Pages

Sunday, May 17, 2015

பஞ்சமாதிபதி தசாபலன்


பஞ்சமாதிபதி தசையில் பஞ்சமாதிபதி பலவானானால் புத்திர பிராப்தியும் பந்து ஜனங்களின் ஆதரவும் மந்திரித்துவமும் வெகுமான சுக போஜனங்களும் அன்னதானமும் நல்ல கீர்த்தியும் நல்ல ஜனங்களின் ஆதரவும் உண்டாகும்

ஐந்தாமாதிபதி பலமில்லாதவனானால் அவன் தசையில் புத்திர நாசம் புத்திப்பிரமை லஞ்சம் பெறுதல் வயிர்ருந்நோய் இராஜகோபம் சுயபல நாசம் இவைகளை அடைவான் 

Sunday, May 10, 2015

வலம் புரிச்சங்கு பூஜை சிறப்பும், பலனும்..!

1.ஒரு வீட்டில் இச்சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ëந்து இருக்கும்.
2. கடலில் உள்ள ஒரு வகை நத்தையின் கழிவு மூலம் ஓடு போன்று உருவாகி வருவதே சங்கு என்றாலும் குபேரன் அருளைப் பெற்றுத் தருவது.
3. வலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்தால் நமக்கு பிரம்மகத்திதோஷம் இருப்பின் போய்விடும்.
இதையே தர்ம சாஸ்திரம். ``சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோ ஸ்ரீ! அங்க லஷணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாயுதம் தாகத்'' என்று விளக்குகிறது.
சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும்.
கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்கு அபிஷேகத்தில் நடுவில் வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருப்பார்.
4. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சங்கு நாதத்தால் ஆழ்வார்கள் பக்திப் பரவசம் அடைவதை, பேதாண்டப் பெதுவி என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றனர்.
5. வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும்.
6. செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்து விடும்.
7. அதிகக் கடன் வாங்கியவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்கும், அர்ச்சனை செய்து வர கண்ணுக்குத் தெரியாமல் கடன் தீரும். 16-வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றிட கடன் தீரும்.
8.சுத்தமான உண்மையான வலம்புரிச்சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஓடிவிடும்.
9. ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறுகிறோம்.
10. பிறந்த குழந்தைக்கு ஜுரம் வந்தால் சங்கில் நீர்விட்டு உத்ராட்சம் இட்டு அது ஊறிய நீரை மட்டும் ஊட்டி விட ஜுரம், தோஷங்கள் அனைத்தும் விலகும்.
11. பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி போட்டு அதில் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வருவதால் உணவுக்குப்பஞ்சமே வராது

இராஜ யோகம்

தருமகருமாதிபதிகளான இலக்கினத்திற்கு 9,10க்கு உடையவர்கள் இருவரும் சேர்ந்து நல்ல பாவங்களிலிருந்தால் இராஜ யோகம் ஏற்படும்
பேரி சங்க நாதங்களோடு வெண்மை பொருந்திய குடையும்  குதிரை யானை மக்கடசேனை முதலியவைகளையும் பாடகர்களால்  ஸ்தோத்திரம் பண்ணப்  பெறுதலையும் ஆனந்தவித காணிக்கைகளைக் கையிலேந்திய சிர்ரரசரகளால் துதிக்கப் படுதலையும் உடைய அசர சிரேஷ்டனாதல்     இராஜயோக பலனாகும்

இலக்கினாதிபதி தசாபலன்

இலக்கினாதிபதி பலமாயிருந்தால் அவர் தசையில் ஜாதகன் பாலசந்திரனைப் போல் தினம் தினம் விருத்தியடைவான் எவ்வாறெனில் அவன் தன்னைச் சார்ந்தவர்களுக்குத் தலைவனாகவும் சுகமனுபவிப்பநிமாகவும் நல்ல ஆரோக்கியமுள்ள சுக தேகியாகவும் நல்ல தேஜஸ் உடையவனாகவும் மேன்மேலும் அபிவிருத்தியடைபவனாகவும் இருப்பான்

இலக்கினாதிபதி சத்துரு மூட நீச க்ஷேத்திரத்திலோ 6,8,12லோ இருந்தால் அவர்தசையில் பிறரால் நிர்ப்பந்தத்தையும் அஞ்ஞாத வாசத்தையடைவதோடு பயம் வியாதி சுவாதீனமின்மை ஒருவர் வேலைக்குத் தான் ஆசையுறல் இடமாறல் ஆபத்துக்குள்ளாதல் ஆகிய அவஸ்தைகளைப்  பெறுவான் 

பன்னிரு பாவ தசாபலங்கள் நிர்ணயம்

மானிடரது நிர்ணயிக்கப்பட்ட பரம ஆயுள் 120 வருடங்களாகும்  அவர்தம்  கர்மவினையாலும் சுருமங்களையும் கீழ்க்கண்டவாறு நவக்கிரங்களுக்கு பிரித்துக் கொடுக்குப் பட்டுள்ளது
சூரியன்  6வருடம்
சந்திரன்  10 வருடம்
செவ்வாய்  7வருடம்
ராகு 18வருடம்
குரு 16 வருடம்
சனி 19வருடம்
புதன் 17வருடம்
சுக்கிரன் 20வருடம்
கேது 7வருடம்
ஆக மொத்தம் 120 வருடம் 

கல்வி

இன்றைய காலகட்டத்தில் ஒருவருக்கு தன்னுடைய ஜீவனத்தித்ற்கு , சுக போக எதிர்கால வாழ்விற்கு, சமூகத்தில் மதிப்புடன் வாழ மற்றும் நல்ல குணநலன்களை பெற்று வாழ்கையில் திருப்புமுனையாக அமைத்து கொடுப்பது இந்த கல்வி ஆகும். எனவே தற்போது இதற்கு முக்கியத்துவம் கொடுத்து தங்களுடைய குழந்தைகளை முன்னணியில் உள்ள கல்வி நிறுவனத்தில் பல லட்சம் செலவழித்து படிக்க வைக்கின்றனர். ஆனால் இதெல்லாம் எதற்கு? தன் குழந்தைகளை DOCTOR,ENGGINEER,PROFESSIONAL மற்றும் இதர துறைகளில் படித்தவுடன் CAMPUS INTERVIEW ல் வேலை கிடைக்கவேண்டும் என்றா நோக்கத்தில் தான். ஆனால் இதெல்லாம் நடக்கிறதா? பலருக்கு தோல்வி ஏற்படுகிறது இதற்கு காரணம் பல உண்டு அவற்றில் ஒன்று ஜாதகத்தை ஆராயாமல் ஜாதகரின் திறமைகளை அறியாமல் செய்யப்படும் முடிவும் ஒன்று ஆகும்.
எனவே PRE KG சேர்க்கும் முதலே குழந்தைகளின் ஜாதகத்தினை ஆராய்ந்து அவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பது, நல்ல நாள் பார்த்து ஆரம்ப கல்வியை கல்வி நிறுவனத்தில் ஆரம்பிப்பது, இதெல்லாம் கணக்கில் கொண்டு பெற்றோர்கள் செயல் படும் போது குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வாய்ப்புகள் ஏற்படுகிறது
அதற்கு ஜாதகத்தில் ஆராயவேண்டியவைகள் :
• 2 மிடம் ஜாதகரின் ஆரம்ப கல்வியை குறிக்கிறது
• 4 மிடம் பட்டப்படிப்பையும்
• 8 மிடம் தொழில் நுணுக்கக் கல்வியையும்
• 9 மிடம் உயர் கல்வி – PG COURSE
• 12 மிடம் ஆராய்ச்சி கல்வி
• 5 மிடம் திறமை,புத்திசாலித்தனம், ஞாபக சக்தி ஆகியவை குறிக்கும்
• மேலும் கல்வி காரகன் புதனின் நிலை, மனோ காரகன் சந்திரனையும், மூளை காரகன் குருவையும் ஆராய்ந்து பலன் உரைக்க வேண்டும்
• புதன் நீசமாக கூடாது. அந்த நீசா புதனை பாவ கிரகத்தின் பார்வை இருக்க கூடாது. 2ல் நீசக்கிரகம் இருக்ககூடாது
• புதன் நீசமானாலும் சில கிரக அமைப்பினால் கல்வியை ஏற்படுத்தி கொடுத்து விடும் உதாரணம் : மீனத்தில் புதன் நீசமடைந்து அங்கு குரு பகவான் ஆட்சி பெறும் போது நீசபங்கம் ஆகி புதன் பலம் பெற்று கல்வியை அளித்து விடுவார்.
• புதன் 2 மிடத்தில் இருப்பது கல்வியை ஏற்படுத்தி கொடுத்து விடும் என்பது விதி. புதனுடன் சூரியன் அல்லது குரு சேர்ந்து இருந்தால் நல்ல கல்வியை ஏற்படுத்தி விடும். ஆனால் தீய கிரகங்கள் தொடர்பு கல்வியை கெடுத்து விடும் அல்லது தடங்கல்களை ஏற்படுத்திவிடும்.
• எந்த லக்கனமாக இருந்தாலும் புதன் கன்னியில் இருந்தால் கல்வியில் உயர்வு உண்டு ஆனால் பாவக சக்கரத்தில் மாறாமல் இருந்து பரலின் எண்ணிக்கை 24 க்கு குறையாமல் இருந்து பாவ கிரகத்தின் தொடர்ப்பு இல்லாமல் இருக்கவேண்டும்
• பாவகர்த்தாரி தோஷத்தில் புதன் இருக்ககூடாது
• காரகன் பலமாக இருந்தாலும் காரகத்தின் வீடுகள் கெட்டுவிடக்கூடாது.
எனவே இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு ஜாதகரின் கல்வி நிலையை ஆராய்ந்து தேர்ந்தெடுக்கும் கல்வி நல்ல சிறப்பையும் அதற்கு உண்டான உத்தியோகம் / தொழிலை ஏற்படுத்தி கொடுத்து அவர்கள் வாழ்க்கை சுமை இல்லாமல் சுமூகமாக சிறக்க வழிவகை செய்யும்

Sunday, May 3, 2015

கோசார குரு பலன்

கோசார குரு இலக்கணத்திற்கு
1,2,4,5,6,9,10,11,இல் வரும் காலம் உடல் நலம் செல்வம் புகழ் வெற்றி வாய்ப்புகள் எண்ணங்கள் நிறைவேறும் வாய்ப்பு பகை வெல்லும் நிலை கல்வியில் தேர்ச்சி புகழ் இவை ஏற்படும் 3,8,12இல் வரும் காலம் அனைவருடனும் சண்டை சச்சரவு பகைவரால் தொல்லை வியாதிகள் நோக்கமில்லா  செயல்பாடுகள் இவை ஏற்படும்