Pages

Saturday, January 31, 2015

ஞானம் கிடைக்க எளிய வழி

1. இலக்கினத்திற்கு 12ல் குரு, கேது இருந்தாலும்,
2. இலக்கினத்திற்கு 12ல் இருக்கும் கேதுவை, குரு கண்டாலும்,
3. 12ல் இருக்கும் குருவை, 5,9க்குடையவர்கள் கண்டாலும்,
4. உச்சம்பெற்ற கிரகம் 12ல் இருந்து, அதை சுபக்கிரகம் கண்டாலும்,
5. 10ம் அதிபதி மூன்றுக்கு மேற்பட்டகிரகங்களுடன் கூடி கேந்திர, திரிகோணங்களில் இருக்கவும்,
6. 10ம் வீடு குருவிடையதாகவோ, அல்லது 10மிடத்தைக் குரு கண்டாலும்,
7. ஒன்பதாமிடத்தில் ஒருபலமான கிரகம் கேதுவுடன் இணைந்திருந்தாலும், அல்லது குருவீடு 12மிடமாகி, அதில் கேது இருக்க, குருவால் பார்க்கப்பட்டாலும்,
8. 5,9 ம் அதிபதிகள் நல்லநிலையில் இருக்க, 5,9,12 ஆகிய இடங்களில் ஏதிலாவது குரு_கேது இணைந்திருந்திருந்தாலோ அல்லது 12ம் இடம் மீனம், விருச்சிகமாகி, அதில் குரு_கேது இருந்தாலோ ஞானம் பெற்று, மோட்சயோகம் ஏற்படும். இந்த செய்தியை, ஒரு கதையோடு காண்போம்.
போதிமரத்தடியில் ஞானம் பெற்றபின், போதனைக்காக புத்தர், ஒரு ஊரில் இருந்து மறு ஊருக்கு செல்லும் போது, ஒரு கிராமத்தை கடந்து செல்லவேண்டும். அப்படி கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும், அக்கிராம மக்கள் ஒன்றுதிரண்டு புத்தரை தினமும் அடிக்கிறார்கள். இது தொடர்கதையாகவே நடந்து வந்தது. ஒருநாள் எல்லோரும் அடித்து முடித்தபின் அப்போதும் புத்தர் அந்த இடத்தைவிட்டு நகராமல் நிற்க, ’உன்னைத்தான் அடித்து முடித்துவிட்டோமே, இன்னும் ஏன் குனிந்துகொண்டு நிற்கிறீர்கள்” என்றனர். அப்போது புத்தர், “இன்னும் ஒரு அடி என்மேல் விழவேண்டியுள்ளது. அதனால்தான் நிற்கிறேன். உங்கலில் ஒருவர் இன்னும் என்னை அடிக்கவில்லை. அவரும் அடித்துவிட்டால் நானிங்கிருந்து போதனைக்காக மனநிம்மதியோடு, என்போதனையை செய்வேன். இன்னையென்றால், இன்று ஒருவருக்கு அவர் விரும்பியபடி என்னால் இருக்கமுடியவில்லையே, என்கிற வேதனை வந்துவிடும். அதனால், அந்த ஒருவரையும் வந்து அடித்துவிட்டுச் செல்ல சொல்லுங்கள்” என்று, அக்கிராம மக்களை வணங்கிக் கேட்டார். பின் “நான் இங்கேயே இருக்கிறேன். அவரை வந்து அடிக்கச் சொல்லூங்கள். எவ்வளவு நேரமானாலும் காத்திருக்கிறேன்”என்றார். அதே போல் காத்திருக்கிறார். பகல் மறைந்தது. இரவும் வந்தது. அப்போதும் அவர் வரவில்லை. இரவும் கழிந்தது. விடிந்ததும் விட்டது.
மீண்டும் எல்லா மக்களும் கூடினர். புத்தர் அங்கேயே இருப்பதைக் கண்டு வியந்து கேட்டனர். “அந்த ஒருவர் இன்னும் வரவில்லை. அவர்க்காகத்தான் காத்திருக்கிறேன்” என்றார். ஊர்மக்கள் அவரை ஒருவித பயம் கலந்த மரியாதையுடன் பார்த்துவிட்டு, அவரை அன்றைய பொழுது அடிக்காமல் ஊருக்குள் திரும்பிவிட்டனர், புத்தரும் அவர்களுடனே ஊருக்குள் வந்தார். ஊர்தலைவனைப் பார்த்து, “என்னை தினமும் அடிக்கவேண்டியவர்கள் அடிக்காமல்,ஊருக்குள் வந்துவிட்டார்கள். நீங்கள் உத்தரவு தந்து அவர்களை அடிக்கச் சொல்லுங்கள் “ என்றார். யாரும் எந்த பதிலும் சொல்லவில்லை. புத்தரோ அவர்களை தன்னை அடிக்க, வலிய கெஞ்சிக்கொண்டு இருந்தார். இவ்வளவு தூரம் தாழ்மையுடன் இருக்கும் புத்தரையா? நாம் துன்புறுத்துவத்தினோம். ஊர்மக்கள் தங்களின் செயலுக்காக மிகவும் வருந்தி, புத்தரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, சீடர்களாக மாறி, ஞானம் பெற்றனர்.

கோள்களிலிருந்து வருகின்ற காந்த அலைகள் மனிதனுடைய எந்தப்பகுதியோடு அதிகம் தொடர்புகொள்கின்றன.?

சூரியனிலிருந்து வருகின்ற அலை = எலும்புகளோடும்;
.
புதன் = தோல் மீதும்;
.
சுக்கிரன் = ஜீவ சக்தியோடும்;
.
சந்திரன் = இரத்த ஓட்டத்தோடும்;
.
செவ்வாய் = எலும்பிலுள்ள மஜ்ஜையோடும்;
.
குரு = மூளை செல்களோடும்;
.
சனி = நரம்புகளோடும்;
.
ராகு-கேது = ஓஜஸ்ஸோடும் தொடர்பு கொள்கின்றன.

சூரியன்

சூரிய குடும்பத்தின் முதன்மை கோளான சூரியனுக்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது. ஆதவன், அருணன், அரியமா, அருக்கன், அலரி, அழரவன், அனலி,அண்டயோனி, அரி, ஆதவன், ஆயிரஞ்சோதி, இருள்வலி,உதயம், ரவி, எல், எல்லை, எல்லோன், என்றுள், எழ்ப்ரியோன் , ஒளி, ஒளியோன் , கதிரவன், கனவி, கிரணமாலி, சண்டன், சவிதா, சான்றோன், சித்ரபானு, சுடரோன், சூரன், செங்கதிரோன் , சோதி, ஞாயிறு ,தபணன், தரணி, திவாகரன், தினகரன், தனமணி, பகலோன், பர்க்கன், பனிப்பகை, பானு, பகல், பங்கயன், பதங்கன், பரிகி, மார்த்தாண்டன், மித்திரன், விரிச்சிகன் , விரோசனன், விண்மனி, வெஞ்சுடர், வெயில், வேய்யோன் ரவிஆகியனவாகும்.
பால் : ஆண் கிரகம்.
நிறம் : வெண்மை
வடிவம் : சம உயரம்.
அவயம் : தலை.
உலோகம் : தாமிரம்.
ரத்தினம் : மாணிக்கம்.
மலர் : செந்தாமரை.
வாகனம் : மயில், தேர்.
சமித்து : எருக்கு.
சுவை : துவர்ப்பு.
பஞ்ச பூதம் : தேயு.
நாடி : பித்த நாடி.
திக்கு : கிழக்கு.
அதி தேவதை : சிவன்.
தன்மை : நிலையான கோள்.
குணம் : தாமஸ்ம்
ஆசன வடிவம் : வட்டம்.
நட்பு கோள்கள் : சந்திரன், வியாழன், செவ்வாய்.
பகை கோள்கள் : சுக்கிரன், சனி, ராகு, கேது.
சம கோள் : புதன்.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 1 மாதம்.
திசா காலம்: 6 ஆண்டுகள்.
நட்பு வீடு : விருச்சிகம், தனுசு, கடகம், மீனம்.
பகை வீடு : ரிஷபம், மகரம், கும்பம்.
ஆட்சி பெற்ற இடம் : சிம்மம்.
நீசம் பெற்ற இடம் : துலாம்.
உச்சம் பெற்ற இடம் : மேடம்.
மூலதிரி கோணம் : சிம்மம்.
உப கிரகம் : காலன்.
காரகத்துவம் : பித்ருகாரகன்.பிதா, ஆத்மா, சிராசு, தந்தம், வலது நேத்ரம், பித்தம், ஒருதலை நோவு போன்ற சிரசு ரோகங்கள், சித்தசுவாதீனம், சௌரியம், இரசவாதம், யானை, மலை, காடு, தபசு, பிரதாபம், தைரியம், இராஜசேவை, அரச உத்தியோகம், யாத்திரை, கிராம சஞ்சாரம், சைவானுஷ்டானம் இவைகளுக்கு எல்லாம் சூரியன்தான் காரகன்.
ஆன்மாவை பிரதிபலிப்பவன் சூரியன். ஓருவருக்கு ஆத்மபலம் அமைய வேண்டு மானால் சூரியபலம் ஜாதகத்தில் அமைய வேண்டும்.

சந்திரன்

சோதிடவியலில் இரண்டாவது கோளான சந்திரனுக்கு தமிழில் பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகிறது.
அமுதகிரணன், அம்புலி, அரி, அரிச் , அலவன், அல்லோன், ஆலோன், இந்து, இமகரன், இராக்கதிர், இவன், உடுபதி, உகுவின்வேந்தன், கலாநிதி, கலையினன், களங்கள், குபேரன், குமுதநண்பன், குரங்கி, சசி, சீதன், சுதாகரன், சோமன், தண்சுடர், கண்ணவன்,தாராபதி, தானவன், திங்கள், தெவ்வு, நிராசரன், நிசாபதி, நிலவு, பசுங்கதிர்,
மதி, மதியம், மனேந்தி, முயலின் கூடு, விது, வெண் கதிரோன், வேந்தன் ஆகியனவாகும்.
பால் : பெண் கிரகம்.
நிறம் : வெண்மை நிறம்.
வடிவம் : குள்ள மான உயரம்.
அவயம் : முகம், வயிறு.
உலோகம் : ஈயம்.
ரத்தினம் : முத்து.
மலர் : வெள்ளை அலரி.
வாகனம் : முத்து விமானம்.
சமித்து : முருக்கு.
சுவை : உப்பு.
பஞ்ச பூதம் : நீர்
நாடி : சிலேத்தும நாடி.
திக்கு : வடமேற்கு.
அதி தேவதை : பார்வதி.
தன்மை (சர - சத்திர - உபயம் ) : சரக் கோள்.
குணம் : வளர் பிறையில் சாந்தம், தேய்பிறையில் குரூரம் .
ஆசன வடிவம் : சதுரம்.
நட்புகோள்கள் : சூரியன், புதன்.
பகை கோள்கள் : இராகு, கேது.
சம கோள்கள் : செவ்வாய், வியாழன், சனி, சுக்கிரன்.
1 ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 2 1/4 (நாள் ) நட்சத்திர அளவு.
உரிய திசா காலம் : 10 ஆண்டுகள்.
நட்பு வீடு : மிதுனம், சிம்மம், கன்னி.
பகை வீடு : எல்லா வீடுகளும் நட்பு ( பகைவீடு கிடையாது).
ஆட்சி பெற்ற இடம் : கடகம்.
நீசம் பெற்ற இடம் : விருச்சிகம்.
உச்சம் பெற்ற இடம் : ரிஷபம்.
மூலதிரி கோணம் : ரிஷபம்.
உரிய உப கிரகம் : பரிவேடன்.
உரிய காரகத்துவம் : மாத்ரு காரகன் (தாய் ).
வஸ்திரம், நித்திரை, சித்த சுவாதீனமின்மை, சயரோகம், சீதளநோய்கள், இடக்கண், புருவம், குடை, உத்தியோகம், கீர்த்தி, முத்து, வெண்கலம், அரிசி, உப்பு, மச்சம், உழவன், சத்திரம், சாமரம் , பலம், எண்ணம், சிந்தனை இவைகளு க்கு எல்லம் சந்திரன் தான் காரகன்.

செவ்வாய்.

சோதிடவியலில் மூன்றாவது கோளான செவ்வாய்க்கு தமிழில் பல்வேறு பெயர்கள் வழங்கப் படுகிறது.
அரத்தன், அழலோன், அழல், அறிவன், ஆரல், உதிரன், குசன், குருதி, செந்தி, வண்ணன், சேய், நிலமகள், பௌமன், மங்கலன், வக்கிரன் ஆகியனவாகும்.
பால் : ஆண் கிரகம்.
நிறம் : சிவப்பு நிறம்.
வடிவம் : குள்ள மான உயரம்.
அவயம் : கை, தோள்.
உலோகம் : செம்பு.
ரத்தினம் : பவளம்.
மலர் : செண்பகம்.
வாகனம் : செம்போத்து, சேவல்.
சமித்து : கருங்காலி.
சுவை : உறைப்பு.
பஞ்ச பூதம் : பிருதிவி.
நாடி : பித்த நாடி.
திக்கு : தெற்கு.
அதி தேவதை : சுப்ரமண்யர்.
தன்மை (சர - சத்திர - உபயம் ) : சரக் கோள்.
குணம் : ராசஜம்.
ஆசன வடிவம் : முக்கோணம்.
நட்பு கோள்கள் : சூரியன், சந்திரன், வியாழன்.
பகை கோள்கள் : புதன், இராகு, கேது.
சம கோள்கள் : சனி, சுக்கிரன்.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 1 1/2 மாதங்கள்.
திசா காலம் : 7 ஆண்டுகள்.
நட்பு வீடு : சிம்மம், தனுசு, மீனம்.
பகை வீடு : மிதுனம், கன்னி.
ஆட்சி பெற்ற இடம் : மேஷம், விருச்சிகம்.
நீசம் பெற்ற இடம் : கடகம்.
உச்சம் பெற்ற இடம் : மகரம்.
மூலதிரி கோணம் : மேஷம்.
உரிய உப கிரகம் : தூமன்.
காரகத்துவம் : சகோதர காரகன்
பூமி, சுப்பிரமணியர், கோபம், குயவன், யுத்தம், இரத்தம், செம்பு, பவளம், அக்கினிபயம், கடன், உற்சாகம், அதிகாரம், அடுதி மரணம் இவைகளுகு எல்லாம் செவ்வாய் தான் காரகன்.

புதன்

சோதிடவியலில் நான்காவது கோளாய் கருதப் படும் புதனுக்கு பல்வேறு தமிழ் பெயர்கள் வழங்கப் படுகிறது.
அநூரு, அருணன், அனுவழி, கணக்கன், சௌமன், சலமன், சிந்தை, சூரியன், சௌமியன், துவன், தேர்ப்பாகன், நற்க்கொள், நிபுணன், பச்சை, பண்டதன், பாகன், புந்தி, புலவன், மதிமகன், மாலவன், மால்மேதை ஆகியனவாகும்.
பால் : அலி கிரகம்.
நிறம் : பச்சை நிறம்.
வடிவம் : உயரம்.
அவயம் : கழுத்து.
உலோகம் : பித்தளை.
ரத்தினம் : மரகதம்.
மலர் : வெண்காந்தள்.
வாகனம் : குதிரை
சமித்து : நாயுருவி.
சுவை : உவர்ப்பு.
பஞ்ச பூதம் : வாயு.
நாடி : பித்த நாடி.
திக்கு : வடக்கு.
அதி தேவதை : விஷ்ணு.
தன்மை (சர - சத்திர - உபயம் ) : உபயக் கோள்.
குணம் : தாமசம்.
ஆசன வடிவம் : அம்பு.

நட்பு கோள்கள் : சூரியன், சுக்கிரன்.
பகை கோள் : சந்திரன்.
சம கோள்கள் : செவ்வாய், வியாழன்,சனி, இராகு, கேது.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 1 மாதம்.
திசா காலம் : 17 ஆண்டுகள்.
நட்பு வீடு : ரிஷபம், சிம்மம், துலாம்.
பகை வீடு : கடகம், விருச்சிகம்.
ஆட்சி பெற்ற இடம் : மிதுனம், கன்னி.
நீசம் பெற்ற இடம் : மீனம்.
உச்சம் பெற்ற இடம் : கன்னி.
மூலதிரி கோணம் : கன்னி.
உப கிரகம் : அர்த்தப்பிரகரணன்.
காரகத்துவம் : மாதுல காரகன்.
கல்வி, ஞானம், தனாதிபதி, தூதுவன், சங்கீதம், வாக்கு சாதுர்யம், ஜோதிடம், பிரசங்கம், சிற்பத்தொழில், வியாபாரங்கள், புத்திரக் குறைவு, வாத நோய், விஷரோகம் இவைகளுக்கு புதன் காரகன்.
கல்வியில் சிறந்து விளங்க ஜாதகத்தில் வித்யாகரன் எனும் புதன் பலம்பெறுவது சிறப்பு.

குரு

சோதிடவியலில் ஐந்தாவது கோளான வியாழனுக்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது.
அந்தணன்,அமைச்சன்,அரசன்,ஆசான்,ஆண்டனப்பான் ,குரு, சிகண்டிசன், சீவன், சுருகுறா, தாரபதி,தெய்வமந்திரி,நற்கோள் , பிரகற்பதி, வீதகன், பொன், மறையோன், வேதன், வேந்தன் ஆகியனவாகும்.
பால் : ஆண் கிரகம்.
நிறம் : மஞ்சள் நிறம் (பொன்னிறம்).
இனம் : பிராமண இனம்.
வடிவம் : உயரம்.
அவயம் : இருதயம்.
உலோகம் : பொன்.
ரத்தினம் : புஷ்பராகம்.
மலர் : முல்லை.
வாகனம் : யானை.
சமித்து : அரசு.
சுவை : தித்திப்பு.
தான்யம் : கொத்துக்கடலை.
பஞ்ச பூதம் : தேயு.
நாடி : வாத நாடி.
திக்கு : வடகிழக்கு( ஈசான்யம் ). அதி தேவதை : பிரம்மா, தட்சிணாமூர்த்தி.
தன்மை (சர - சத்திர - உபயம் ) : உபயக்கோள்.
குணம் : சாந்தம்.
ஆசன வடிவம் : செவ்வகம்.
நட்பு கோள்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்.
பகை கோள்கள் : புதன், சுக்கிரன்.
சம கோள்கள் : சனி, ராகு, கேது.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 1 வருடம்.
திசா புத்திக் காலம் : 16 ஆண்டுகள்.
நட்பு வீடு : மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம்.
பகை வீடு : ரிஷபம்,மிதுனம், துலாம்.
ஆட்சி பெற்ற இடம் : தனுசு, மீனம்.
நீசம் பெற்ற இடம் : மகரம்.
உச்சம் பெற்ற இடம் : கடகம்.
மூலதிரிகோணம் : தனுசு.
உப கிரகம் : எமகண்டன்.
காரகத்துவம் : புத்திர காரகன்.
புத்திரர், பிரம்மா, ஞானம், யோகாப்பியாசம், அச்சாரியத்துவம், அட்டமா சித்திகள், அரச சேவை, இராச சன்மானம், சொர்ணம், தேன், கடலை, புத்தியுக்தி, இவைகளுக்கு வியாழன் காரகன்.
சுப கோளான குரு ஒருவரின் ஜாதகத்தில்
வலுவாக் இருப்பது சுப பலனை தரும்.

சுக்கிரன்.

சோதிடவியலில் ஆறாவது கோளான சுக்கிரனுக்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப்படுகிறது.
அசுரர்மந்திரி, அநாவிலன், ஆசான், உசனன், ஒள்ளியோன், கவி, காப்பியன், சல்லியன், சிதன், சீதகன், சுங்கன், தயித்திய மந்திரி,நற்கோள், பளிங்கு, பார்கவன்,பிரசுரன், பிருகு, புகர், புயல், மழைக்கோள், வெள்ளி ஆகியனவாகும்.
பால் : பெண் கிரகம்.
நிறம் : வெண்மை.
இனம் : பிராமண இனம்.
வடிவம் : சம உயரம்.
அவயம் : மர்மஸ்தானம்.
உலோகம் : வெள்ளி.
ரத்தினம் : வைரம்.
மலர் : வெண்தாமரை.
வாகனம் : குதிரை, மாடு.
சமித்து : அத்தி.
சுவை : புளிப்பு.
தான்யம் : மொச்சை.
பஞ்ச பூதம் : அப்பு. (நீர் )
நாடி : சிலேத்தும நாடி.
திக்கு : தென்கிழக்கு.
அதி தேவதை : இலக்குமி, வருணன்.
தன்மை (சர - சத்திர - உபயம் ) : ஸ்திரக் கோள்.
குணம் : ரஜசம்.
ஆசன வடிவம் : ஐங்கோணம்.

நட்பு கோள்கள் : புதன், சனி, இராகு, கேது.
பகை கோள்கள் : சூரியன், சந்திரன்.
சம கோள்கள் : செவ்வாய்,குரு.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 1 மாதம்.
திசா புத்திக் காலம் : 20ஆண்டுகள்.
நட்பு வீடு : மேடம், விருச்சிகம், மிதுனம், மகரம், கும்பம்.
பகை வீடு : கடகம், சிம்மம், தனுசு.
ஆட்சி பெற்ற இடம் : ரிஷபம், துலாம்.
நீசம் பெற்ற இடம் : கன்னி.
உச்சம் பெற்ற இடம் : மீனம்.
மூலதிரி கோணம் : துலாம்.
உப கிரகம் : இந்திரதனுசு.
காரகத்துவம் : களத்திர காரகன்.
சங்கீதம், பரத நாட்டியம் போன்றவற்றில் பிரியம் ஏற்படுதல், ஆசை, ஸ்ரீ தேவதை உபசனை, அழகு, இளமை, இலக்குமி கடாட்சம், வாகனம், சுகம், போகம், ஆகாய சமுத்திர யாத்திரைகள், இவைகளுக்கு எல்லாம் சுக்கிரன் தான் காரகன்.

சனி.

சோதிடவியலில் ஏழாவது கோளான சனிக்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது.
அந்தன், கதிர்மகன், கரியவன், காரி, கீழ்மகன், சுந்தில், சவுரி, சாவகன், தமணியன், நீலன், நோய்முகன், பங்கு, மந்தன், முடவன், முதுமகன், மேற்கோள் ஆகியனவாகும்.
பால் : அலிக் கிரகம்.
நிறம் : கருமை.
வடிவம் : குள்ள உயரம்.
அவயம் : பாதம், கணுக்கால்.
உலோகம் : இரும்பு.
உரிய ரத்தினம் : நீலம்.
ஆடை : கறுப்பு.
மலர் : கருங்குவளை.
வாகனம் : காகம்,
சமித்து : வன்னி.
சுவை : கைப்பு.
தான்யம் : எள்.
பஞ்ச பூதம் : ஆகாயம்.
நாடி : வாத நாடி.
திக்கு : மேற்கு.
அதி தேவதை : யமன், சாஸ்தா.
தன்மை (சர - சத்திர - உபயம் ) : உபயக் கோள்.
குணம் : தாமசம்.
ஆசன வடிவம் : வில்.
நட்பு கோள்கள் : புதன், சசுக்கிரன், இராகு, கேது.
பகை கோள்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்.
சம கோள்: குரு.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 2 1/2 வருடம்.
திசா புத்திக் காலம் : 19 ஆண்டுகள்.
நட்பு வீடு : ரிஷபம், மிதுனம்.
பகை வீடு : கடகம், சிம்மம், விருச்சிகம்.
ஆட்சி பெற்ற இடம் : மகரம்,கும்பம்.
நீசம் பெற்ற இடம் : மேடம்.
உச்சம் பெற்ற இடம் : துலாம்.
மூலதிரி கோணம் : கும்பம்.
உப கிரகம் : குளிகன்.
காரகத்துவம் : ஆயுள் காரகன்.
ஜீவன, இரும்பு, சேவகர் விருத்தி, களவு, ஆத்ம இம்சை, சிறைப்படல், ராஜதண்டனை, வீண்வார்த்தை, சித்தப்பிரம்மை, தீர்க்க ஆயுள், மயக்க போஜனம், அவயக் குறைவு, மரவேலை, ஆளடிமை இவைகளுக்கு எல்லாம் சனி தான் காரகன்.

இராகு

சோதிடவியலில் எட்டாவது கோளான இராகுவிற்க்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது.
கரும்பாம்பு , தமம், மதாப்பகை, மதாயுணி ஆகியனவாகும்.
பால் : பெண் கிரகம்.
நிறம் : கருமை.
வடிவம் : உயரம்.
அவயம் : தொடை,பாதம், கணுக்கால்.
உலோகம் : கருங்கல்.
ரத்தினம் : கோமேதகம்.
ஆடை : கறுப்புடன் சித்திரங்கள் சேர்ந்தது.
மலர் : மந்தாரை.
வாகனம் : ஆடு.
சமித்து : அறுகு.
சுவை : கைப்பு.
தான்யம் : உளுந்து.
பஞ்ச பூதம் : ஆகாயம்.
நாடி : பித்த நாடி.
திக்கு : தென் மேற்கு.
அதி தேவதை : காளி,துர்க்கை,
தன்மை (சர - சத்திர - உபயம் ) : சரக் கோள்.
குணம் : தாமசம்.
ஆசன வடிவம் : கொடி.
நட்பு கோள்கள் : சனி, சுக்கிரன்.
பகை கோள்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்.
சம கோள்கள் : புதன்,குரு.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 1 1/2 வருடம்.
திசா காலம் : 18 ஆண்டுகள்.
நட்பு வீடு : மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம்.
பகை வீடு : கடகம், சிம்மம்.
ஆட்சி பெற்ற இடம் : கன்னி.
நீசம் பெற்ற இடம் : ரிசபம்.
உச்சம் பெற்ற இடம் : விருச்சிகம்.
மூலதிரிகோணம் : கும்பம்.
உப கிரகம் : வியதீபாதன்.
காரகத்துவம் : பிதாமஹன். (பிதுர் பாட்டன் )
சேவகத்தொழில், பரதேசவாசம், சாதிக்கு விரோதமான தொழில், விகட வினோத வித்தைகள், குஷ்டம், நாள்பட்ட ரோகம், களவு, விஷ்பயம், அங்கவீனம், வெகு பேச்சு, ஜல கண்டம், வெட்டுக்காயம், சிரைப்படல் இவைகளுக்கு எல்லாம் இராகு தான் காரகன்.

கேது.

சோதிடவியலில் ஒன்பதாவது கோளான கேதுவிற்க்கு தமிழில் பல்வேறு பெயர்கள் வழங்கப் படுகிறது.
கதிர்ப்பகை, சிகி, செம்பாம்பு, மதிப்பகை ஆகியனவாகும்.
பால் : அலிக் கிரகம்.
நிறம் : சிவப்பு.
வடிவம் : உயரம்.
அவயம் : கை, தோள்.
உலோகம் : துருக்கல்.
ரத்தினம் : வைடூரியம்.
மலர் : செவ்வல்லி.
வாகனம் : சிம்மம்.
சமித்து : தர்ப்பை.
சுவை : உறைப்பு.
தான்யம் : கோதுமை.
பஞ்ச பூதம் : ஆகாயம்.
நாடி : பித்த நாடி.
திக்கு : வட மேற்கு.
அதி தேவதை : விநாயகர், சண்டிகேச்வரர்.
தன்மை (சர - சத்திர - உபயம் ) : சரக் கோள்.
குணம் : தாமசம்.
ஆசன வடிவம் : மூச்சில்.
நட்பு கோள்கள் : சனி, சசுக்கிரன்.
பகை கோள்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்.
சம கோள்கள் : புதன்,குரு.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 1 1/2 வருடம்.
திசா காலம் : 7 ஆண்டுகள்.
நட்பு வீடு : மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம்.
பகை வீடு : கடகம், சிம்மம்.
ஆட்சி பெற்ற இடம் : மீனம்.
நீசம் பெற்ற இடம் : சிம்மம்.
உச்சம் பெற்ற இடம் : கும்பம்.
மூலதிரி கோணம் : சிம்மம்.
உப கிரகம் : தூமகேது.
காரகத்துவம் : மதாமஹன்.
மாதுர் பாட்டன் வம்சம், கபடத்தொழில், கீழ்குலத்தொழில், பாபத்தொழில், பரதேச ஜீவனம், அக்னிகண்டம் இவைகளுக்கு எல்லாம் கேது தான் காரகன்.

கிரக வக்கிரம்

நன்மையா ? தீமையா ?
சிலர் வக்கிர கிரகம் உக்கிர பலம் பெறுகிறது என்று பதிவுகளை இடுகின்றனர் , உண்மையில் வக்கிரம் பெற்ற கிரகம் தனது காரக, பாவக ரீதியான பலன்களை தடை, தாமதம் ஏற்படுத்தி திருப்தியற்ற நிலையிலே தருகிறது.
எந்த கிரகம் வக்கிரம் பெறுகிறதோ அதன் காரக, பாவக அதிபத்திய பலன்கள் ஜாதருக்கு கிடைப்பதில் உறுதியற்ற தன்மையை தருகிறது.

$யார் நகைச்சுவை உணர்வுடன் பேசுவார் ?

$யார் நகைச்சுவை உணர்வுடன் பேசுவார் ?
2ம் பாவகத்தில் புதன், 2ம் அதிபதி புதன் சாரம், வலுபெற்றால்.
$யார் சிடு சிடு என பேசுவார் ?
2ம் பாவகத்தில் சூரியன், செவ்வாய் , ராகு இருந்து, 2ம் அதிபதி வலு குறைதல்
$யார் அர்த்தபுஷ்டியுடன் பேசுவார் ?
2ம் பாவகத்தில் குரு, புதன் , இலக்கின அதிபதி, இருந்து 2ம் அதிபதி வலு வலுபெற்றால்.
$யார் திக்கி திக்கி பேசுவார் ?
2ம் அதிபதி, புதன் இருவரும் 6,8, 12ல் மறைந்து, வலு குறைந்தால் (நீசம் , அஸ்தமனம் ) மாந்தி 2ம் பாவகத்தில்
$யார் அடுத்தவரை மயக்கும்படி பேசுவார் ?
2ம் பாவகத்தில் சுக்கிரன் , இலக்கின அதிபதி, இருந்து 2ம் அதிபதி வலு வலுபெற்றால்.
$யார் தர்புகழ்சிக்காக பேசுவார் ?
2ம் பாவகத்தில் புதன் , இலக்கின அதிபதி, இருந்து 2ம் அதிபதி வலு வலுபெற்றால்.
இலக்கின அதிபதி வலு குறைதல்,
$யார் அதிகம் பேசிக்கொண்டே இருப்பார் ?
2ம் பாவகத்தில் புதன் , சந்திரன் இருந்து 2ம் அதிபதி புதன் சாரம், வலுபெற்றால்.
$யார் குறைவாக பேசுவார் ?
2ம் பாவகத்தில் குரு , இலக்கின அதிபதி, இருந்து 2ம் அதிபதி வலு வலுபெற்றால்.

Wednesday, January 21, 2015

எட்டாம் பாவ பலன்கள்

எட்டாம் இடம் ஆயுள், துயரம், மரணம் முதலியவற்றைக் குறிப்பது என அறிவோம்.
மேஷம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் நிறைய செல்வம் உடையவனாக இருப்பினும், மிகுதியான துன்பத்தை வாழ்க்கை முழுவதும் சந்திக்க நேரிடுகின்றது. வேறு தேசத்திலேயே இவனுக்கு மரணம் ஏற்படுகிறது.
ரிஷபம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன்தரையில் ஊர்கின்ற அல்லது படுகின்ற ஜந்துக்கள், நாற்கால் பிராணிகள், துஷ்ட ஜனங்கள் மூலம் பெரும்பாலும் இரவு நேரத்தில் மரணம் எய்துகின்றான்.
மிதுனம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் தனக்கு இளையவனாலோ, மூலம் முதலிய ரோகத்தாலோ, கவனக் குறைவாலோ மரணம் எய்துகின்றான்.
கடகம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் புழுவினாலோ, பயங்கரமான விஷ ஜந்துக்கலாலோ, பகைவர்களினாலோ, நீர் நிலைகளில் இறங்கும் போதோ மரணம் ஏற்ப்படுகின்றது. இந்த மரணம் பெரும்பாலும் வேறு தேசத்திலேயே அமைகின்றது.
சிம்மம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் பெரும்பாலும் வனத்தில் சாவை சந்திக்கின்றான். அது திருடரின் மூலமாகவோ நாற்கால் பிராணிகளின் மூலமாகவோ, பாம்பினாலோ ஏற்படக் கூடும். குழந்டையினால் கூட இவனுக்கு சாவு நேரிடலாம்.
கன்னி எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் விளையாட்டினாலும், பித்த சம்பந்த மான நோய்களினாலும் மரணம் அடையலாம். தனது சொந்த குடும்பத்து பெண்ணாலேயே கூடக் கொல்லப்படலாம்.
துலாம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் மருந்தின் மூலம் அல்லது நாற்கால் பிராணிகளின் மூலம், பெரும்பாலும் இரவு நேரத்தில் மரணம் அடைகின்றான். உபவாசம் அல்லது உண்ணாவிரதம் இருப்பதினால் கூட உயர் பிரியக் கூடும். பிறரது வஞ்சனையினாலும் இந்த ஜாதகருக்கு சாவு நேரிடலாம்.
விருசிகம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் முகத்தில் உண்டான ரோகதினாலோ, புழுக்களால் உண்டான ரோகதினாலோ, தனது குலத்தில் உதித்ததனாலோ மரணம் உண்டாகின்றது.
தனுசு எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் தன்னுடைய இருப்பிடத்தில் தன்னுடன் இருப்பவனால் மரணம் அடையலாம். புளுக்களாலும், நாற்கால் உயிரினங்களாலும் மரணம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
மகரம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் நல்ல கல்விமான். மானம் மிக்கவன். வீரன். எல்லாக் கலைகளிலும் வல்லவன். ஆனாலும் பெண் பித்தன். ஆதலால் எதனாலும் இவனுக்கு சாவு வரக்கூடும் என்பதை இயல்பாகவே ஊகித்துக் கொள்ளலாம்.
கும்பம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் நெருப்பினாலோ, தீய பெண்களின் சேர்க்கையினாலோ, பகைவனாலோ புண்பட்டு சாக நேரிடலாம்.
மீனம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் பித்த ஜுரத்தினாலோ, வாயு ஜுரத்தினாலோ அல்லது ஆயுதத்தாலோ சாக நேரிடலாம்.

திருமண விதிகள்

1. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர, திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி, அதோடு அவன் பிற மாதரை விரும்ப மாட்டான்
2. சுக்கிரன் இருக்கும் வீட்டிற்கு அதிபதி ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைவுற்றால் மண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது.
3. ஏழாம் வீட்டிற்கு அதிபதி பாபிகள் வீட்டில் நின்றாலும், பாபிகளால் பார்க்கப்பட்டாலும் ஜாதகனுக்குத் திருமணம் தூர தேசத்தில் நடக்கும்.
4. நவாம்ச சக்கரத்தில் ஏழாம் வீட்டு அதிபன் சுபர்களுடைய வீட்டில் இருந்தால் உள்ளூர்ப் பெண்ணே மனைவியாக வருவாள்.
5. ஏழாம் அதிபது பாப கிரகமாகி , ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைந்து நின்றால், எத்தனை கிரகங்களின் பார்வை அங்கே விழுகிறதோ அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு ஏற்படும்.
6. ஏழாம் அதிபதி சுபக்கிரகங்களுடன் சேர்ந்தால் மனைவி நல்லவளாக இருப்பாள். அதுவே பாப கிரகங்களுடன் சேர்க்கை என்றால் மனைவி பொல்லாதவளாக இருப்பாள்.
7. ஏழிற்குரியவன் ராகுவுடன் சேர்ந்து ஆறு, எட்டு, பன்னிரெண்டில் இருந்தால் ஜாதகன் இழிவான பெண்ணை மணக்க நேரிடும்.
8. சுக்கிரனோ அல்லது ஏழிற்குரியவனோ ஜாதகத்தில் நீசமாகியிருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்வாக இருக்காது.
9. காதலுக்கு மென்மையான உணர்வும், நல்ல உள்ளமும் வேண்டும். அதற்குரிய கிரகங்கள் சுக்கிரனும், சந்திரனும் ஆகும். இந்த இரண்டு கிரகங்களும் வலுவாக இருந்தால் காதல் உண்டாகும்.
10. 7ல் புதனும், சுக்கிரனும் இருந்து, 11ல் சந்திரனும் இருந்து, குருவினுடைய பார்வை பெறுவதும் ஒருவகையில் ராஜ யோகமே. அந்தப் பெண்ணை மணந்து கொள்பவன் மகிழ்ச்சியில் திளைப்பான்.

தந்திரசாலிகள்

•சந்திரன்,சூரியன் இணைந்து, லக்கினத்திலோ அல்லது 2,5,9,11 ல் இருந்தால் ஜாதகர்கள் தந்திரசாலிகள்.
•சந்திரன், சூரியன் நேர் எதிர் பார்வையாக பார்த்துக் கொண்டாலும் , ஜாதகர்கள் தந்திரசாலிகள்.
•புதன் லக்கினத்திற்கு 5-ல் அல்லது 9-ல் அமர்ந்து இருந்து, குரு சேர்க்கை அல்லது குரு பார்வை பெற்றாலும் அந்த ஜாதகர்கள் தந்திரசாலிகள்.

நண்பனும் எதிரி

ஒருவர் ஜாதகத்தில் 7-ம் இடம் நண்பர்களை பற்றி அறியும் இடமாகும்.
அந்த 7-ம் இடத்து அதிபதியோடு கேது அல்லது இராகு கூடி எங்கிருந்தாலும், நண்பர்களும் எதிரியாக மாறி விடுவார்கள்.
7-ம் இடத்து அதிபதி, 6,8,12-க்குரியவனோடு சேர்ந்தாலும், நண்பன் எதிரியாவான். 7-க்குரியவன் நீச்சம் பெற்று இருந்தாலும் இதே நிலைதான்.
ஆதலால், இப்படிபட்ட ஜாதகர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பதும், தொழிலில் கூட்டு சேரும்போது எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள் !!

திருமண தடைகள் விலக :

திருமண தடைகள் நீங்கி சீக்கிரம் திருமணம் ஆக:ஸ்ரீ ஸ்தோத்ர சிந்தாமணி என்ற நூலிலிருந்து உங்களுக்காக இங்கு கொடுத்துள்ளோம். படித்து பயனடையுங்கள்...
ஜநகஸ்ய வச:விச்ருத்வா பாணீன் பாணிபி4: அஸ்ப்ருசன். |
சத்வாரஸ்தே சதஸ்ரூணாம் வஸிஷ்ட2ஸ்ய மதேஸ்தி2தா ||
ஜனகருடைய வார்த்தையை கேட்டு வஸிஷ்டர் உத்திரவு படி ராமன் முதலிய நான்கு பேரும் ஸீதை முதலிய நாலு பேருடைய கைகளைப்பிடித்தார்கள்.
இந்த ஸ்லோகத்தை திருமண தடையுள்ள பெண்கள் அல்லது அவர்களுடைய பெற்றோர்கள் தினமும் காலை ராம பூஜை செய்து 108 முறை ஜபித்தால் சீக்கிரமாக திருமணம் கைகூடும். அத்துடன் குரு மூலம் உபதேசம் பெற்று ராமாயணம் பால காண்டம் 73 ஆம் சர்க்கம் பூராவாக பாராயணம் செய்தால் உடனே பலன் உண்டாகும்.

ஜெபம் செய்யும் முறை

பிறர் காதில் விழும்படி ஜெபம் செய்வது வாசிகம்.
தனது காதில் விழும்படி செய்வது உபாசம்.
மனதில் மட்டும் சொல்வது மானசம்.
வாசிகம் ஒரு மடங்கு பயனளிக்கும்.
உபாசம் நூறு மடங்கு பயனளிக்கும்.
மானசம் ஆயிரம் மடங்கு பயனளிக்கும்.

வாழ்க்கை முறைகள்

1.மஞ்சள், நெய், உப்பு, புழுங்கலரிசி, மருந்து, பாக்கு, பால், மோர், வெல்லம் இவைகளுக்கு தோசம் இல்லை.
2.ஹோமப் புகை ஆயுளை வளர்க்கும் ஆனால் கர்ப்பிணி பெண்கள் மீது ஹோமப் புகை படக்கூடாது.
3.பிறருடைய ஆடை, செருப்பு, மாலை, எச்சில் பாத்திரம், உட்கார்ந்த பலகை, படுக்கை ஆகியவற்றை உபயோகித்தால் நோயுடன் பாவம் சேரும்.
4.நகத்தை பல்லினால் கடிப்பவரிடம் மூதேவி ஸ்திரமாக வாசம் செய்கிறாள்.
5.வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு எப்பொழுது குங்குமம் கொடுத்தாலும் முதல் நீங்கள் நெற்றியில் இட்டு கொண்டு பிறகு வந்தவர்களுக்கு கொடுக்கவும்.

Sunday, January 18, 2015

கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்.?

ஆகம விதிகளின் படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களிலும் வேத,ஆகம ,சிற்ப சாஸ்திர முறைப்படி,யந்திர ஸ்தாபனம் செய்து, தெய்வ உருவங்களை கருங்கல் சிலையாக பிரதிஷ்டித்து தினமும் முறையாக பூஜை செய்து வரும் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில்,நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வத்தை அனுபவ பூர்வமாக பலர் உணரலாம்.
ஆகவே தான்,பெரும்பாலும் சிலைகளை கருங்கல்லில் வடிவமைக்கிறார்கள். பெரும்பாலும் தெய்வ சிலைளை உலோகங்களில் செய்யாமல், கருங்கல்லால் சிலை செய்கிறார்கள்.அதற்கு முக்கியமான கரணம் உண்டு.
உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது.எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக் கொள்ளும் தன்மைஉடையது கருங்கல்.இதில் நீர்,நிலம் ,நெருப்பு ,காற்று,ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள் அடங்கியுள்ளது.இது வேறு எந்த உலோகத்திலும் வெளிபடுவது இல்லை.
நீர்:
கல்லில் நீர் உள்ளது.எனவே தன் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது.கல்லில் நீருற்று இருப்பதை காணலாம்.
நிலம்:
பஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலம் உள்ளது.எனவே கல்லில் செடி கொடிகள் வளர்கின்றன.
நெருப்பு:
கல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு.கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறதே சான்று.
காற்று :
கல்லில் காற்று உண்டு.எனவே தான் கல்லில் தேரை கூட உயிர் வாழ்கிறது.
ஆகாயம்:
ஆகாயத்தைப் போல் ,வெளியிலிருக்கும் சப்தத்தை தனக்கே ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு.எனவே தான் கருங்கல்லில் கட்டப்பட்ட'கோவில்களில் நாம் கூறுவதை எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது.திருவையாறு ஐயாரப்பன் கோவிலில் நாம் பேசுவது அப்படியே எதிரொலிப்பதை நாம் ஆனந்தமாக கேட்டு மகிழலாம்.
இக்காரணங்களினால்,இறை வடிவங்களை பஞ்ச பூதங்களின் (ஐம் பூதங்களின்) வடிவில் இருக்கும் கருங்கல்லில் வடிவமைத்து வழிபாடு செய்கிறோம்.
அபிஷேகம்,அர்ச்சனை,ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது ,ஒரு கோவிலின் பஞ்சபூதங்களின் தன்மை அதிகரிக்கின்றன. அக்கோவிலில் நாம் வணங்கும்போது , நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகி ,அதன் மூலம் நம் வாழ்வில் நல்ல பலன்கள் உண்டாகின்றன.

மதுவிற்கு அடிமை யார்?

சார ஜோதிட முறையில் 6ம் பாவத்தின் தொடர்பினைக் கொண்டு மதுவிற்கு ஜாதகர் அடிமையாக வாய்ப்புள்ளதா? இல்லையா? என்பதனை தெரிந்து கொள்ளலாம்.
6ம் பாவம் தனக்கு மிகவும் சாதகமான அதே நேரத்தில் லக்ன பாவத்திற்கு மிகவும் பாதகமான பாவங்களாகிய 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தால் ஜாதகர் மதுவை உட்கொள்ள ஆரம்பித்தால் மதுவிற்கு அடிமையாக வாய்ப்புகள் அதிகம்.
அதே நேரத்தில் தசா பத்திகளும் 6ம் பாவத்திற்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் கடுமையான விளைவுகளை ஜாதகர் சந்திப்பார். ராகு மற்றும் கேது போன்ற கிரகங்களும் 6,8,12 பாவத் தொடர்புகளை கொண்டு தசா புத்திகள் நடக்கும் பொழுதும் மதுவிற்கு அடிமையாக வாய்ப்புகள் உண்டு.

ஜோதிட குறிப்பு

பத்தில் பாம்பு இருந்தால் பணம் பறந்து வரும், 
குரு பார்க்க கோடி நன்மை, 
மேஷ ராகு மேன்மையை கொடுக்கும், 
துலா கேது தொல்லை தீர்க்கும், 
மறைந்த புதன் நிறைந்த கல்வி, 
அவிட்டம் , தவிட்டுப்பானையிலே பணம்,
குரு கொடுப்பின் சனி தடுப்பார்;
சனி கொடுப்பின் எவர் தடுப்பார்?,
எட்டில் சனி நீண்ட ஆயுள் .
உச்சனை உச்சனை பார்த்தால் பிச்சைக்காரன்,
குட்டி சுக்கிரன் குடும்பத்தை கெடுக்கும்.
ராகுவைப் போல் கொடுப்பாருமில்லை,
கேதுவைப் போல் கெடுப்பாருமில்லை......
கேட்டையில் பிறந்தவன் மனதில் கோட்டை கட்டி வாழ்வான்......
மகமகள் ஜகம் ஆள்வாள் (மகத்தில் பெண் பிறப்பது சிறப்பு)



சுக்கிரனும்,புதனும் 1,4,7,10 ல் இருந்தால் அனைத்து தோசங்களும் விலகுமாம்.
ஜாதகத்தில் லக்கினத்துக்கு 9 ஆம் இடத்துக்கு 9 ஆம் அதிபதி 9 ஆம் அதிபதி இருந்தால் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்கும் யோகம் மிக குறைவு.
கர்மத்தில் அதாவது லக்கினத்துக்கு 10 இல் இருக்கும் கிரகத்தின் திசை நடந்தால் மூன்று பெரிய தண்டம் உண்டு.

லக்கினத்துக்கு 5 ஆம் இடத்தை சனி பார்த்தால் பிறக்கும் முதல் மூன்று குழந்தை பெண்ணாக இருக்கும்.

குருவுடன் புதன் சேர நல்ல பாக்கியங்கள் அடைந்து உத்தமனாவான். சுக்கிரனுடன் புதன் சேர்ந்தால் பெரியோர்கள் நட்பு பெற்றவனாகவும், சிறந்த பாடகனாகவும் விளங்குவான். சனியோடு புதன் சேர பெரிய தனவானாவன். மேலும் எதிரி பயமோ விஷ பயமோ இல்லாமல் அதிக பொருள் சேர்ப்பான். இவர்கள் சேர்க்கை சுப ஸ்தானங்களில் இருக்க நன்மை பயக்கும்.
சூரியன், புதன் இவர்கள் சேர்ந்து 1,4,8 ஆகிய இடங்களில் நிற்க குருவும் 10ம் அதிபதியும் நோக்க அந்த ஜாதகன் பெரும் செல்வம் அடைந்து புகழடைவான். பூமி, வாகனம் அமைந்து ஏவலாட்கள் பணி செய்வர்.

குரு, சந்திரன், சுக்கிரன் ஆகியோர் 5ல் நிற்க அமையப் பெற்ற ஜாதகன் இவ்வுலகில் சிறப்புடன் வாழ்வான். யோகங்கள் உண்டு. குரு 5ல் தனித்து நிற்க புத்திர பாக்கியம் குறைவு. சந்திரன் 5ல் தனித்திருக்க பெண் குழந்தைகள் உண்டு.
பாமாயில்(பனை மர எண்ணெய்) சமையலில் கலந்து சாப்பிட்டால் துர்தேவதைகள் உடலுக்குள் புகுந்துவிடும்.தொடர்ந்து பாமாயில் பயன்படுத்தினால்(சாப்பிட்டால்) நாளாவட்டத்தில் நமது கை கால்களை முடக்கிவிடும்.
சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட்டால் நவக்கிரகங்கள் திருப்தியடையும்.இதனால், அஷ்டமச்சனி, கண்டகச்சனி, ஏழரைச்சனி முதலியவற்றின் தாக்கம் குறையும்.



திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்

1. முதல் விதி
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)
2. இரண்டாவது விதி
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
3. மூன்றாவது விதி
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.
4. நான்காவது விதி
புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.
…ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்
5. ஐந்தாவது விதி
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது
6. ஆறாவது விதி
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.
7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.
8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.
9. ஒன்பதாவது விதி
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.
10. பத்தாம் விதி.
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.
11. பதினொன்றாம் விதி
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.
- இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக்
குறியுங்கள்.

ஒருவர் அறிவாளியா என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?

புத்திசாலியாக ஒருவர் இருக்க வேண்டுமென்றால் புத்தி ஸ்தானம் என்று சொல்லப்படும் 5ம் இடம் பலம் பெற்று இருக்க வேண்டும். ஐந்தாமிடத்து அதிபர் ஆட்சியாகவோ அல்லது உச்சமாகவோ இருந்தால் புத்திசாலியாக இருப்பார் என்பதை முடிவு செய்து கொள்ளலாம். ஏன் ஐந்தாமிடத்தை புத்திர ஸ்தானமாக வைத்தார்கள் என்பதையும் பார்ப்போம். பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால் தான் ஒருவர் இந்த பிறவியில் புத்திசாலியாக இருக்க முடியும். ஐந்தாமிடத்து அதிபர் ஆட்சி உச்சம் பெற்றால் புத்திசாலியாக இருப்பார். குரு, சுக்கிரன், புதன், சந்திரன், ஆகிய நான்கு கிரகங்களில் ஏதேனும் ஒரு கிரகமோ அல்லது பல கிரகங்களோ பலம் பெற்று ஐந்தாமிடத்தில் இருந்தால் புத்திசாலியாக இருப்பார்கள். மேற்கண்ட கிரகங்கள் வேறு இடங்களில் இருந்து ஐந்தாமிடத்தைப் பார்த்தாலும் புத்திசாலியாகவே இருப்பார்கள்.
ஒருசிலர் என்னிடம் கேட்க விரும்புவார்கள். ஐயா, என்னுடைய ஜாதகத்தில் சூரியன், செவ்வாய், சனி போன்ற பாவகிரகங்களில் ஏதேனும் ஒரு கிரகம் 5ல் பலம் பெற்றால் நான் புத்திசாலியாக இருப்பேனா என்று கேட்க நினைப்பார்கள். உங்கள் ஜாதகத்தில் 5ல் சுபகிரகங்கள் பலம் பெற்றாலும், பாபகிரகங்கள் பலம் பெற்றாலும் நீங்கள் புத்திசாலியாகவே இருப்பீர்கள். ஆனாலும் பாபகிரகங்களுக்கென்று ஒரு குணம் இருக்கிறது அல்லவா! அதன் குணத்தை அது கண்டிப்பாக காட்டியேத் தீரும். தீயகிரகங்கள் பலம் பெற்று ஐந்தில் நின்றால், அப்படிப்பட்ட ஜாதகர் தன்னுடைய புத்திசாலித்தனத்தை நல்ல விஷயங்களுக்கோ அல்லது ஆக்க பூர்வமான விஷயங்களுக்கோ பயன்படுத்த மாட்டார். கிரிமினல் விஷயங்களுக்கோ அல்லது அடாவடியான விஷயங்களுக்கோ மட்டுமே பயன்படுத்துவார். உலகிற்கு தீமையை விளைவிக்கும் காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள்.
ஐந்தாமிடம் பலம் பெற்றாலும், சந்திரன் பலம் பெற்றாலும் ஆக இந்த இரண்டு கிரகங்கள் பலம் பெற்றவர்கள் நல்ல ஞாபக சக்தி உள்ளவர்களாக இருப்பார்கள். புதன் கல்விக்கு அதிபதி, குரு அறிவுக்கு அதிபதி, சந்திரன் கற்பனைக்கு அதிபதி, ஆக ஒருவருடைய ஜாதகத்தில் புதன், குரு, சந்திரன் பலம் பெற்றாலும், ஆக இந்த இரண்டு கிரகங்கள் பலம் பெற்றால் மிகவும் அறிவாளியாகவும், புத்திசாலியாகவும் சாதிக்க முடியாத அத்தனை விஷயங்களையும் சாதிக்க முடிந்தவராகவும் இருப்பார்.

Wednesday, January 14, 2015

வீட்டைக் கட்டிப்பார்

இன்றையப் பதிவிலும், அடுத்தப் பதிலும் வீடுகள் கட்டுவதற்கான சிலவிதிகளைக் காண்போம்.
1“அரசே கேள் வாகனத் தானாதி நின்ற ராசி 
அன்போடு நல்லோர் வீடாகிப் பணபரம், கேந்திரமாய் உறைசெறியுச் சனித்த
சிறு குடிசையும் மாட அரங்கம்”
ஒருவரின் ஜாதகத்தில் இலக்கினத்துக்கு நான்கிற்குடைய கிரகம் எந்த வீட்டிலமர்ந்துள்ளதோ, அந்த வீடு சுபக்கிரக வீடாக இருக்கவேண்டும். அந்த வீடு, நான்காம் வீட்டுக்கு கேந்திரமாகவோ (1,4,7,10), பண்பரஸ்தானமாகவோ (2,6, 8, 11) இருக்கவேண்டும். அப்படியிருந்தால்,ஜாதகரின் குடிசைவீடு, வருங்கலத்தில் மாடமாளிகையாய் உயர்ந்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சிலவிதிகளாக,
1. இலக்கினாதிபதியும், நான்காம் அதிபதியும் கேந்திர, திரிகோணங்களில் அமர, இவர்களை சுபக்கிரகங்கள் காண, அலங்காரமிக்க மாளிகை கட்டுவார்.
2. இலக்கினாதிபதி 1,2,5,9,11,-ல் இருந்து, அவ்வீடே ஆட்சி, உச்ச, நட்பு வீடாக இருந்து, குரு போன்ற சுபக்கிரகங்கள் காண, ஜாதகர் குடியிருக்கும் மஆளிகைக்கு நான்கு திசைகளிலும் வாசல் இருக்கும்.
3. இலக்கினாதிபதி கேந்திர, திரிகோணங்களில் இருந்து, நான்காம் வீட்டில் சுபக்கிரகமிருந்தால், மாளிகை வீடு கட்டுவார்.
4. நான்காமதிபதி குரு, சுக்கிரனுடன் கூடினாலும், அல்லது இவர்களுக்குள் தொடர்பு ஏற்பட்டாலும், மாளிகை கட்டி வாழ்வார்.
5. “”………….நாலோனும் உச்சம் தன்னில் நேயவே
பெருமாடக்கூடமுண்டாம்”
என்றும் கூறப்பட்டுள்ளது. இன்னும் சிலவிதிகளை அடுத்தப்பதிவுகளில் காணலாம்.

திருமண நட்சத்திர பொருத்தம் - பெண்களுக்கு

.எண்
பெண்நட்சத்திரத்திற்கு
பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
1.
அஸ்வனி
பரணிதிருவாதிரைபூசம்பூராடம்திருவோணம்,சதயம்
2.
பரணி
புனர்பூசம்உத்திராடம்ரேவதிஅஸ்வனி
3.
கார்த்திகை 1 ம்பாதம்
சதயம்
4.
கார்த்திகை 2, 3, 4ம் பாதங்கள்
சதயம்
5.
ரோகிணி
மிருகசீரிஷம் 1, 2, புனர்பூசம் 4, உத்திரம் 1,பூரட்டாதிபரணி
6.
மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்
உத்திரம் 1, உத்திராடம் 2, 3, 4, திருவோணம்,சதயம்அஸ்வனிரோகிணி
7.
மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள்
திருவாதிரைஉத்திரம்அஸ்தம்மூலம்,உத்திராடம் 2, 3, 4, சதயம்பரணி
8.
திருவாதிரை
பூரம்பூராடம்பரணிமிருகசீரிஷம் 3, 4
9.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்
அவிட்டம் 3, 4, உத்திரட்டாதிமிருகசீரிஷம் 3, 4
10.
புனர்பூசம் 4 ம்பாதம்
பூசம்சுவாதிஅவிட்டம் 1, 2, உத்திரட்டாதி,மிருகசீரிஷம்
11.
பூசம்
ஆயில்யம்அஸ்தம்சுவாதிவிசாகம் 1-2-3,பூரட்டாதி 4, ரேவதிதிருவாதிரைபுனர்பூசம்
12.
ஆயில்யம்
சித்திரைஅவிட்டம் 1, 2
13.
மகம்
சதயம்
14.
பூரம்
உத்திரம் 1, பூரட்டாதி 1, 2, 3, அஸ்வனி
15.
உத்திரம் 1 ம்பாதம்
சுவாதிஅனுஷம்பரணிரோகிணிபூசம்பூரம்
16.
உத்திரம் 2, 3, 4 ம்பாதங்கள்
அனுஷம்பூராடம்ரோகிணிபூசம்பூரம்
17.
அஸ்தம்
பூராடம்உத்திராடம் 1, ரேவதிமிருகசீரிஷம்பூரம்,ஆயில்யம்கார்த்திகை 2, 3, 4
18.
சித்திரை 1, 2 ம்பாதங்கள்
கார்த்திகை 2, 3, 4, மகம்
19.
சித்திரை 3, 4 ம்பாதங்கள்
கார்த்திகை 1, மகம்
20.
சுவாதி
பூராடம்அவிட்டம் 1, 2, பரணிமிருகசீரிஷம் 3, 4,பூரம்புனர்பூசம்
21.
விசாகம் 1, 2, 3 ம்பாதங்கள்
அவிட்டம் 1, 2, சித்திரை 3, 4
22.
விசாகம் 4 ம்பாதம்
அவிட்டம்சதயம்சித்திரை
23.
அனுஷம்
கேட்டைசதயம்பூரட்டாதி 1, 2, 3, ரோகிணி,புனர்பூசம்ஆயில்யம்அஸ்தம்சுவாதி
24.
கேட்டை
கார்த்திகை 2, 3, 4
25.
மூலம்
உத்திரட்டாதிபூரம்சுவாதிபூராடம்
26.
பூராடம்
பூரட்டாதிபுனர்பூசம் 1, 2, 3, உத்திரம்ரேவதி
27.
உத்திராடம் 1 ம்பாதம்
உத்திரட்டாதிதிருவாதிரைபூரம்பூராடம்,அஸ்தம்சுவாதி
28.
உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள்
உத்திரட்டாதிபரணிபூசம்அஸ்தம்அனுஷம்,பூராடம்
29.
திருவோணம்
அவிட்டம் 1, 2, பூரட்டாதி 4, பரணிபுனர்பூசம் 4,உத்திரம் 2, 3, 4, சித்திரைகேட்டைபூராடம்
30.
அவிட்டம் 1, 2 ம்பாதங்கள்
கார்த்திகை 1, மூலம்
31.
அவிட்டம் 3, 4 ம்பாதங்கள்
கார்த்திகைசதயம்மகம்மூலம்
32.
சதயம்
சித்திரை 3, 4, விசாகம்அவிட்டம் 3, 4
33.
பூரட்டாதி 1, 2, 3ம் பாதங்கள்
மிருகசீரிஷம் 1, 2, சுவாதிஅனுஷம்
34.
பூரட்டாதி 4 ம்பாதம்
உத்திரட்டாதிமிருகசீரிஷம்அனுஷம்
35.
உத்திரட்டாதி
ரேவதிதிருவாதிரைரோகிணிபுனர்பூசம் 1, 2, 3,அஸ்தம்திருவோணம்பூரட்டாதி
36.
ரேவதி
மிருகசீரிஷம்,2, 3, உத்திரம் 2, 3, 4,அனுஷம்உத்திரட் புனர்பூசம் 1, டாதி