Pages

Wednesday, January 21, 2015

திருமண தடைகள் விலக :

திருமண தடைகள் நீங்கி சீக்கிரம் திருமணம் ஆக:ஸ்ரீ ஸ்தோத்ர சிந்தாமணி என்ற நூலிலிருந்து உங்களுக்காக இங்கு கொடுத்துள்ளோம். படித்து பயனடையுங்கள்...
ஜநகஸ்ய வச:விச்ருத்வா பாணீன் பாணிபி4: அஸ்ப்ருசன். |
சத்வாரஸ்தே சதஸ்ரூணாம் வஸிஷ்ட2ஸ்ய மதேஸ்தி2தா ||
ஜனகருடைய வார்த்தையை கேட்டு வஸிஷ்டர் உத்திரவு படி ராமன் முதலிய நான்கு பேரும் ஸீதை முதலிய நாலு பேருடைய கைகளைப்பிடித்தார்கள்.
இந்த ஸ்லோகத்தை திருமண தடையுள்ள பெண்கள் அல்லது அவர்களுடைய பெற்றோர்கள் தினமும் காலை ராம பூஜை செய்து 108 முறை ஜபித்தால் சீக்கிரமாக திருமணம் கைகூடும். அத்துடன் குரு மூலம் உபதேசம் பெற்று ராமாயணம் பால காண்டம் 73 ஆம் சர்க்கம் பூராவாக பாராயணம் செய்தால் உடனே பலன் உண்டாகும்.

No comments:

Post a Comment