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 2 1/4 (நாள் ) நட்சத்திர அளவு.
உரிய திசா காலம் : 10 ஆண்டுகள்.
நட்பு வீடு : மிதுனம், சிம்மம், கன்னி.
பகை வீடு : எல்லா வீடுகளும் நட்பு ( பகைவீடு கிடையாது).
ஆட்சி பெற்ற இடம் : கடகம்.
நீசம் பெற்ற இடம் : விருச்சிகம்.
உச்சம் பெற்ற இடம் : ரிஷபம்.
மூலதிரி கோணம் : ரிஷபம்.
உரிய உப கிரகம் : பரிவேடன்.
உரிய காரகத்துவம் : மாத்ரு காரகன் (தாய் ).
வஸ்திரம், நித்திரை, சித்த சுவாதீனமின்மை, சயரோகம், சீதளநோய்கள், இடக்கண், புருவம், குடை, உத்தியோகம், கீர்த்தி, முத்து, வெண்கலம், அரிசி, உப்பு, மச்சம், உழவன், சத்திரம், சாமரம் , பலம், எண்ணம், சிந்தனை இவைகளு க்கு எல்லம் சந்திரன் தான் காரகன்.

செவ்வாய்.

சோதிடவியலில் மூன்றாவது கோளான செவ்வாய்க்கு தமிழில் பல்வேறு பெயர்கள் வழங்கப் படுகிறது.
அரத்தன், அழலோன், அழல், அறிவன், ஆரல், உதிரன், குசன், குருதி, செந்தி, வண்ணன், சேய், நிலமகள், பௌமன், மங்கலன், வக்கிரன் ஆகியனவாகும்.
பால் : ஆண் கிரகம்.
நிறம் : சிவப்பு நிறம்.
வடிவம் : குள்ள மான உயரம்.
அவயம் : கை, தோள்.
உலோகம் : செம்பு.
ரத்தினம் : பவளம்.
மலர் : செண்பகம்.
வாகனம் : செம்போத்து, சேவல்.
சமித்து : கருங்காலி.
சுவை : உறைப்பு.
பஞ்ச பூதம் : பிருதிவி.
நாடி : பித்த நாடி.
திக்கு : தெற்கு.
அதி தேவதை : சுப்ரமண்யர்.
தன்மை (சர - சத்திர - உபயம் ) : சரக் கோள்.
குணம் : ராசஜம்.
ஆசன வடிவம் : முக்கோணம்.
நட்பு கோள்கள் : சூரியன், சந்திரன், வியாழன்.
பகை கோள்கள் : புதன், இராகு, கேது.
சம கோள்கள் : சனி, சுக்கிரன்.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 1 1/2 மாதங்கள்.
திசா காலம் : 7 ஆண்டுகள்.
நட்பு வீடு : சிம்மம், தனுசு, மீனம்.
பகை வீடு : மிதுனம், கன்னி.
ஆட்சி பெற்ற இடம் : மேஷம், விருச்சிகம்.
நீசம் பெற்ற இடம் : கடகம்.
உச்சம் பெற்ற இடம் : மகரம்.
மூலதிரி கோணம் : மேஷம்.
உரிய உப கிரகம் : தூமன்.
காரகத்துவம் : சகோதர காரகன்
பூமி, சுப்பிரமணியர், கோபம், குயவன், யுத்தம், இரத்தம், செம்பு, பவளம், அக்கினிபயம், கடன், உற்சாகம், அதிகாரம், அடுதி மரணம் இவைகளுகு எல்லாம் செவ்வாய் தான் காரகன்.

புதன்

சோதிடவியலில் நான்காவது கோளாய் கருதப் படும் புதனுக்கு பல்வேறு தமிழ் பெயர்கள் வழங்கப் படுகிறது.
அநூரு, அருணன், அனுவழி, கணக்கன், சௌமன், சலமன், சிந்தை, சூரியன், சௌமியன், துவன், தேர்ப்பாகன், நற்க்கொள், நிபுணன், பச்சை, பண்டதன், பாகன், புந்தி, புலவன், மதிமகன், மாலவன், மால்மேதை ஆகியனவாகும்.
பால் : அலி கிரகம்.
நிறம் : பச்சை நிறம்.
வடிவம் : உயரம்.
அவயம் : கழுத்து.
உலோகம் : பித்தளை.
ரத்தினம் : மரகதம்.
மலர் : வெண்காந்தள்.
வாகனம் : குதிரை
சமித்து : நாயுருவி.
சுவை : உவர்ப்பு.
பஞ்ச பூதம் : வாயு.
நாடி : பித்த நாடி.
திக்கு : வடக்கு.
அதி தேவதை : விஷ்ணு.
தன்மை (சர - சத்திர - உபயம் ) : உபயக் கோள்.
குணம் : தாமசம்.
ஆசன வடிவம் : அம்பு.

நட்பு கோள்கள் : சூரியன், சுக்கிரன்.
பகை கோள் : சந்திரன்.
சம கோள்கள் : செவ்வாய், வியாழன்,சனி, இராகு, கேது.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 1 மாதம்.
திசா காலம் : 17 ஆண்டுகள்.
நட்பு வீடு : ரிஷபம், சிம்மம், துலாம்.
பகை வீடு : கடகம், விருச்சிகம்.
ஆட்சி பெற்ற இடம் : மிதுனம், கன்னி.
நீசம் பெற்ற இடம் : மீனம்.
உச்சம் பெற்ற இடம் : கன்னி.
மூலதிரி கோணம் : கன்னி.
உப கிரகம் : அர்த்தப்பிரகரணன்.
காரகத்துவம் : மாதுல காரகன்.
கல்வி, ஞானம், தனாதிபதி, தூதுவன், சங்கீதம், வாக்கு சாதுர்யம், ஜோதிடம், பிரசங்கம், சிற்பத்தொழில், வியாபாரங்கள், புத்திரக் குறைவு, வாத நோய், விஷரோகம் இவைகளுக்கு புதன் காரகன்.
கல்வியில் சிறந்து விளங்க ஜாதகத்தில் வித்யாகரன் எனும் புதன் பலம்பெறுவது சிறப்பு.

குரு

சோதிடவியலில் ஐந்தாவது கோளான வியாழனுக்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது.
அந்தணன்,அமைச்சன்,அரசன்,ஆசான்,ஆண்டனப்பான் ,குரு, சிகண்டிசன், சீவன், சுருகுறா, தாரபதி,தெய்வமந்திரி,நற்கோள் , பிரகற்பதி, வீதகன், பொன், மறையோன், வேதன், வேந்தன் ஆகியனவாகும்.
பால் : ஆண் கிரகம்.
நிறம் : மஞ்சள் நிறம் (பொன்னிறம்).
இனம் : பிராமண இனம்.
வடிவம் : உயரம்.
அவயம் : இருதயம்.
உலோகம் : பொன்.
ரத்தினம் : புஷ்பராகம்.
மலர் : முல்லை.
வாகனம் : யானை.
சமித்து : அரசு.
சுவை : தித்திப்பு.
தான்யம் : கொத்துக்கடலை.
பஞ்ச பூதம் : தேயு.
நாடி : வாத நாடி.
திக்கு : வடகிழக்கு( ஈசான்யம் ). அதி தேவதை : பிரம்மா, தட்சிணாமூர்த்தி.
தன்மை (சர - சத்திர - உபயம் ) : உபயக்கோள்.
குணம் : சாந்தம்.
ஆசன வடிவம் : செவ்வகம்.
நட்பு கோள்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்.
பகை கோள்கள் : புதன், சுக்கிரன்.
சம கோள்கள் : சனி, ராகு, கேது.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 1 வருடம்.
திசா புத்திக் காலம் : 16 ஆண்டுகள்.
நட்பு வீடு : மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம்.
பகை வீடு : ரிஷபம்,மிதுனம், துலாம்.
ஆட்சி பெற்ற இடம் : தனுசு, மீனம்.
நீசம் பெற்ற இடம் : மகரம்.
உச்சம் பெற்ற இடம் : கடகம்.
மூலதிரிகோணம் : தனுசு.
உப கிரகம் : எமகண்டன்.
காரகத்துவம் : புத்திர காரகன்.
புத்திரர், பிரம்மா, ஞானம், யோகாப்பியாசம், அச்சாரியத்துவம், அட்டமா சித்திகள், அரச சேவை, இராச சன்மானம், சொர்ணம், தேன், கடலை, புத்தியுக்தி, இவைகளுக்கு வியாழன் காரகன்.
சுப கோளான குரு ஒருவரின் ஜாதகத்தில்
வலுவாக் இருப்பது சுப பலனை தரும்.

சுக்கிரன்.

சோதிடவியலில் ஆறாவது கோளான சுக்கிரனுக்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப்படுகிறது.
அசுரர்மந்திரி, அநாவிலன், ஆசான், உசனன், ஒள்ளியோன், கவி, காப்பியன், சல்லியன், சிதன், சீதகன், சுங்கன், தயித்திய மந்திரி,நற்கோள், பளிங்கு, பார்கவன்,பிரசுரன், பிருகு, புகர், புயல், மழைக்கோள், வெள்ளி ஆகியனவாகும்.
பால் : பெண் கிரகம்.
நிறம் : வெண்மை.
இனம் : பிராமண இனம்.
வடிவம் : சம உயரம்.
அவயம் : மர்மஸ்தானம்.
உலோகம் : வெள்ளி.
ரத்தினம் : வைரம்.
மலர் : வெண்தாமரை.
வாகனம் : குதிரை, மாடு.
சமித்து : அத்தி.
சுவை : புளிப்பு.
தான்யம் : மொச்சை.
பஞ்ச பூதம் : அப்பு. (நீர் )
நாடி : சிலேத்தும நாடி.
திக்கு : தென்கிழக்கு.
அதி தேவதை : இலக்குமி, வருணன்.
தன்மை (சர - சத்திர - உபயம் ) : ஸ்திரக் கோள்.
குணம் : ரஜசம்.
ஆசன வடிவம் : ஐங்கோணம்.

நட்பு கோள்கள் : புதன், சனி, இராகு, கேது.
பகை கோள்கள் : சூரியன், சந்திரன்.
சம கோள்கள் : செவ்வாய்,குரு.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 1 மாதம்.
திசா புத்திக் காலம் : 20ஆண்டுகள்.
நட்பு வீடு : மேடம், விருச்சிகம், மிதுனம், மகரம், கும்பம்.
பகை வீடு : கடகம், சிம்மம், தனுசு.
ஆட்சி பெற்ற இடம் : ரிஷபம், துலாம்.
நீசம் பெற்ற இடம் : கன்னி.
உச்சம் பெற்ற இடம் : மீனம்.
மூலதிரி கோணம் : துலாம்.
உப கிரகம் : இந்திரதனுசு.
காரகத்துவம் : களத்திர காரகன்.
சங்கீதம், பரத நாட்டியம் போன்றவற்றில் பிரியம் ஏற்படுதல், ஆசை, ஸ்ரீ தேவதை உபசனை, அழகு, இளமை, இலக்குமி கடாட்சம், வாகனம், சுகம், போகம், ஆகாய சமுத்திர யாத்திரைகள், இவைகளுக்கு எல்லாம் சுக்கிரன் தான் காரகன்.

சனி.

சோதிடவியலில் ஏழாவது கோளான சனிக்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது.
அந்தன், கதிர்மகன், கரியவன், காரி, கீழ்மகன், சுந்தில், சவுரி, சாவகன், தமணியன், நீலன், நோய்முகன், பங்கு, மந்தன், முடவன், முதுமகன், மேற்கோள் ஆகியனவாகும்.
பால் : அலிக் கிரகம்.
நிறம் : கருமை.
வடிவம் : குள்ள உயரம்.
அவயம் : பாதம், கணுக்கால்.
உலோகம் : இரும்பு.
உரிய ரத்தினம் : நீலம்.
ஆடை : கறுப்பு.
மலர் : கருங்குவளை.
வாகனம் : காகம்,
சமித்து : வன்னி.
சுவை : கைப்பு.
தான்யம் : எள்.
பஞ்ச பூதம் : ஆகாயம்.
நாடி : வாத நாடி.
திக்கு : மேற்கு.
அதி தேவதை : யமன், சாஸ்தா.
தன்மை (சர - சத்திர - உபயம் ) : உபயக் கோள்.
குணம் : தாமசம்.
ஆசன வடிவம் : வில்.
நட்பு கோள்கள் : புதன், சசுக்கிரன், இராகு, கேது.
பகை கோள்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்.
சம கோள்: குரு.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 2 1/2 வருடம்.
திசா புத்திக் காலம் : 19 ஆண்டுகள்.
நட்பு வீடு : ரிஷபம், மிதுனம்.
பகை வீடு : கடகம், சிம்மம், விருச்சிகம்.
ஆட்சி பெற்ற இடம் : மகரம்,கும்பம்.
நீசம் பெற்ற இடம் : மேடம்.
உச்சம் பெற்ற இடம் : துலாம்.
மூலதிரி கோணம் : கும்பம்.
உப கிரகம் : குளிகன்.
காரகத்துவம் : ஆயுள் காரகன்.
ஜீவன, இரும்பு, சேவகர் விருத்தி, களவு, ஆத்ம இம்சை, சிறைப்படல், ராஜதண்டனை, வீண்வார்த்தை, சித்தப்பிரம்மை, தீர்க்க ஆயுள், மயக்க போஜனம், அவயக் குறைவு, மரவேலை, ஆளடிமை இவைகளுக்கு எல்லாம் சனி தான் காரகன்.

இராகு

சோதிடவியலில் எட்டாவது கோளான இராகுவிற்க்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது.
கரும்பாம்பு , தமம், மதாப்பகை, மதாயுணி ஆகியனவாகும்.
பால் : பெண் கிரகம்.
நிறம் : கருமை.
வடிவம் : உயரம்.
அவயம் : தொடை,பாதம், கணுக்கால்.
உலோகம் : கருங்கல்.
ரத்தினம் : கோமேதகம்.
ஆடை : கறுப்புடன் சித்திரங்கள் சேர்ந்தது.
மலர் : மந்தாரை.
வாகனம் : ஆடு.
சமித்து : அறுகு.
சுவை : கைப்பு.
தான்யம் : உளுந்து.
பஞ்ச பூதம் : ஆகாயம்.
நாடி : பித்த நாடி.
திக்கு : தென் மேற்கு.
அதி தேவதை : காளி,துர்க்கை,
தன்மை (சர - சத்திர - உபயம் ) : சரக் கோள்.
குணம் : தாமசம்.
ஆசன வடிவம் : கொடி.
நட்பு கோள்கள் : சனி, சுக்கிரன்.
பகை கோள்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்.
சம கோள்கள் : புதன்,குரு.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 1 1/2 வருடம்.
திசா காலம் : 18 ஆண்டுகள்.
நட்பு வீடு : மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம்.
பகை வீடு : கடகம், சிம்மம்.
ஆட்சி பெற்ற இடம் : கன்னி.
நீசம் பெற்ற இடம் : ரிசபம்.
உச்சம் பெற்ற இடம் : விருச்சிகம்.
மூலதிரிகோணம் : கும்பம்.
உப கிரகம் : வியதீபாதன்.
காரகத்துவம் : பிதாமஹன். (பிதுர் பாட்டன் )
சேவகத்தொழில், பரதேசவாசம், சாதிக்கு விரோதமான தொழில், விகட வினோத வித்தைகள், குஷ்டம், நாள்பட்ட ரோகம், களவு, விஷ்பயம், அங்கவீனம், வெகு பேச்சு, ஜல கண்டம், வெட்டுக்காயம், சிரைப்படல் இவைகளுக்கு எல்லாம் இராகு தான் காரகன்.

கேது.

சோதிடவியலில் ஒன்பதாவது கோளான கேதுவிற்க்கு தமிழில் பல்வேறு பெயர்கள் வழங்கப் படுகிறது.
கதிர்ப்பகை, சிகி, செம்பாம்பு, மதிப்பகை ஆகியனவாகும்.
பால் : அலிக் கிரகம்.
நிறம் : சிவப்பு.
வடிவம் : உயரம்.
அவயம் : கை, தோள்.
உலோகம் : துருக்கல்.
ரத்தினம் : வைடூரியம்.
மலர் : செவ்வல்லி.
வாகனம் : சிம்மம்.
சமித்து : தர்ப்பை.
சுவை : உறைப்பு.
தான்யம் : கோதுமை.
பஞ்ச பூதம் : ஆகாயம்.
நாடி : பித்த நாடி.
திக்கு : வட மேற்கு.
அதி தேவதை : விநாயகர், சண்டிகேச்வரர்.
தன்மை (சர - சத்திர - உபயம் ) : சரக் கோள்.
குணம் : தாமசம்.
ஆசன வடிவம் : மூச்சில்.
நட்பு கோள்கள் : சனி, சசுக்கிரன்.
பகை கோள்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்.
சம கோள்கள் : புதன்,குரு.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 1 1/2 வருடம்.
திசா காலம் : 7 ஆண்டுகள்.
நட்பு வீடு : மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம்.
பகை வீடு : கடகம், சிம்மம்.
ஆட்சி பெற்ற இடம் : மீனம்.
நீசம் பெற்ற இடம் : சிம்மம்.
உச்சம் பெற்ற இடம் : கும்பம்.
மூலதிரி கோணம் : சிம்மம்.
உப கிரகம் : தூமகேது.
காரகத்துவம் : மதாமஹன்.
மாதுர் பாட்டன் வம்சம், கபடத்தொழில், கீழ்குலத்தொழில், பாபத்தொழில், பரதேச ஜீவனம், அக்னிகண்டம் இவைகளுக்கு எல்லாம் கேது தான் காரகன்.

கிரக வக்கிரம்

நன்மையா ? தீமையா ?
சிலர் வக்கிர கிரகம் உக்கிர பலம் பெறுகிறது என்று பதிவுகளை இடுகின்றனர் , உண்மையில் வக்கிரம் பெற்ற கிரகம் தனது காரக, பாவக ரீதியான பலன்களை தடை, தாமதம் ஏற்படுத்தி திருப்தியற்ற நிலையிலே தருகிறது.
எந்த கிரகம் வக்கிரம் பெறுகிறதோ அதன் காரக, பாவக அதிபத்திய பலன்கள் ஜாதருக்கு கிடைப்பதில் உறுதியற்ற தன்மையை தருகிறது.

$யார் நகைச்சுவை உணர்வுடன் பேசுவார் ?

$யார் நகைச்சுவை உணர்வுடன் பேசுவார் ?
2ம் பாவகத்தில் புதன், 2ம் அதிபதி புதன் சாரம், வலுபெற்றால்.
$யார் சிடு சிடு என பேசுவார் ?
2ம் பாவகத்தில் சூரியன், செவ்வாய் , ராகு இருந்து, 2ம் அதிபதி வலு குறைதல்
$யார் அர்த்தபுஷ்டியுடன் பேசுவார் ?
2ம் பாவகத்தில் குரு, புதன் , இலக்கின அதிபதி, இருந்து 2ம் அதிபதி வலு வலுபெற்றால்.
$யார் திக்கி திக்கி பேசுவார் ?
2ம் அதிபதி, புதன் இருவரும் 6,8, 12ல் மறைந்து, வலு குறைந்தால் (நீசம் , அஸ்தமனம் ) மாந்தி 2ம் பாவகத்தில்
$யார் அடுத்தவரை மயக்கும்படி பேசுவார் ?
2ம் பாவகத்தில் சுக்கிரன் , இலக்கின அதிபதி, இருந்து 2ம் அதிபதி வலு வலுபெற்றால்.
$யார் தர்புகழ்சிக்காக பேசுவார் ?
2ம் பாவகத்தில் புதன் , இலக்கின அதிபதி, இருந்து 2ம் அதிபதி வலு வலுபெற்றால்.
இலக்கின அதிபதி வலு குறைதல்,
$யார் அதிகம் பேசிக்கொண்டே இருப்பார் ?
2ம் பாவகத்தில் புதன் , சந்திரன் இருந்து 2ம் அதிபதி புதன் சாரம், வலுபெற்றால்.
$யார் குறைவாக பேசுவார் ?
2ம் பாவகத்தில் குரு , இலக்கின அதிபதி, இருந்து 2ம் அதிபதி வலு வலுபெற்றால்.

Wednesday, January 21, 2015

எட்டாம் பாவ பலன்கள்

எட்டாம் இடம் ஆயுள், துயரம், மரணம் முதலியவற்றைக் குறிப்பது என அறிவோம்.
மேஷம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் நிறைய செல்வம் உடையவனாக இருப்பினும், மிகுதியான துன்பத்தை வாழ்க்கை முழுவதும் சந்திக்க நேரிடுகின்றது. வேறு தேசத்திலேயே இவனுக்கு மரணம் ஏற்படுகிறது.
ரிஷபம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன்தரையில் ஊர்கின்ற அல்லது படுகின்ற ஜந்துக்கள், நாற்கால் பிராணிகள், துஷ்ட ஜனங்கள் மூலம் பெரும்பாலும் இரவு நேரத்தில் மரணம் எய்துகின்றான்.
மிதுனம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் தனக்கு இளையவனாலோ, மூலம் முதலிய ரோகத்தாலோ, கவனக் குறைவாலோ மரணம் எய்துகின்றான்.
கடகம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் புழுவினாலோ, பயங்கரமான விஷ ஜந்துக்கலாலோ, பகைவர்களினாலோ, நீர் நிலைகளில் இறங்கும் போதோ மரணம் ஏற்ப்படுகின்றது. இந்த மரணம் பெரும்பாலும் வேறு தேசத்திலேயே அமைகின்றது.
சிம்மம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் பெரும்பாலும் வனத்தில் சாவை சந்திக்கின்றான். அது திருடரின் மூலமாகவோ நாற்கால் பிராணிகளின் மூலமாகவோ, பாம்பினாலோ ஏற்படக் கூடும். குழந்டையினால் கூட இவனுக்கு சாவு நேரிடலாம்.
கன்னி எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் விளையாட்டினாலும், பித்த சம்பந்த மான நோய்களினாலும் மரணம் அடையலாம். தனது சொந்த குடும்பத்து பெண்ணாலேயே கூடக் கொல்லப்படலாம்.
துலாம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் மருந்தின் மூலம் அல்லது நாற்கால் பிராணிகளின் மூலம், பெரும்பாலும் இரவு நேரத்தில் மரணம் அடைகின்றான். உபவாசம் அல்லது உண்ணாவிரதம் இருப்பதினால் கூட உயர் பிரியக் கூடும். பிறரது வஞ்சனையினாலும் இந்த ஜாதகருக்கு சாவு நேரிடலாம்.
விருசிகம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் முகத்தில் உண்டான ரோகதினாலோ, புழுக்களால் உண்டான ரோகதினாலோ, தனது குலத்தில் உதித்ததனாலோ மரணம் உண்டாகின்றது.
தனுசு எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் தன்னுடைய இருப்பிடத்தில் தன்னுடன் இருப்பவனால் மரணம் அடையலாம். புளுக்களாலும், நாற்கால் உயிரினங்களாலும் மரணம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
மகரம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் நல்ல கல்விமான். மானம் மிக்கவன். வீரன். எல்லாக் கலைகளிலும் வல்லவன். ஆனாலும் பெண் பித்தன். ஆதலால் எதனாலும் இவனுக்கு சாவு வரக்கூடும் என்பதை இயல்பாகவே ஊகித்துக் கொள்ளலாம்.
கும்பம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் நெருப்பினாலோ, தீய பெண்களின் சேர்க்கையினாலோ, பகைவனாலோ புண்பட்டு சாக நேரிடலாம்.
மீனம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் பித்த ஜுரத்தினாலோ, வாயு ஜுரத்தினாலோ அல்லது ஆயுதத்தாலோ சாக நேரிடலாம்.

திருமண விதிகள்

1. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர, திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி, அதோடு அவன் பிற மாதரை விரும்ப மாட்டான்
2. சுக்கிரன் இருக்கும் வீட்டிற்கு அதிபதி ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைவுற்றால் மண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது.
3. ஏழாம் வீட்டிற்கு அதிபதி பாபிகள் வீட்டில் நின்றாலும், பாபிகளால் பார்க்கப்பட்டாலும் ஜாதகனுக்குத் திருமணம் தூர தேசத்தில் நடக்கும்.
4. நவாம்ச சக்கரத்தில் ஏழாம் வீட்டு அதிபன் சுபர்களுடைய வீட்டில் இருந்தால் உள்ளூர்ப் பெண்ணே மனைவியாக வருவாள்.
5. ஏழாம் அதிபது பாப கிரகமாகி , ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைந்து நின்றால், எத்தனை கிரகங்களின் பார்வை அங்கே விழுகிறதோ அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு ஏற்படும்.
6. ஏழாம் அதிபதி சுபக்கிரகங்களுடன் சேர்ந்தால் மனைவி நல்லவளாக இருப்பாள். அதுவே பாப கிரகங்களுடன் சேர்க்கை என்றால் மனைவி பொல்லாதவளாக இருப்பாள்.
7. ஏழிற்குரியவன் ராகுவுடன் சேர்ந்து ஆறு, எட்டு, பன்னிரெண்டில் இருந்தால் ஜாதகன் இழிவான பெண்ணை மணக்க நேரிடும்.
8. சுக்கிரனோ அல்லது ஏழிற்குரியவனோ ஜாதகத்தில் நீசமாகியிருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்வாக இருக்காது.
9. காதலுக்கு மென்மையான உணர்வும், நல்ல உள்ளமும் வேண்டும். அதற்குரிய கிரகங்கள் சுக்கிரனும், சந்திரனும் ஆகும். இந்த இரண்டு கிரகங்களும் வலுவாக இருந்தால் காதல் உண்டாகும்.
10. 7ல் புதனும், சுக்கிரனும் இருந்து, 11ல் சந்திரனும் இருந்து, குருவினுடைய பார்வை பெறுவதும் ஒருவகையில் ராஜ யோகமே. அந்தப் பெண்ணை மணந்து கொள்பவன் மகிழ்ச்சியில் திளைப்பான்.

தந்திரசாலிகள்

•சந்திரன்,சூரியன் இணைந்து, லக்கினத்திலோ அல்லது 2,5,9,11 ல் இருந்தால் ஜாதகர்கள் தந்திரசாலிகள்.
•சந்திரன், சூரியன் நேர் எதிர் பார்வையாக பார்த்துக் கொண்டாலும் , ஜாதகர்கள் தந்திரசாலிகள்.
•புதன் லக்கினத்திற்கு 5-ல் அல்லது 9-ல் அமர்ந்து இருந்து, குரு சேர்க்கை அல்லது குரு பார்வை பெற்றாலும் அந்த ஜாதகர்கள் தந்திரசாலிகள்.

நண்பனும் எதிரி

ஒருவர் ஜாதகத்தில் 7-ம் இடம் நண்பர்களை பற்றி அறியும் இடமாகும்.
அந்த 7-ம் இடத்து அதிபதியோடு கேது அல்லது இராகு கூடி எங்கிருந்தாலும், நண்பர்களும் எதிரியாக மாறி விடுவார்கள்.
7-ம் இடத்து அதிபதி, 6,8,12-க்குரியவனோடு சேர்ந்தாலும், நண்பன் எதிரியாவான். 7-க்குரியவன் நீச்சம் பெற்று இருந்தாலும் இதே நிலைதான்.
ஆதலால், இப்படிபட்ட ஜாதகர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பதும், தொழிலில் கூட்டு சேரும்போது எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள் !!

திருமண தடைகள் விலக :

திருமண தடைகள் நீங்கி சீக்கிரம் திருமணம் ஆக:ஸ்ரீ ஸ்தோத்ர சிந்தாமணி என்ற நூலிலிருந்து உங்களுக்காக இங்கு கொடுத்துள்ளோம். படித்து பயனடையுங்கள்...
ஜநகஸ்ய வச:விச்ருத்வா பாணீன் பாணிபி4: அஸ்ப்ருசன். |
சத்வாரஸ்தே சதஸ்ரூணாம் வஸிஷ்ட2ஸ்ய மதேஸ்தி2தா ||
ஜனகருடைய வார்த்தையை கேட்டு வஸிஷ்டர் உத்திரவு படி ராமன் முதலிய நான்கு பேரும் ஸீதை முதலிய நாலு பேருடைய கைகளைப்பிடித்தார்கள்.
இந்த ஸ்லோகத்தை திருமண தடையுள்ள பெண்கள் அல்லது அவர்களுடைய பெற்றோர்கள் தினமும் காலை ராம பூஜை செய்து 108 முறை ஜபித்தால் சீக்கிரமாக திருமணம் கைகூடும். அத்துடன் குரு மூலம் உபதேசம் பெற்று ராமாயணம் பால காண்டம் 73 ஆம் சர்க்கம் பூராவாக பாராயணம் செய்தால் உடனே பலன் உண்டாகும்.

ஜெபம் செய்யும் முறை

பிறர் காதில் விழும்படி ஜெபம் செய்வது வாசிகம்.
தனது காதில் விழும்படி செய்வது உபாசம்.
மனதில் மட்டும் சொல்வது மானசம்.
வாசிகம் ஒரு மடங்கு பயனளிக்கும்.
உபாசம் நூறு மடங்கு பயனளிக்கும்.
மானசம் ஆயிரம் மடங்கு பயனளிக்கும்.

வாழ்க்கை முறைகள்

1.மஞ்சள், நெய், உப்பு, புழுங்கலரிசி, மருந்து, பாக்கு, பால், மோர், வெல்லம் இவைகளுக்கு தோசம் இல்லை.
2.ஹோமப் புகை ஆயுளை வளர்க்கும் ஆனால் கர்ப்பிணி பெண்கள் மீது ஹோமப் புகை படக்கூடாது.
3.பிறருடைய ஆடை, செருப்பு, மாலை, எச்சில் பாத்திரம், உட்கார்ந்த பலகை, படுக்கை ஆகியவற்றை உபயோகித்தால் நோயுடன் பாவம் சேரும்.
4.நகத்தை பல்லினால் கடிப்பவரிடம் மூதேவி ஸ்திரமாக வாசம் செய்கிறாள்.
5.வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு எப்பொழுது குங்குமம் கொடுத்தாலும் முதல் நீங்கள் நெற்றியில் இட்டு கொண்டு பிறகு வந்தவர்களுக்கு கொடுக்கவும்.

Sunday, January 18, 2015

கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்.?

ஆகம விதிகளின் படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களிலும் வேத,ஆகம ,சிற்ப சாஸ்திர முறைப்படி,யந்திர ஸ்தாபனம் செய்து, தெய்வ உருவங்களை கருங்கல் சிலையாக பிரதிஷ்டித்து தினமும் முறையாக பூஜை செய்து வரும் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில்,நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வத்தை அனுபவ பூர்வமாக பலர் உணரலாம்.
ஆகவே தான்,பெரும்பாலும் சிலைகளை கருங்கல்லில் வடிவமைக்கிறார்கள். பெரும்பாலும் தெய்வ சிலைளை உலோகங்களில் செய்யாமல், கருங்கல்லால் சிலை செய்கிறார்கள்.அதற்கு முக்கியமான கரணம் உண்டு.
உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது.எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக் கொள்ளும் தன்மைஉடையது கருங்கல்.இதில் நீர்,நிலம் ,நெருப்பு ,காற்று,ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள் அடங்கியுள்ளது.இது வேறு எந்த உலோகத்திலும் வெளிபடுவது இல்லை.
நீர்:
கல்லில் நீர் உள்ளது.எனவே தன் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது.கல்லில் நீருற்று இருப்பதை காணலாம்.
நிலம்:
பஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலம் உள்ளது.எனவே கல்லில் செடி கொடிகள் வளர்கின்றன.
நெருப்பு:
கல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு.கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறதே சான்று.
காற்று :
கல்லில் காற்று உண்டு.எனவே தான் கல்லில் தேரை கூட உயிர் வாழ்கிறது.
ஆகாயம்:
ஆகாயத்தைப் போல் ,வெளியிலிருக்கும் சப்தத்தை தனக்கே ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு.எனவே தான் கருங்கல்லில் கட்டப்பட்ட'கோவில்களில் நாம் கூறுவதை எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது.திருவையாறு ஐயாரப்பன் கோவிலில் நாம் பேசுவது அப்படியே எதிரொலிப்பதை நாம் ஆனந்தமாக கேட்டு மகிழலாம்.
இக்காரணங்களினால்,இறை வடிவங்களை பஞ்ச பூதங்களின் (ஐம் பூதங்களின்) வடிவில் இருக்கும் கருங்கல்லில் வடிவமைத்து வழிபாடு செய்கிறோம்.
அபிஷேகம்,அர்ச்சனை,ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது ,ஒரு கோவிலின் பஞ்சபூதங்களின் தன்மை அதிகரிக்கின்றன. அக்கோவிலில் நாம் வணங்கும்போது , நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகி ,அதன் மூலம் நம் வாழ்வில் நல்ல பலன்கள் உண்டாகின்றன.

மதுவிற்கு அடிமை யார்?

சார ஜோதிட முறையில் 6ம் பாவத்தின் தொடர்பினைக் கொண்டு மதுவிற்கு ஜாதகர் அடிமையாக வாய்ப்புள்ளதா? இல்லையா? என்பதனை தெரிந்து கொள்ளலாம்.
6ம் பாவம் தனக்கு மிகவும் சாதகமான அதே நேரத்தில் லக்ன பாவத்திற்கு மிகவும் பாதகமான பாவங்களாகிய 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தால் ஜாதகர் மதுவை உட்கொள்ள ஆரம்பித்தால் மதுவிற்கு அடிமையாக வாய்ப்புகள் அதிகம்.
அதே நேரத்தில் தசா பத்திகளும் 6ம் பாவத்திற்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் கடுமையான விளைவுகளை ஜாதகர் சந்திப்பார். ராகு மற்றும் கேது போன்ற கிரகங்களும் 6,8,12 பாவத் தொடர்புகளை கொண்டு தசா புத்திகள் நடக்கும் பொழுதும் மதுவிற்கு அடிமையாக வாய்ப்புகள் உண்டு.

ஜோதிட குறிப்பு

பத்தில் பாம்பு இருந்தால் பணம் பறந்து வரும், 
குரு பார்க்க கோடி நன்மை, 
மேஷ ராகு மேன்மையை கொடுக்கும், 
துலா கேது தொல்லை தீர்க்கும், 
மறைந்த புதன் நிறைந்த கல்வி, 
அவிட்டம் , தவிட்டுப்பானையிலே பணம்,
குரு கொடுப்பின் சனி தடுப்பார்;
சனி கொடுப்பின் எவர் தடுப்பார்?,
எட்டில் சனி நீண்ட ஆயுள் .
உச்சனை உச்சனை பார்த்தால் பிச்சைக்காரன்,
குட்டி சுக்கிரன் குடும்பத்தை கெடுக்கும்.
ராகுவைப் போல் கொடுப்பாருமில்லை,
கேதுவைப் போல் கெடுப்பாருமில்லை......
கேட்டையில் பிறந்தவன் மனதில் கோட்டை கட்டி வாழ்வான்......
மகமகள் ஜகம் ஆள்வாள் (மகத்தில் பெண் பிறப்பது சிறப்பு)



சுக்கிரனும்,புதனும் 1,4,7,10 ல் இருந்தால் அனைத்து தோசங்களும் விலகுமாம்.
ஜாதகத்தில் லக்கினத்துக்கு 9 ஆம் இடத்துக்கு 9 ஆம் அதிபதி 9 ஆம் அதிபதி இருந்தால் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்கும் யோகம் மிக குறைவு.
கர்மத்தில் அதாவது லக்கினத்துக்கு 10 இல் இருக்கும் கிரகத்தின் திசை நடந்தால் மூன்று பெரிய தண்டம் உண்டு.

லக்கினத்துக்கு 5 ஆம் இடத்தை சனி பார்த்தால் பிறக்கும் முதல் மூன்று குழந்தை பெண்ணாக இருக்கும்.

குருவுடன் புதன் சேர நல்ல பாக்கியங்கள் அடைந்து உத்தமனாவான். சுக்கிரனுடன் புதன் சேர்ந்தால் பெரியோர்கள் நட்பு பெற்றவனாகவும், சிறந்த பாடகனாகவும் விளங்குவான். சனியோடு புதன் சேர பெரிய தனவானாவன். மேலும் எதிரி பயமோ விஷ பயமோ இல்லாமல் அதிக பொருள் சேர்ப்பான். இவர்கள் சேர்க்கை சுப ஸ்தானங்களில் இருக்க நன்மை பயக்கும்.
சூரியன், புதன் இவர்கள் சேர்ந்து 1,4,8 ஆகிய இடங்களில் நிற்க குருவும் 10ம் அதிபதியும் நோக்க அந்த ஜாதகன் பெரும் செல்வம் அடைந்து புகழடைவான். பூமி, வாகனம் அமைந்து ஏவலாட்கள் பணி செய்வர்.

குரு, சந்திரன், சுக்கிரன் ஆகியோர் 5ல் நிற்க அமையப் பெற்ற ஜாதகன் இவ்வுலகில் சிறப்புடன் வாழ்வான். யோகங்கள் உண்டு. குரு 5ல் தனித்து நிற்க புத்திர பாக்கியம் குறைவு. சந்திரன் 5ல் தனித்திருக்க பெண் குழந்தைகள் உண்டு.
பாமாயில்(பனை மர எண்ணெய்) சமையலில் கலந்து சாப்பிட்டால் துர்தேவதைகள் உடலுக்குள் புகுந்துவிடும்.தொடர்ந்து பாமாயில் பயன்படுத்தினால்(சாப்பிட்டால்) நாளாவட்டத்தில் நமது கை கால்களை முடக்கிவிடும்.
சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட்டால் நவக்கிரகங்கள் திருப்தியடையும்.இதனால், அஷ்டமச்சனி, கண்டகச்சனி, ஏழரைச்சனி முதலியவற்றின் தாக்கம் குறையும்.



திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்

1. முதல் விதி
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)
2. இரண்டாவது விதி
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
3. மூன்றாவது விதி
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.
4. நான்காவது விதி
புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.
…ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்
5. ஐந்தாவது விதி
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது
6. ஆறாவது விதி
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.
7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.
8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.
9. ஒன்பதாவது விதி
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.
10. பத்தாம் விதி.
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.
11. பதினொன்றாம் விதி
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.
- இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக்
குறியுங்கள்.